Chennai Rains: நெஞ்சு சளியை வெளியேற்றணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த கசாயத்தை குடிங்க...

Chennai Rains: கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி கொட்டும் மழையின் காரணமாக நிறைய பேர் சளி, இருமலால் அவதிப்படுவதுண்டு. உங்களுக்கும், உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் மழை பெய்தாலே சளி பிடித்துக் கொள்ளுமா? அப்படியானால் இந்த மாதிரியான காலநிலையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கசாயங்களை தயாரித்து குடித்து வந்தால், உடலுக்கு இதமாக இருப்பதோடு, சளி, இருமல் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

ஆயுர்வேதத்தில் பெரும்பாலும் சளி, இருமலுக்கு கசாயங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்கள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டதால், அவற்றைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிக்கும் போது, சளி இருமலில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

Chennai Rains Ayurvedic Kashayam Recommended by Nutritionist to Relieve Cough

ஊட்டச்சத்து நிபுணரான ஸ்வேதா ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை கரைத்து வெளியேற்ற உதவும் ஒரு அற்புதமான கசாயம் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த கசாயத்தை சளி பிடித்திருக்கும் வேளையில் தயாரித்து குடித்து வந்தால், ஒரு நல்ல நிவாரணத்தைப் பெறலாம். இப்போது அந்த கசாயம் என்னவென்றும், அந்த கசாயத்தை எப்படி தயாரிப்பது மற்றும் அதை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்தும் காண்போம்.

கசாயம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

* கிராம்பு - 2
* மிளகு - 2
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* ப்ளாக் சால்ட் - 1 சிட்டிகை
* சுக்கு பவுடர் - 1 சிட்டிகை
* ஓமம் - 1 சிட்டிகை

Take a Poll

தயாரிக்கும் முறை:

* இந்த கசாயம் தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் கிராம்பு, மிளகு, ப்ளாக் சால்ட், சுக்கு பவுடர், ஓமம் மற்றும் வெல்லத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதித்து, பாதியாக சுண்டியதும், அதை இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.

கசாயத்தின் நன்மைகள்:

* இந்த கசாயத்தை குடிப்பதன் மூலம், நெஞ்சு சளி கரைந்து வெளியேறும்.
* மூக்கடைப்பு, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* நுரையீரல் ஆரோக்கியம் மேம்பட்டு, சுவாசிப்பது எளிதாகும்.
* செரிமானம் மேம்படும்
* நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.

எனவே நண்பர்களே! கடுமையான இருமல் மற்றும் நெஞ்சு சளியால் அவதிப்பட்டு வந்தால், இந்த கசாயத்தை தினமும் தயாரித்து குடித்து வாருங்கள். இப்படி குடிப்பதன் மூலம் ஒரு நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion