Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்த உணவுகள் தமனிகளில் உள்ள அடைப்பை நீக்கி உங்கள் இதயத்தை பாதுகாக்குமாம்... கண்டிப்பா சாப்பிடுங்க...!
தமனிகள் என்பது நம் உடலில் உள்ள மிகவும் முக்கியமான உறுப்பாகும். உடலை ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தமனிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக தமனிகளில் ஏற்படும் சிக்கல்கள்தான் உள்ளது. காலப்போக்கில், தமனிகள் சுருங்கத் தொடங்குகின்றன.
தமனிகள் சுருங்குவதற்கு பல காரணங்கள் உள்ளது, குறிப்பாக நாம் கடைப்பிடிக்கும் உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், இதய ஆரோக்கியம் கேளிவிக்குறியாகிறது. நிலைமை மோசமாகும் வரை, நாம் அதில் கவனம் செலுத்துவதில்லை. பிளேக் படிவு காலப்போக்கில் கடினமாகி, பெருந்தமனி தடிப்பு எனப்படும் ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும், இது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. சில உணவுகள் தமனி பாதுகாப்பில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் ஆரம்பத்திலேயே சேதத்தை மாற்றியமைக்கும். அவை எந்தெந்த உணவுகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஓட்ஸ்
ஓட்ஸில் பீட்டா-குளுக்கன் அதிகமாக உள்ளது, இது கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கும் திறனுக்காக அங்கீகரிக்கப்பட்ட கரையக்கூடிய நார்ச்சத்தாகும். ஆய்வுகளின் படி, ஓட்ஸ் சாப்பிடுவது மொத்த மற்றும் LDL கொழுப்பின் அளவை 5% மற்றும் 7% குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. பீட்டா-குளுக்கன்கள் காலப்போக்கில் தமனிகளில் படிமங்கள் உருவாவதைக் குறைக்கின்றன. ஓட்ஸைத் தொடர்ந்து சாப்பிடுவது செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, இவை இரண்டும் இதய ஆரோக்கியத்தை மறைமுகமாக மேம்படுத்துகிறது.
முருங்கைக்காய்
முருங்கைக்காயில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் ஒட்டுமொத்த வாஸ்குலர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உயிரியல்ரீதியாக செயல்படும் சேர்மங்கள் உள்ளன. இதிலுள்ள சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான குர்செடின், வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
முருங்கைக்காய், HDL என்ற நல்ல கொழுப்பை ஊக்குவிப்பதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. முருங்கைக்காயை பொடியாகவோ, தேநீராகவோ அல்லது காய்கறியாகவோ எடுத்துக்கொள்ளலாம். தினசரி முருங்கைக்காயை உட்கொள்வது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுப்பதன் மூலம் தமனிகளை சுத்தப்படுத்தவும், கொழுப்பை இயற்கையாகவே நிலைப்படுத்தவும் உதவும்.
வால்நட்ஸ்
வால்நட்ஸ் சக்திவாய்ந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்பா-லினோலெனிக் அமிலத்தின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு சில வால்நட்ஸ் சாப்பிடுவது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வால்நட் சாப்பிடுவத இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவை கலோரிகள் நிறைந்தவை என்பதால், அதை சாப்பிடும் அளவு என்பது மிகவும் முக்கியமானது. கூடுதல் நன்மைகளைப் பெற, அவற்றை பச்சையாகவோ அல்லது ஊறவைத்தோ உட்கொள்ளலாம்.
வெந்தயம்
அனைத்து இந்திய வீடுகளிலும் காணப்படும் வெந்தயம், உணவிற்கு சுவையை அளிப்பதை விட பல நன்மைகளைக் கொண்ட ஒரு மசாலாப் பொருளாகும். இதன் விதைகளில் உள்ள சேர்மங்கள் கொழுப்பின் அளவை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ள்ளது. வெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்ளும் நோயாளிகள் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுங்கள் அல்லது உணவுகளில் பல்வேறு வடிவங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை பல நூற்றாண்டுகளாக இந்திய உணவுகளிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கறிவேப்பிலை பல்வேறு வழிகளில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது, அதில் முக்கியமானது இதய ஆரோக்கியம். ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கறிவேப்பிலை, கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. கறிவேப்பிலையில் கேம்ப்ஃபெரால் உள்ளது, இது வீக்கத்தைக் குறைக்கிறது, தமனி அடைப்புகளை நீக்குகிறது மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. கூடுதலாக அவை இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகின்றன, மேலும் மறைமுகமாக இதய ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












