Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
விரைவாக உங்களது நிறம் கூட வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!
உங்களது முகம் பளிச்சென்று மாற ஈசி டிப்ஸ்
வெயிலில் வெளியில் செல்வது, சரியான டயட்டை கடைப்பிடிக்காமல் இருப்பது, தூசி காற்று மாசுபாடுகள் ஆகியவை உங்களது முகத்தை கருமையாக்கி பொலிவிழக்க செய்யும். அதற்காக நாம் வெளியில் செல்லாமலும் இருக்க முடியாது. முகம் கருமையாவதை நினைத்து பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக கவலைப்படுகின்றனர்.
ஆனால் சில ஆண்கள் தங்களது முகத்திற்கு உரிய பராமரிப்பை கொடுப்பதில்லை. நீங்கள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை டிரை செய்தால் உங்களது முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, முகம் பளிச்சென மாறும்.

பேக்கிங் சோடா பேஸ்ட் :
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து முகத்திற்கு பேக் போட வேண்டும். இதனை 15 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தமான தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனை வெளியில் சென்று வந்த உடன் செய்து வந்தால் முகம் பிரகாசம் பெறும்.

வாழைப்பழம் மற்றும் பால் :
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். இதனை செய்தால் உடனடியாக நல்ல பலன் தெரியும்.

ரோஸ் வாட்டர் :
ரோஸ் வாட்டர் மற்றும் பாலை ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி விட்டு, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

தேன் :
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்

சர்க்கரை :
சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.

தேங்காய் தண்ணீர் :
தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.

கற்றாழை ஜெல் :
கற்றாழை ஜெல்லைக் கொண்டு முகமசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.

சூரியகாந்தி விதை :
இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

மாம்பழத் தோல் :
மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.



Click it and Unblock the Notifications