Latest Updates
-
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
எண்ணெய் சருமமா? முகப்பருவா? வாரம் இருமுறை ஹெர்பல் ஆவி பிடியுங்கள்!
வெயில் காலத்தில் சருமத்தில் எண்ணெய் படிவதை தவிர்க்க இயலாது. கூடவே முகப்பரு பிரச்சனையும் சேர்ந்துக் கொள்ளும். வாரம் இருமுறை இந்த ஹெர்பல் ஆவி பிடித்தால் சருமத்தை பாதுகாக்கமுடியும்.
தேவையானவை:
1.மஞ்சள் (கூடுமானவரை மஞ்சளை மெஷினில் அரைத்து உபயோகப்படுத்துவது நல்லது. கடையில் விற்பதில் கெமிக்கல்ஸ் கலந்திருக்கும்)
2.பட்டை
3.க்ரீன் டீ
4.நீர்

க்ரீன் டீ சருமத்திற்கு நிறைய மகத்துவத்தை தரவல்லது. சருமத்தை மிருதுவாக்கும். சூரியக்கதிர்களின் பாதிப்பினிலிருந்து பாதுகாக்கும். இது பாலிஃபீனால் அதிகம் கொண்டிருப்பதால், சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது. மஞ்சள் ஆன்டி-செப்டிக், தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
அது முகப்பருவிற்கு முதல் எதிரியாகும். பட்டை தோலில் இருக்கும் இறந்த செல்களை அகற்றுவதில் அருமையாக பணி புரிகிறது.இது ஆழமாக தோலினுள் ஊடுருவுகிறது.முகத் துவாரங்களில் இருக்கும் அழுக்குகளை அகற்றி மற்ற மூலிகைகள் உள்ளே செல்ல அனுமதிக்கிறது.
செய்முறை:
1.முதலில் முகத்தில் க்ளென்ஸர் கொண்டு சுத்தம் செய்யவும். மேக் அப், தோலின் மேலுள்ள அழுக்கு ஆகியவற்றை களைந்து விடுவது அவசியம்.
2.பிறகு சுத்தமான நீரினை நன்றாக கொதிக்க விடவும்.
3.அடுப்பை அணைத்த பிறகு, மஞ்சள்,க்ரீன் டீ,பட்டை ஆகியவற்றை போடவும்.ஒரு ஸ்பூனை கொண்டு நன்றாக கலந்து விடவும்.
4.இப்போது மஞ்சள் நிறம் சற்று மாறியிருக்கும். அப்படியென்றால், நாம் போட்டிருக்கும் ஹெர்பல் நீரில் கலந்து நன்றாக வேலை செய்கிறது என அர்த்தம்.
5.ஒரு காற்று பூகாத கெட்டியான டவலைக் கொண்டு முகத்தினை முழுவதும் மூடி ஆவி பிடிக்க வேண்டும்.
இதனால் முகத்திலுள்ள துளைகள் நன்றாக திறந்து, மூலிகைகள் அனைத்தும் உள்ளே செல்லும். சுமார் 20 நிமிடங்கள் ஆவி பிடிக்க சருமம் உள்ளவர்கள் 10 நிமிடங்கள் இருந்தால் போதுமானது. அதன் பின் ரிலாக்ஸாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications

