ரோஜா நிறம் பெற வீட்டிலேயே ஒரு செய்முறை - உடனடி பலன் !!

ரோஜா கிளென்ஸர் சருமத்தை சுத்தப்படுத்தி இள்மையாக வைத்திருக்கிறது. இது போஷாக்கை அளிக்கும், சுருக்கத்தை குறைக்கும். அதன் செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சருமம் மென்மையாகவும், இளமையாகவும், மினுமினுப்பாகவும் இருப்பதை யாவருமே விரும்புவார்கள். எதுவும் தனிச்சையாகவே மாறாது. முறையான பராமரிப்பு கொடுத்தால் சருமம் போஷாக்கு பெற்று அழகுற ஜொலிக்கும்.

இளமையான சருமம் பெற நீங்கள் ரோஜாவை பயன்படுத்துவது முக்கியம். இது இளமையான சருமம் மட்டுமல்லாது ஜொலிஜொலிப்பையும் தரும். ரோஜாவைக் கொண்டு ஒரு செய்முறை உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

ரோஜா இதழ் - 5

பால் - 1 கப்

கிளீசரின் - 2 ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்

 செய்முறை :

செய்முறை :

ரோஜா இதழ்களை பிரித்தெடுத்து அவற்றை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

 செய்முறை :

செய்முறை :

பின் அதனை பாலில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.இப்போது பாலின் நிறம் மாறியிருக்கும். உள்ளிருக்கும் இதழ்களை நன்றாக மசித்தால் பாலின் நிறம் இன்னும் அடர்த்தியாகும்.

 செய்முறை :

செய்முறை :

இப்போது அதனுடன் 2 ஸ்பூன் கிளீசரின் மற்றும் 2 ஸ்பூன் வினிகர் கலக்குங்கள்.

 செய்முறை :

செய்முறை :

இதனை சில நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து அதன் பின் உபயோகிக்கவும். இதனை ஒரு பஞ்சினால் நனைத்து முகத்தில் தடவி காய்ந்ததும் தேய்த்து கழுவுங்கள்.

நன்மைகள் :

நன்மைகள் :

இந்த கலவை சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்யும். தகுந்த ஈரப்பதம் அளித்து சுருக்கமில்லா சருமத்தை உண்டாக்கும். உபயோகப்படுத்திப் பாருங்கள். உடனடியான பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, March 3, 2017, 8:20 [IST]
Desktop Bottom Promotion