Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
எண்ணெய் சருமமா? முகப்பருவா? வாரம் இருமுறை ஹெர்பல் ஆவி பிடியுங்கள்!
வெயில் காலத்தில் சருமத்தில் எண்ணெய் படிவதை தவிர்க்க இயலாது. கூடவே முகப்பரு பிரச்சனையும் சேர்ந்துக் கொள்ளும். வாரம் இருமுறை இந்த ஹெர்பல் ஆவி பிடித்தால் சருமத்தை பாதுகாக்கமுடியும்.
தேவையானவை:
1.மஞ்சள் (கூடுமானவரை மஞ்சளை மெஷினில் அரைத்து உபயோகப்படுத்துவது நல்லது. கடையில் விற்பதில் கெமிக்கல்ஸ் கலந்திருக்கும்)
2.பட்டை
3.க்ரீன் டீ
4.நீர்

க்ரீன் டீ சருமத்திற்கு நிறைய மகத்துவத்தை தரவல்லது. சருமத்தை மிருதுவாக்கும். சூரியக்கதிர்களின் பாதிப்பினிலிருந்து பாதுகாக்கும். இது பாலிஃபீனால் அதிகம் கொண்டிருப்பதால், சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது. மஞ்சள் ஆன்டி-செப்டிக், தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
அது முகப்பருவிற்கு முதல் எதிரியாகும். பட்டை தோலில் இருக்கும் இறந்த செல்களை அகற்றுவதில் அருமையாக பணி புரிகிறது.இது ஆழமாக தோலினுள் ஊடுருவுகிறது.முகத் துவாரங்களில் இருக்கும் அழுக்குகளை அகற்றி மற்ற மூலிகைகள் உள்ளே செல்ல அனுமதிக்கிறது.
செய்முறை:
1.முதலில் முகத்தில் க்ளென்ஸர் கொண்டு சுத்தம் செய்யவும். மேக் அப், தோலின் மேலுள்ள அழுக்கு ஆகியவற்றை களைந்து விடுவது அவசியம்.
2.பிறகு சுத்தமான நீரினை நன்றாக கொதிக்க விடவும்.
3.அடுப்பை அணைத்த பிறகு, மஞ்சள்,க்ரீன் டீ,பட்டை ஆகியவற்றை போடவும்.ஒரு ஸ்பூனை கொண்டு நன்றாக கலந்து விடவும்.
4.இப்போது மஞ்சள் நிறம் சற்று மாறியிருக்கும். அப்படியென்றால், நாம் போட்டிருக்கும் ஹெர்பல் நீரில் கலந்து நன்றாக வேலை செய்கிறது என அர்த்தம்.
5.ஒரு காற்று பூகாத கெட்டியான டவலைக் கொண்டு முகத்தினை முழுவதும் மூடி ஆவி பிடிக்க வேண்டும்.
இதனால் முகத்திலுள்ள துளைகள் நன்றாக திறந்து, மூலிகைகள் அனைத்தும் உள்ளே செல்லும். சுமார் 20 நிமிடங்கள் ஆவி பிடிக்க சருமம் உள்ளவர்கள் 10 நிமிடங்கள் இருந்தால் போதுமானது. அதன் பின் ரிலாக்ஸாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications

