Latest Updates
-
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம்
மேக்கப்பை எளிதாக அகற்ற பாதாம் எண்ணெய் பயன்படுத்துங்க!
பாதாம் எண்ணெய் அருமையான மாய்ஸ்ரைஸர். ஆனால் அது மேக் அப்பை எளிதில் அகற்ற உதவும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? முகத்தில் மேக் அப் மற்றும் கண்களில் போடப்படும் ஐ-லைனர்,மஸ்காரா ஆகியவை எளிதில் போகாதவை .மேக் அப் ரிமூவர் கடைகளில் கிடைக்கும். ஆனால் அவற்றில் கெமிக்கல்ஸ் கலந்திருப்பதால், அவை சருமத்தில் சீக்கிரம் தொய்வை ஏற்படுத்தும். அதோடு மேக் அப் சாதனங்களும் கெமிக்கலில் செய்வதால்,ரிமூவர் உபயோகிக்கும்போது முகம் மேலும் வறட்சியாகும்.
இயற்கையான எண்ணெய்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காதவை. அதிலும் பாதாம் எண்ணைய் இதற்கு அருமையான தீர்வாகும். வறண்ட சருமம் அல்லது சரும நோய்கள் இருப்பவர்கள் மேக்அப் அகற்ற பாதாம் எண்ணெய் உபயோகிப்பது மிகவும் நல்லது. அவை சருமத்தில் உள்ள வெடிப்புகளில் ஈரப்பதத்தை அளித்து தோலினை மிருதுவாக்குகிறது.

எவ்வாறு பாதாம் எண்ணெய் உபயோகிக்கலாம்?
பாதாம் எண்ணைய் தேவையான அளவு எடுத்து முகத்தில் தடவ வேண்டும். முக்கியமாக கண்களிளை சுற்றி மெதுவாக மஸாஜ் செய்ய வேண்டும் ஏனெனில் கண்களில் போடப்படும் மஸ்காரா பெரும்பாலும் நீரில் கரையாதவை. பிறகு ஒரு பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து முகம் , கண்கள் பகுதியில் தடவ வேண்டும்.
இப்போது வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் மாசின்றி இருக்கும். பாதாம் எண்ணைய், சரும துவாரத்தில் உள்ள அழுக்கு, கெமிக்கல்ஸ் அகற்றி பளிச்சிட வைக்கும். நீரில் கழுவாமல் அப்படியே விட்டாலும், பாதாம் எண்ணைய் உங்கள் முகத்தில் மேஜிக் செய்யும். அழுக்கை சேர்க்காது, பிசுபிசுப்பை தராது .ஏனெனில் அவை மற்ற எண்ணெய்கள் போல் சருமத்திலேயே தங்கி விடாது.
எனவே டியர் லேடிஸ்!! கடைகளில் கண்ட கண்ட மேக் அப் ரிமூவரை வாங்கி சருமத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பாதாம் எண்ணெய் வாங்கி உபயோகிங்கள்.இயற்கையானது... மேலானது!



Click it and Unblock the Notifications

