Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 8 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முகத்தின் அழகை கெடுக்கும் வடுக்கள்.... எளிதில் போக்கலாம்!
வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள் முகத்தில் உள்ள பருவின் வடுக்களை போக்கும். எலுமிச்சை மிகச்சிறந்த நிவாரணி. பாலை கெட்டியாக காய்ச்சி அதில் எழுமிச்சை சாறு விட்டு பின்பு அதை குளிரவைக்கவும். பின்னர் தனியாக ஒரு துணியில் வடிகட்டி கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த கலவையை இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் தடவி அடுத்த நாள் காலையில் முகம் கழுவினால் பருக்கள் மாறி முகம் மென்மையாக மாறி பொலிவு பெறும்.
எலுமிச்சையை துண்டுகளாக வெட்டி அதனை பருக்களின் தழும்புகளின் மேல் பூசலாம். வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் செய்து வர தழும்புகள் மறையும்.
தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி வைத்துக்கொண்டு பருக்களின் தழும்புகளின் மேல் தடவுங்கள். மல்லி,மற்றும் லோத்ரா பட்டை ஆகிய இரண்டையும் இரவில் ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவிவைக்கவும். மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும். வாரத்திற்கு இரண்டுமுறை இவ்வாறு செய்யலாம் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.
அதேபோல் சந்தனப் பவுடருடன் கருப்பு உளுந்து பவுடரை கலந்து அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போல செய்யவும். இந்தக் கலவையை இரவில் உறங்கும் போது அப்ளை செய்துவிட்டு மறுநாள் காலையில் கழுவலாம். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர தழும்புகள் மறையும்.
துளசி இலையை எடுத்து நன்கு காய வைத்து பொடி செய்து அதில் மஞ்சள் தூள் கலந்து குளிப்பதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்யவும். நன்கு உலர்ந்த பிறகு குளித்தால் சில நாட்களிலேயே பருக்களும், வடுக்களும் காணாமல் போய் விடும்.
வெந்தைய கீரையை அரைத்து அதை முகத்தில் போட முகப்பருக்கள் மாறி முகம் மென்மையாக மாறும்.
சின்ன ஐஸ் க்யூப்பை எடுத்து அதனை பாலித்தீன் கவரில் போட்டு முகத்தில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.