Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
இந்த 5 அறிகுறியும் மாரடைப்பு வருவதற்கு 1/2 மணிநேரத்துக்கு முன்னாடி தெரியுமாம்.. எச்சரிக்கும் இதய நோய் நிபுணர்!
Heart Attack Symptoms In Tamil: சமீப காலமாக மாரடைப்பால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். மாரடைப்பு என்பது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது வரக்கூடியது. மாரடைப்பு ஏற்பட்டால் அதற்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படும் போது உயிரிழக்க நேரிடுகிறது.
முக்கியமாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படப்போகிறது என்றால் அதற்கு முன்னரே ஒருசில அறிகுறிகளை நமது உடல் நமக்கு தெரியப்படுத்தும். அந்த அறிகுறிகள் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் காரணமின்றி திடீரென்று ஒருசில பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்தால், அதைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

nourishnest888 என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதய நோய் நிபுணர் ஒருவர் மாரடைப்பு வருவதற்கு 30 நிமிடத்திற்கு முன் உடலானது 5 எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளார். அதோடு அந்த அறிகுறிகள் என்னவென்பது குறித்தும் அந்த டாக்டர் தனது இன்ஸ்டா பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "மாரடைப்பு ஏற்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் உடல் 5 எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தும். அந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. அப்படி புறக்கணித்தால், மரணத்தை சந்திக்க நேரிடும்" என்றும் கூறியதோடு, 5 அறிகுறிகளையும் விளக்கமாக கூறியிருந்தார்.
1. நெஞ்சு அசௌகரியம்
"மாரடைப்பின் முதல் அறிகுறி நெஞ்சு அசௌகரியம். அதாவது நெஞ்சு பகுதியில் அழுத்துவது போன்றோ, இறுக்குவது போன்றோ அல்லது பாரமாகவோ இருக்கும். ஏனெனில் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் தடை ஏற்பட்டுள்ளது" என்று டாக்டர் கூறினார். எனவே காரணமின்றி இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. இடது கை, தோள்பட்டை மற்றும் தாடையில் வலி
"மாரடைப்பின் இரண்டாவது அறிகுறி இடது கை, தோள்பட்டை மற்றும் தாடையில் வலியை சந்திப்பது. எப்போது இதயத்தில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லையோ, அப்போது வலி சமிக்ஞைகள் அருகிலுள்ள நரம்புகள் வழியாகப் பயணிக்கின்றன" என்று டாக்டர் கூறினார். ஆகவே திடீரென்று இடது கையிலோ, தோள்பட்டையிலோ அல்லது தாடையிலோ வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி அவரிடம் கூறி பரிசோதனை செய்து பாருங்கள்.
3. மூச்சுத் திணறல்
மாரடைப்பின் மூன்றாவது அறிகுறி மூச்சுத் திணறல். இதயம் எப்போது சரியாக இரத்தத்தை அழுத்தாமல் உள்ளதோ, அப்போது குறைவான ஆக்ஸிஜன் நுரையீரலை அடைகின்றன. இதன் விளைவாக சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்று டாக்டர் கூறினார். ஆகவே உங்களால் சரியாக சுவாசிக்க முடியாமல் போனால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. வியர்வை
மாரடைப்பின் நான்காவது அறிகுறி வியர்வை. இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்தால், நரம்பு மண்டலமானது தப்பிக்கும் நிலைக்கு சென்று, உடல் குளிர்ச்சியான நிலையில் இருந்தாலும் அதிகமாக வியர்க்கும் என்று டாக்டர் கூறினார். ஆகவே காரணமின்றி அதிகம் வேலை செய்யாமல் வியர்வை அதிகமாக வெளியேறினால், உடனே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகுங்கள்.
5. குமட்டல் அல்லது தலைச்சுற்றல்
மாரடைப்பின் ஐந்தாவது எச்சரிக்கை அறிகுறி குமட்டல் அல்லது தலைச்சுற்றல். எப்போது ஒருவரது மூளை மற்றும் வயிற்றுக்கு இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக இருக்கிறதோ, அப்போது தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் உணர்வு தூண்டப்படுகிறது என்று டாக்டர் கூறினார். அதுவும் காரணம் ஏதும் இல்லாமல் இந்த அறிகுறிகளை சந்தித்தால் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
எனவே நண்பர்களே! உங்களிடம் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளானது சமீப காலமாக அதிகமாக தெரிவதாக உணர்ந்தால், அதை சற்றும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, அவரிடம் தெரிவித்து உடனடி பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications