Just In
- 12 min ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 1 hr ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
Don't Miss
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் :
மார்பக பகுதிகளில் பால் சுரக்கும் நாளங்கள் இருக்கிறது. அவைகளின் வழியாகத்தான் தாய்மை அடைந்ததும் பால் சுரக்கும். அந்த நாளங்களில் புற்றுநோய் தாக்கினால், டக்டல் புற்றுநோய் என்று பெயர். இது அப்படியே மற்ற இடங்களுக்கும் பரவி, நோய் தீவிரமாகிறது. மார்பக புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
பொதுவாகவே மாதவிடாயின் ஒரு வாரம் முன்னும் பின்னும் சிறு சிறு கட்டிகளாய் உருண்டையாய் வருவதும் லேசான வலியும் சாதரணமானது. ஆனால் பல நாட்களாய் தொடர்ந்து கட்டி இருப்பதும், அந்த கட்டி வித்தியாசமாய் தெரிவதும், வலி எடுப்பதுமாக இருந்தால் நிச்சயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மனோபாஸிற்கு பிறகு, அதிகப்படியாக உடல் பருமனால், கொழுப்புத் திசுக்கள் மார்பில் சென்று தங்கும் என்று நியூ யார்க்கிலுள்ள, லங்கோன் மெடிக்கல் சென்டர் தெரிவித்துள்ளது.
மெனோபாஸிற்கு பிறகு நிறைவுறும் கொழுப்பு அமிலங்கள் மார்பகத்தில் தங்கி, அவை மார்பக புற்று நோய்க்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள். அதிகப்படியான நிறைவுறும் கொழுப்பு அமிலங்கள் உள்ள சீஸ், இறைச்சி மற்றும் எண்ணெய் உணவுகள் சாப்பிடுவது தான் இதற்கு காரணம்.
கொழுப்பு செல்கள் மார்பகத்தில் எவ்வாறு செயல்படுகிறது, அவற்றின் வளர்ச்சி எவ்வாறு அமைகிறது என்று நடத்தப்பட்ட ஆராய்ச்சியை ஜர்னல் ஆஃப் ரேடியாலஜி என்ற இதழ் வெளியிட்டுள்ளது.
மார்பக புற்று நோயை தடை செய்வதில் ஈஸ்ட்ரோஜன் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் மெனோபாஸ் நேரங்களில் ஈஸ்ட்ரோஜன் குறைவதால், புற்றுநோய் வாய்ப்புகள் அதிகமாகிறது.
சுமார் 89 சதவீத மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்களின் மார்பகத்தில் உள்ள அடிப்போஸ் திசுக்களை ஆய்வு செய்து, அவர்களின் உடல் எடையை கணக்கிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தெரிய வந்தது என்னவென்றால், அதில் பங்கேற்ற நோயாளிகளிடம், நிறைவுறும் கொழுப்பு அமிலங்களின் அளவு அதிகமாகவும், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆய்வின் இறுதியில் ஆராய்ச்சியாளர்கள், அதிகப்படியான எண்ணெய், கொழுப்பு உணவுகளே மார்பக புற்றுநோய் வர காரணம் என ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்