Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
எண்ணெய் சருமமா? இந்த ஆவியை பிடிங்க
வெய்யில் காலங்கள் வந்தாலே நிறைய குறிப்பாக டீன் ஏஜ் வயது பெண்களுக்கு கவலை தரும் விஷயம் எண்ணெய் வடியும் முகம் மற்றும் முகப்பருக்கள். என்னென்னமோ ட்ரை பண்ணியிருப்பீங்க. இதையும் ட்ரை பண்ணுங்க. ஆனால் பலன் அருமையாக இருக்கும்.

இந்த சிகிச்சைக்கு பின் மறு நாள் முகத்தில் எண்ணெய் வழியாது. முகப்பருக்கள் படிப்படியாக குறைந்து சருமம் பொலிவாகும். நீங்களும் ட்ரை பண்ணுங்க.
பொதுவாகவே ஆவி பிடிப்பதனால் சரும துவாரங்கள் திறந்துவிடும். இதனால் சருமத்தில் தங்கியிருக்கும் கொழுப்பு படிமங்கள், இறந்த செல்கள் அழுக்குகள் வெளியேறி விடும். இதனால் பருக்கள் வராமல், முகத்தின் துவாரங்கள் இறுகி பளிச்சென்று வைத்திருக்கும்.
இங்கு கூறப்பட்டுள்ள இந்த மூலிகை ஆவி இன்னும் சிறந்த பலனை தரும். இதற்கு தேவையான பொருட்கள் எளிதில் கிடைக்கக் கூடியவை.
தேவையானவை :
மஞ்சள் பொடி - 1 டீ ஸ்பூன்
பட்டை - சில துண்டுகள்
க்ரீன் டீ - 1 டீ ஸ்பூன்
நீர் - ஆவி பிடிக்க தேவையான அளவு
க்ரீன் டீ சருமத்திற்கு தேவையான நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை சூரியக் கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தினை சரி செய்கிறது.
மஞ்சள் சருமத்தில் ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் கிருமிகளின் தொற்றுக்களை அழிக்கிறது. சருமத்தில் உள்வரை செல்வதால் முகப்பருக்கள் வரக் காரணமான செல்களின் மேல் செயல்புரிந்து சரி செய்கிறது.
பட்டை தொய்வுகளை சரி செய்து சுருக்கங்களை போக்கும். சருமத்தில் உள்ள கருமையை குறைக்கிரது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது
செய்முறை :
முதலில் நீரினை கொதிக்க விடுங்கள். பின்னர் அதில் பட்டையையும், க்ரீன் டீத்தூளையும் சேர்க்கவேண்டும். இரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் மஞ்சள் பொடியை சேர்த்து ஆவி பிடிக்கவும்.
நன்றாக கன்னம், மூக்கின் மேல் பகுதிகளில் ஆவி உள்ளே பூகும்படி செய்யுங்கள். சூடு ஆறும் வரை ஆவி பிடியுங்கள்.
வாரம் இரு முறை செய்தால் முகப்பரு எண்ணெய் வடிதல், மாசு மரு, கருமை ஆகிய பிரச்சனைகள் போய்விடும். இது முகத்திற்கு பொலிவு தந்து சுருக்கங்களை போக்கும்.



Click it and Unblock the Notifications














