உங்க இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க... இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை குடிச்சா போதுமாம்..!

Diabetes In Tamil: இன்றைய காலகட்டத்தில் பெரும்பலான மக்கள் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுடியது அவசியம்.

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு, நீரிழிவு நோயை நிர்வகிப்பது மிகவும் கடினமான பணியாகத் தோன்றலாம். சரி, நீங்களும் உயர் இரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உங்கள் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் உங்கள் இன்சுலின் அளவை இயற்கையாக நிர்வகிக்கவும் உதவும் எளிய பானங்களை முயற்சி செய்யலாம்.

Diabetes: Homemade Drink Can Help Manage Sugar Levels In Tamil

எல்லாவற்றிற்கும் வீட்டிலேயே சில இயற்கை வைத்தியங்களை நாம் முயற்சி செய்கிறோம். அந்த வகையில், உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வீட்டில் தயாரிக்கப்படும் சில எளிய பானங்கள் உள்ளன. அவற்றை முயற்சி செய்து உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் உடல் எடையையும் சரியாக நிர்வகியுங்கள்.

ஏன் இந்த வீட்டு ஜூஸ்?
பாகற்காய் (கரேலா) மற்றும் நாவல்பழம் (ஜாமூன்) ஆகிய இரண்டும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இவற்றை கொண்டு வீட்டில் தயாரிக்கப்படும் ஜூஸ் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், செரிமான கோளாறுகள், தோல் பிரச்சினைகள், நச்சுகளை நீக்குதல் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும், இந்த ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இது ஏன் சர்க்கரை நோய்க்கு நல்லது?
பாகற்காய் மற்றும் நாவல் பழம் இரண்டிலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாவர கலவைகள் நிறைந்துள்ளன. அவை அதிக சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. ஏனென்றால், பாகற்காயில் பாலிபெப்டைட்-பி உள்ளது. இது இன்சுலின் ஏற்றத்தாழ்வை சரிசெய்யும் மற்றும் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதோடு, தோல் பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.

மறுபுறம், நாவல் பழத்தில் இயற்கையாகவே வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பயோட்டின் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பாகற்காய் சாறுடன் இணைவதால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமின்றி, இந்த சாற்றை தொடர்ந்து குடிப்பது தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், அமைப்பின் நச்சுத்தன்மையை நீக்குவதற்கும் உதவும். இருப்பினும், உங்களுக்கு அதிகரித்த சர்க்கரை இருந்தால், வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த பானத்தை உங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

பாகற்காய் மற்றும் நாவல் பழம் ஜூஸ் செய்வது எப்படி?
ஒரு பாகற்காயை இரண்டாக நறுக்கி அரை பாகற்காய் எடுத்துக்கொள்ளுங்கள். 5-6 நாவல் பழங்களை எடுத்து விதைங்களை நீக்கி ஒன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அதை வடிகட்டி 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்து குடியுங்கள். இந்த பானத்தின் சுவையை அதிகரிக்க, சில புதிய கொத்தமல்லி இலைகள் மற்றும் ½ தேக்கரண்டி துருவிய இஞ்சியையும் சேர்த்து குடிக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, April 22, 2023, 19:40 [IST]
Desktop Bottom Promotion