Just In
- 17 min ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 3 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 3 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 4 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
Don't Miss
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆண்களே! உங்கள் முகத்தைக் கருப்பாக காட்டும் அழுக்கைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...
முகம் மிகவும் கருமையாக உள்ளதா? எப்படி அதைப் போக்குவது என்று தெரியவில்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எலுமிச்சை ஃபேஸ் பேக்கைப் போடுங்கள்.
தற்போது ஆண்கள் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். பெரும்பாலான ஆண்களின் முகம் கருப்பாக இருப்பதற்கு, அவ்வப்போது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றாமல் இருப்பது தான். இப்படி சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு அவ்வப்போது பராமரித்து வந்தாலே போதும். இங்கு சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் ஓர் அற்புத ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை குறைந்தது வாரம் ஒருமுறை ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் மேற்கொண்டு வந்தால், முகம் பிரகாசமாக இருக்கும்.
ஸ்டெப் #1
ஒரு கப் நீரை கொதிக்க வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ இலைகளைப் போட்டு, தீயை குறைத்து 5 நிமிடம் மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
ஸ்டெப் #2
நன்கு கனிந்த தக்காளியை அரைத்து, பேஸ்ட் செய்து க்ரீன் டீயுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் #3
பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் #4
பிறகு அதில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் #5
தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவும் முன், சிறிது நேரம் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் சருமத் துளைகள் விரிவடையும்.
ஸ்டெப் #6
பிறகு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
ஸ்டெப் #7
முகத்தில் தடவிய மாஸ்க் காய்ந்த பின், முகத்தில் சிறிது நீரைத் தெளித்து, கையால் மென்மையாக 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி விட்டு, குளிர்ந்த நீரால் இறுதியில் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஸ்டெப் #8
அடுத்து துணியால் முகத்தைத் துடைத்துவிட்டு, சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.