Latest Updates
-
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா?
குளிரில் முகம் கருத்து போகுதா? இந்த ஒரே ஒரு டிப்ஸ் யூஸ் பண்ணுங்க
குளிர்காலத்தில் முகம் வறட்சியாகவும், கருத்தும் போய்விடும். களையில்லாமல் , ஏனோதானோவென்று இருக்கும். முக்கியமாக இந்த சமயத்தில்தான், சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும். எப்படிதான் இந்த குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாப்பது என யோசிக்கிறீர்களா?
இந்த ஒரே ஒரு குறிப்பை உபயோகப்படுத்துங்கள். முகம் ஈரப்பதம் பெற்று மென்மையாகவும் ஜீவனுடனும் இருக்கும்.

தேவையானவை :
யோகார்ட்- 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தக்காளி- 1 கப்
தேன்- ( வறண்ட சருமத்திற்கு மட்டும்)
இவற்றில் தக்காளி சருமத்தில் உள்ள துளைகளை சுருங்கச் செய்யும். இதனால் அழுக்குகள் இறந்த செல்கள் தங்காது.
யோகார்ட் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும். கருமையை நீக்கி, சருமத்திற்கு நிறம் அளிக்கும். எலுமிச்சை சாறு இயற்கையான பிளீச், அது கிருமி நாசினியும் கூட. குளிர்காலத்தில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களால் உண்டாகும் வெள்ளைத் திட்டுக்கள் மற்றும் முகப்பருக்களை தடுக்கும். சுருக்கங்களைப் போக்கும். இளமையாகவும் ஜொலிப்பாகவும் முகத்தை வைத்திருக்க உதவும்.
செய்முறை :
தக்காளியை மசித்து, அதில் யோகார்ட்டை சேருங்கள். இவற்றில் எலுமிச்சை சாறு கலந்து, இந்த கலவையை முகத்தில் தேய்க்கவும். வறண்ட சருமம் உள்ளவர்கள் கூட தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
20 நிமிடங்கள் கழித்து, முகத்தை கழுவலாம். வாரம் ஒருமுறை செய்தால், உங்கள் முகத்தில் மாற்றங்கள் தெரியும். புத்துணர்வோடு வலம் வருவீர்கள். முயன்று பாருங்கள்.



Click it and Unblock the Notifications



