Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மேக்கப்பை எளிதாக அகற்ற பாதாம் எண்ணெய் பயன்படுத்துங்க!
பாதாம் எண்ணெய் அருமையான மாய்ஸ்ரைஸர். ஆனால் அது மேக் அப்பை எளிதில் அகற்ற உதவும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? முகத்தில் மேக் அப் மற்றும் கண்களில் போடப்படும் ஐ-லைனர்,மஸ்காரா ஆகியவை எளிதில் போகாதவை .மேக் அப் ரிமூவர் கடைகளில் கிடைக்கும். ஆனால் அவற்றில் கெமிக்கல்ஸ் கலந்திருப்பதால், அவை சருமத்தில் சீக்கிரம் தொய்வை ஏற்படுத்தும். அதோடு மேக் அப் சாதனங்களும் கெமிக்கலில் செய்வதால்,ரிமூவர் உபயோகிக்கும்போது முகம் மேலும் வறட்சியாகும்.
இயற்கையான எண்ணெய்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காதவை. அதிலும் பாதாம் எண்ணைய் இதற்கு அருமையான தீர்வாகும். வறண்ட சருமம் அல்லது சரும நோய்கள் இருப்பவர்கள் மேக்அப் அகற்ற பாதாம் எண்ணெய் உபயோகிப்பது மிகவும் நல்லது. அவை சருமத்தில் உள்ள வெடிப்புகளில் ஈரப்பதத்தை அளித்து தோலினை மிருதுவாக்குகிறது.

எவ்வாறு பாதாம் எண்ணெய் உபயோகிக்கலாம்?
பாதாம் எண்ணைய் தேவையான அளவு எடுத்து முகத்தில் தடவ வேண்டும். முக்கியமாக கண்களிளை சுற்றி மெதுவாக மஸாஜ் செய்ய வேண்டும் ஏனெனில் கண்களில் போடப்படும் மஸ்காரா பெரும்பாலும் நீரில் கரையாதவை. பிறகு ஒரு பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து முகம் , கண்கள் பகுதியில் தடவ வேண்டும்.
இப்போது வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் மாசின்றி இருக்கும். பாதாம் எண்ணைய், சரும துவாரத்தில் உள்ள அழுக்கு, கெமிக்கல்ஸ் அகற்றி பளிச்சிட வைக்கும். நீரில் கழுவாமல் அப்படியே விட்டாலும், பாதாம் எண்ணைய் உங்கள் முகத்தில் மேஜிக் செய்யும். அழுக்கை சேர்க்காது, பிசுபிசுப்பை தராது .ஏனெனில் அவை மற்ற எண்ணெய்கள் போல் சருமத்திலேயே தங்கி விடாது.
எனவே டியர் லேடிஸ்!! கடைகளில் கண்ட கண்ட மேக் அப் ரிமூவரை வாங்கி சருமத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பாதாம் எண்ணெய் வாங்கி உபயோகிங்கள்.இயற்கையானது... மேலானது!



Click it and Unblock the Notifications













