Latest Updates
-
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
ஆயுர்வேத மூலிகையான வேப்பிலையைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம்?
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய வேப்பிலை பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது சருமத்தில் மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல நோய்களுக்கும் சிகிச்சையளிக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏனெனில் வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு அழற்சி, நோயெதிர்ப்பு அழற்சி போன்றவை அதிகம் உள்ளது. எனவே இவற்றைக் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், பருக்கள், சுருக்கங்கள், தழும்புகள் மற்றும் இதர சரும பிரச்சனைகளைப் போக்கலாம்.
சரி, இப்போது எந்த பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் வேப்பிலையைக் கொண்டு ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போம்.

அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும்
ஒரு கையளவு வேப்பிலை மற்றும் துளசி இலையை வெயிலில் உலர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து, அதில் சிறிது சந்தனப் பொடி மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

கரும்புள்ளி மற்றும் வெள்ளை புள்ளிகளை நீக்க...
வேப்பிலையை அரைத்து அதில் சிறிது தேன், பால் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, வாரத்திற்கு மூன்று முறை முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்துளைகள் விரிவடைந்திருந்தால் அவை சுருங்கும் மற்றும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகளின் பிரச்சனைகளில் இருந்து விடைபெறலாம்.

தழும்புகளை போக்க...
வேப்பிலையை நிழலில் உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி மசாஜ் செய்து, உல வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் பருக்களால் வந்த கருமையான தழும்புகளைப் போக்கலாம்.

முகப்பரு
முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க, கொதிக்கும் நீரில் வேப்பிலையை சேர்த்து, வேப்பிலை மென்மையானதும், அதனை எடுத்து அரைத்து, அத்துடன் தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், பருக்கள் போய்விடும்.

பொலிவான சருமத்திற்கு...
சிறிது வேப்பிலை பொடியுடன், கடலை மாவு, 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து நன்கு காய்ந்ததும், குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், நிச்சயம் பொலிவான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications