தோசை மாவு சேர்த்து செய்யப்படும் கையேந்தி பவன் சட்னி ரெசிபி..ட்ரை பண்ணுங்க..இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!

தோசை மாவு இல்லாத தமிழ்நாடு வீடுகளே இருக்க முடியாது. பெரும்பாலான இந்திய வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக நிச்சயம் இட்டலி அல்லது தோசை இருக்கும். தோசை மாவு வைத்து இட்லி, தோசை, பணியாரம் செய்வோம். இன்னும் சிலர் போண்டா, தேன்மிட்டாய் என சில இனிப்பு கார வகைகளை செய்வோம்.

அதே மாதிரி இட்லி தோசைக்கு வித விதமா குழம்பு, சட்னி, சாம்பார், மற்றும் இட்லி பொடி கூட செய்வோம். சட்னின்னு சொன்னதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, புதினா சட்னி, அப்புறம் பூண்டு சட்னின்னு லிஸ்ட் போயிட்டே இருக்கும். ஆனா தோசை மாவு வைச்சே சட்னி செய்ய முடியும்ன்னு சொன்னா உங்களால நம்ப முடியுமா? ஆமா, முடியும் தான். எப்படி செய்யறதுன்னு இங்க பார்க்கலாம் வாங்க.

Rottukadai Thakkali Chutney How To Make a Rottukadai Toamto Onion Chutney Recipe

தேவையான பொருட்கள்:

- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 20
- பூண்டு - 5 பல்
- தக்காளி - 2
- வரமிளகாய் - 3
- காஷ்மீர் மிளகாய் - 3
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- புளித்த மாவு - ½ கரண்டி
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - சிறிதளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:

- சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் நீக்கி வைத்து கொள்ளவும்.
- நன்றாக பழுத்த இரண்டு தக்காளி பழத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், தோல் நீக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
- பின் அதனுடன் வரமிளகாய், காஷ்மீர் மிளகாய், நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து அரைக்கவும்.
- தேவைப்பட்டால் அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- பின் வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும், எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் ஒரு கொத்து பச்சை கருவேப்பிலையை சேர்க்கவும்.
- அதனுடன் உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நான் அரைத்து வைத்த கலவையை இதனுடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக கொதிக்க
விடவும்.
- ஒரு பாத்திரத்தில் அரை கரண்டி தோசை மாவை எடுத்து ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- பச்சை வாசம் போனதும் கரைத்த வைத்த மாவு கலவையை சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான தோசை மாவு சட்னி ரெடி!

Story first published: Friday, October 11, 2024, 21:04 [IST]
Desktop Bottom Promotion