Latest Updates
-
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்!
முகப்பரு தழும்பு அசிங்கமா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க!
டீன் ஏஜ் வயதிலிருந்து 25 வயது வரை இருக்கிற பிரச்சனைகள் போதாதென இந்த முகப்பருவும் சேர்ந்து கொள்ளும். அப்படியே முகப்பரு போய்விட்டாலும் , அதனால் ஏற்படும் தழும்புகள் எளிதில் போகாது.
ரொம்ப வருடங்கள் ஆனாலும் பிடிவாதமாய் முகத்திலேயே இருந்து தொலைக்கும்.மேடு பள்ளமாய் காட்சி அளிப்பதோடு முக அழகினையும் கெடுக்கும். இப்படியெல்லாம் புலம்பிட்டு இருக்கீங்களா? அப்படியென்றால் இது உங்களுக்குதான் தொடர்ந்து படியுங்கள்.

முகப்பருத் தழும்பினை மேக்கப்பினால் மறைத்தாலும் அது நிரந்த தீர்வல்ல. இதற்காக கடை கடையாய் ஏறி இறங்கி போய் கண்ட கண்ட க்ரீம்களையும் வாங்க வேண்டாம் தோழிகளே! உங்கள் கண் முன்னாடி வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு தீர்வு காணலாம்.
முகப்பருவிற்கும் அதன் தழும்பிற்கும் எளிதில் டாட்டா காண்பிக்க இந்த ஸ்கரப்பை உபயோகிப்படுத்திப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
தேவையானவை :
க்ரீன் டீ பேக் -2
சர்க்கரை -2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு- 1 டேபிள் ஸ்பூன்
செய்யும் முறை :
க்ரீன் டீ பேக்கை சுடு நீரில் சில நிமிடங்கள் போட்டு வைக்கவும். அதன் பின் அதனை வெளியே எடுத்து , அதன் கவரைப் பிரியுங்கள். உள்ளிருக்கும் டீத் தூளை சில நிமிடங்கள் ஆற விடுங்கள்.
அதன் பின் அதனுடன் கடலை மாவு , சர்க்கரை சேர்த்து, தேவைப்படின் , மிகச் சிறிய அளவு நீரை சேருங்கள். நன்றாக கலக்குங்கள். கலவை கெட்டிப் பதத்திலேயே இருக்க வேண்டும்.
இப்போது இந்த கலவை ரெடி . அதனை முகத்தில் போட்டு தேயுங்கள். குறிப்பாக பருக்கள் உள்ள தழும்பினில் தேயுங்கள். அதிகமாய் அழுத்தம் தர வேண்டாம். இதனால் சருமம் சிவந்து எரிச்சல் தரும். நன்றாக தேய்த்த பின் 20 நிமிடங்கள் காய விடுங்கள்.அதன் பின் கழுவலாம்.
வாரம் இருமுறை செய்தால் நல்ல பலன்கள் தரும். பரு இருந்த இடமே தெரியாமல் போய் விடும். சருமம் மிருதுவாகி, பளபளப்பாக இஎருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications

