Latest Updates
-
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
நகத்தைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா? இதோ சில அற்புத வழிகள்!
நகத்தை சுற்றி இருக்கும் கருப்பு வளையங்கள் தங்கள் மொத்த அழகையும் கெடுக்கிறதே, என்ன செய்வதென்றே தெரியவில்லையே என வருத்தப்பட தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களே அற்புதங்களை செய்யும்.
சிறந்த பராமரிப்பு உள்ள நகங்கள் சுத்தத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும். ஆனால், எவ்வளவு தான் சுத்தமாக நகங்களை பராமரித்து, மெனிக்யூர் எல்லாம் செய்து அழகாக வைத்துக் கொண்டாலும், நகங்களை சுற்றி அசிங்கமாக கருப்பு நிறம் இருந்தால் அது மொத்த அழகையும் கெடுத்து விடும். அழகு நிலையங்களுக்கு சென்று செலவு செய்து அழகை பராமரிப்பது தான் தற்காலத்தில் பெரும்பாலான பெண்களின் பழக்கமாக உள்ளது.

நகத்தை சுற்றி இருக்கும் கருப்பு வளையங்கள் தங்கள் மொத்த அழகையும் கெடுக்கிறதே, என்ன செய்வதென்றே தெரியவில்லையே என வருத்தப்பட தேவையில்லை. அதிக பணம் செலவு செய்து பராமரிப்பு செய்ய வேண்டாம். வீட்டில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சில பொருட்களே நகங்களை சுற்றியுள்ள கருப்பு வளையங்களை போக்குவதில் சிறந்த பலன்களை தரக்கூடும். அழகான கைகளை பைசா செலவில்லாமல், இங்கே கூறப்பட்டுள்ளது போல் செய்து தங்களது அழகை மேலும் கூட்டிக் கொள்ளுங்கள்....

தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்துள்ளது. இவை, பொலிவான சருமத்தை பெற உதவக்கூடியவை. தக்காளியை அரைத்து முகத்தில் தடவினால் எப்படி பொலிவான சருமம் கிடைக்குமோ, அப்படி தான் நகங்களை சுற்றி தக்காளி பேஸ்டை போடும் போதும், பொலிவு கிடைக்கும். உங்கள் சமையல் அறையில் எப்போதும் இருக்கும் தக்காளி ஒன்றே போதும், இந்த பிரச்னையை விரட்டியடிக்க.

எப்படி பயன்படுத்துவது?
தக்காளியை அரைத்து தான் போட வேண்டும் என்றில்லை. தக்காளியை இரு துண்டுகளாக நறுக்கி நகங்களை சுற்றி தேய்த்தால் கூட போதும். சிறந்த பலனை பெற, தக்காளி பேஸ்டை இரவு தூங்குவதற்கு முன்பு நகத்தை சுற்றி போட்டு விட்டு, இரவு முழுவதும் விட்டுவிடவும். காலை எழுந்து அதனை கழுவி விடவும். மேலும், தக்காளியை துண்டுகளாக நறுக்கி, அதன் மீது சர்க்கரையை தூவி, நகத்தை சுற்றி தேய்க்கும் போது, இறந்த செல்களை நீங்கி, கருப்பு தோல் உரிந்து, நகத்தை அழகாக்கும்.

கற்றாழை ஜெல்
அழகான கைகளில், அழகாக பராமரித்து வரும் நகங்களை சுற்றியிலும் அதிக கருப்பு நிறத்தில் வளையம் தென்பட்டால் நீங்கள் கற்றாழை ஜெல்லை உபயோகிப்பதே சிறந்தது. ஏனென்றால், கற்றாழையில் சருமத்திற்கு ஊட்டமளிக்கக் கூடிய பண்புகள் அதிகமாக உள்ளது.

எப்படி பயன்படுத்துவது?
முகத்திற்கு கற்றாழை ஜெல்லை தேய்ப்பது போலவே, நகங்களை சுற்றியும் தேய்க்க வேண்டும். கற்றாழையில், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால் சிறந்த ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை அது தரக்கூடும்.

மஞ்சள் தூள்
அழகான சருத்தை பெற உதவுவதில் மிகவும் சிறந்தது என்றால் அது மஞ்சள் தான். நம் முன்னோர் முதல் தற்போதைய தலைமுறையினர் வரை பயன்படுத்தி வரும் மஞ்சள் தூள், பிரகாசமான மற்றும் பொலிவான சருமத்தை பெற்றிட உதவும்.

எப்படி பயன்படுத்துவது?
நகங்களை சுற்றியுள்ள கருமை நிறம் போக வேண்டும் என்றால், மஞ்சள் தூளில் சிறிது நீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல கலந்து, நகங்களை சுற்றி போடவும். இந்த கலவையுடன் ஆலிவ் ஆயிலை கலந்து பயன்படுத்துவது மேலும் சிறந்தது. நகம் கடிக்கும் பழக்கும் உள்ளவர்கள் நிச்சயம் இதனை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், நகத்தை தொடர்ந்து கடிப்பதால் நகங்கள் சுற்றிலும் இருக்கக் கூடிய எரிச்சல் நீங்கிவிடும்.

தயிர்
நகத்தை சுற்றிலும் உள்ள கருமையான வளையத்தை போக்க, தயிரை கூட பயன்படுத்தலாம். இதிலுள்ள குளிர்ச்சிப் பண்புகள் சருமத்திற்கு ஊட்டமளிக்கக் கூடியது. தயிரிலுள்ள லாக்டிக் ஆசிட் சருமத்திற்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. மேலும், சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்கி, பொலிவை தரக்கூடும்.

எப்படி பயன்படுத்துவது?
தயிரை கை விரல்களில் கருமையாக இருக்கும் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், தயிருடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications