Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் :
மார்பக பகுதிகளில் பால் சுரக்கும் நாளங்கள் இருக்கிறது. அவைகளின் வழியாகத்தான் தாய்மை அடைந்ததும் பால் சுரக்கும். அந்த நாளங்களில் புற்றுநோய் தாக்கினால், டக்டல் புற்றுநோய் என்று பெயர். இது அப்படியே மற்ற இடங்களுக்கும் பரவி, நோய் தீவிரமாகிறது. மார்பக புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
பொதுவாகவே மாதவிடாயின் ஒரு வாரம் முன்னும் பின்னும் சிறு சிறு கட்டிகளாய் உருண்டையாய் வருவதும் லேசான வலியும் சாதரணமானது. ஆனால் பல நாட்களாய் தொடர்ந்து கட்டி இருப்பதும், அந்த கட்டி வித்தியாசமாய் தெரிவதும், வலி எடுப்பதுமாக இருந்தால் நிச்சயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மனோபாஸிற்கு பிறகு, அதிகப்படியாக உடல் பருமனால், கொழுப்புத் திசுக்கள் மார்பில் சென்று தங்கும் என்று நியூ யார்க்கிலுள்ள, லங்கோன் மெடிக்கல் சென்டர் தெரிவித்துள்ளது.
மெனோபாஸிற்கு பிறகு நிறைவுறும் கொழுப்பு அமிலங்கள் மார்பகத்தில் தங்கி, அவை மார்பக புற்று நோய்க்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள். அதிகப்படியான நிறைவுறும் கொழுப்பு அமிலங்கள் உள்ள சீஸ், இறைச்சி மற்றும் எண்ணெய் உணவுகள் சாப்பிடுவது தான் இதற்கு காரணம்.
கொழுப்பு செல்கள் மார்பகத்தில் எவ்வாறு செயல்படுகிறது, அவற்றின் வளர்ச்சி எவ்வாறு அமைகிறது என்று நடத்தப்பட்ட ஆராய்ச்சியை ஜர்னல் ஆஃப் ரேடியாலஜி என்ற இதழ் வெளியிட்டுள்ளது.
மார்பக புற்று நோயை தடை செய்வதில் ஈஸ்ட்ரோஜன் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் மெனோபாஸ் நேரங்களில் ஈஸ்ட்ரோஜன் குறைவதால், புற்றுநோய் வாய்ப்புகள் அதிகமாகிறது.
சுமார் 89 சதவீத மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்களின் மார்பகத்தில் உள்ள அடிப்போஸ் திசுக்களை ஆய்வு செய்து, அவர்களின் உடல் எடையை கணக்கிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தெரிய வந்தது என்னவென்றால், அதில் பங்கேற்ற நோயாளிகளிடம், நிறைவுறும் கொழுப்பு அமிலங்களின் அளவு அதிகமாகவும், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆய்வின் இறுதியில் ஆராய்ச்சியாளர்கள், அதிகப்படியான எண்ணெய், கொழுப்பு உணவுகளே மார்பக புற்றுநோய் வர காரணம் என ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


