Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் :
மார்பக பகுதிகளில் பால் சுரக்கும் நாளங்கள் இருக்கிறது. அவைகளின் வழியாகத்தான் தாய்மை அடைந்ததும் பால் சுரக்கும். அந்த நாளங்களில் புற்றுநோய் தாக்கினால், டக்டல் புற்றுநோய் என்று பெயர். இது அப்படியே மற்ற இடங்களுக்கும் பரவி, நோய் தீவிரமாகிறது. மார்பக புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
பொதுவாகவே மாதவிடாயின் ஒரு வாரம் முன்னும் பின்னும் சிறு சிறு கட்டிகளாய் உருண்டையாய் வருவதும் லேசான வலியும் சாதரணமானது. ஆனால் பல நாட்களாய் தொடர்ந்து கட்டி இருப்பதும், அந்த கட்டி வித்தியாசமாய் தெரிவதும், வலி எடுப்பதுமாக இருந்தால் நிச்சயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மனோபாஸிற்கு பிறகு, அதிகப்படியாக உடல் பருமனால், கொழுப்புத் திசுக்கள் மார்பில் சென்று தங்கும் என்று நியூ யார்க்கிலுள்ள, லங்கோன் மெடிக்கல் சென்டர் தெரிவித்துள்ளது.
மெனோபாஸிற்கு பிறகு நிறைவுறும் கொழுப்பு அமிலங்கள் மார்பகத்தில் தங்கி, அவை மார்பக புற்று நோய்க்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள். அதிகப்படியான நிறைவுறும் கொழுப்பு அமிலங்கள் உள்ள சீஸ், இறைச்சி மற்றும் எண்ணெய் உணவுகள் சாப்பிடுவது தான் இதற்கு காரணம்.
கொழுப்பு செல்கள் மார்பகத்தில் எவ்வாறு செயல்படுகிறது, அவற்றின் வளர்ச்சி எவ்வாறு அமைகிறது என்று நடத்தப்பட்ட ஆராய்ச்சியை ஜர்னல் ஆஃப் ரேடியாலஜி என்ற இதழ் வெளியிட்டுள்ளது.
மார்பக புற்று நோயை தடை செய்வதில் ஈஸ்ட்ரோஜன் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் மெனோபாஸ் நேரங்களில் ஈஸ்ட்ரோஜன் குறைவதால், புற்றுநோய் வாய்ப்புகள் அதிகமாகிறது.
சுமார் 89 சதவீத மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்களின் மார்பகத்தில் உள்ள அடிப்போஸ் திசுக்களை ஆய்வு செய்து, அவர்களின் உடல் எடையை கணக்கிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தெரிய வந்தது என்னவென்றால், அதில் பங்கேற்ற நோயாளிகளிடம், நிறைவுறும் கொழுப்பு அமிலங்களின் அளவு அதிகமாகவும், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆய்வின் இறுதியில் ஆராய்ச்சியாளர்கள், அதிகப்படியான எண்ணெய், கொழுப்பு உணவுகளே மார்பக புற்றுநோய் வர காரணம் என ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














