Latest Updates
-
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா?
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து
தண்ணீருக்கு அடுத்தபடியாக உலகில் அதிகளவு மக்களால் விரும்பி அருந்தப்படும் பானமென்றால் அது தேநீர்தான். பலருக்கும் தேநீர் என்பது ஒரு பானம் மட்டுமல்ல அது எமோஷன். தேநீர் தரும் இதமான சுவை, புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக அது கோடிக்கணக்கான மக்களுடன் நெருக்கமான பந்தத்தைக் கொண்டுள்ளது.

இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முதல், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் சேர்மங்கள் வரை பல நன்மைகளைக் கொண்ட தேநீர், கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. தேநீர் ஆரோக்கியமான பானமாக இருந்தாலும் அதனுடன் சேர்த்து சாப்பிடப்படும் சில உணவுகள் அதை ஆபத்தான பானமாக மாற்றலாம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உறிஞ்சப்படுவதைக் குறைக்கலாம் அல்லது செரிமானக் கோளாறுகளைக்கூட ஏற்படுத்தலாம். இந்த பதிவில் தேநீரின் முழுமையான சுவையையும், ஆரோக்கியத்தையும் அனுபவிக்க தேநீர் அருந்தும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
இரும்புச்சத்து அல்லது புரதச்சத்து நிறைந்த உணவுகள்
தேநீரில் இயற்கையாகவே காணப்படும் டானின்கள் மற்றும் ஆக்சலேட்டுகள், பயறு வகைகள், பருப்பு வகைகள் மற்றும் அடர் பச்சை நிற இலைக்கீரைகளில் உள்ள புரதங்கள் மற்றும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தேநீருடன் சேர்த்து உட்கொள்வது இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கலாம். இது தாவர அடிப்படையிலான இரும்புச்சத்தை மட்டுமே நம்பியிருப்பவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம். இத்தகைய உணவுகளை உட்கொள்ளும்போது, தேநீரை அவற்றுடன் சேர்த்து அருந்தாமல், உணவை உண்பதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்னரோ அருந்துவது நல்லது.
சிட்ரஸ் பழங்கள்
தேநீருடன் சிட்ரஸ் பழங்கள் அல்லது பழ சாலட்களைச் சேர்த்து அருந்துவது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து, செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், அந்த அமிலத்தன்மையும் பழச் சர்க்கரைகளும் தேநீரில் உள்ள டானின்களுடன் வினைபுரிந்து, சுவையையும் செரிமானத்தையும் பாதிக்கலாம். தேநீர் குடித்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பழங்களை உட்கொள்வது நல்லது.
கடலை மாவில் பொரித்த உணவுகள் மற்றும் வறுத்த நொறுக்குத்தீனிகள்
இது கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கலாம். தேநீர் அருந்தும் போது அதனுடன் பஜ்ஜி, சமோசா போன்றவற்றை சாப்பிடுவது நம்மால் தவிர்க்க முடியாத ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. ஆழமாகப் பொரித்த அல்லது கடலை மாவு சார்ந்த தின்பண்டங்கள் பெரும்பாலும் எண்ணெய்ப் பசையுடனும். மிகவும் கனமானதாகவும் இருக்கும். இவை தேநீரில் உள்ள டானின்களுடன் இணையும்போது செரிமானத்தைப் பாதிக்கக்கூடும். இந்தக் கலவைகள் வயிறு உப்புசம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தி, தேநீரின் இதமான தன்மையைக் கெடுத்துவிடும்.
பால் அல்லது தயிர் சார்ந்த பொருட்கள்
தேநீர் அருந்தும் போது முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் அல்லது தயிர் போன்றவற்றைச் சேர்த்து அருந்துவது, தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களின் உறிஞ்சுதலைக் குறைத்து, செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, பால் பொருட்களால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது அதிக பாதிப்பை உண்டாக்கும்.
அதிக காரமான அல்லது அமிலத்தன்மை கொண்ட உணவுகள்
காரமான அல்லது அதிக அமிலத்தன்மை கொண்ட உணவுகள், தேநீரின் துவர்ப்பு மற்றும் இதமான தன்மையுடன் ஒத்துப்போகாமல் போகலாம். இந்தக் கலவையானது வயிறை அதிகமாக செயல்படத் தூண்டி, அமிலத்தன்மை, அஜீரணம் அல்லது அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். செரிமானக் கோளாறு அல்லது அமிலத்தன்மை பிரச்சினைகள் உள்ளவர்கள், காரமான உணவுகளைத் தேநீரிலிருந்து தனியாக எடுத்துக்கொள்வது நல்லது, குறிப்பாக மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு தேநீரைத் தவிர்ப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

