பொடுகை தடுக்கவும் உங்க முடி அரிப்பை குறைக்கவும் இந்த வீட்டு வைத்தியங்கள ட்ரை பண்ணுங்க...!

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், உங்கள் தலைமுடி பிரச்சனைகளுக்கு சில இயற்கையான தீர்வுகள் உள்ளன

அதிகப்படியான க்ரீஸ், எண்ணெய், முடி உதிர்தல், கரடுமுரடான மற்றும் வறண்ட முடி உட்பட, குளிர்காலத்தில் சமாளிக்க உங்களுக்கு ஏற்கனவே போதுமான முடி பிரச்சினைகள் உள்ளன. அத்துடன் பயங்கரமான பொடுகு பிரச்சனையும் குளிர்காலத்தில் உங்களுக்கு ஏற்படும். பூஞ்சை, எரிச்சல், எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை மற்றும் மலாசீசியா - உச்சந்தலையில் உள்ள எண்ணெய்களை உண்பதால் பொடுகுத் தொல்லைக்குக் காரணமாக இருக்கின்றன. இது குளிர்காலத்தில் பொடுகு தொல்லையை மேலும் அதிகரிக்கிறது. ஏனெனில் உச்சந்தலையில் வறட்சி மற்றும் எரிச்சல் இருக்கும்.

simple-winter-home-remedies-to-curb-dandruff-in-tamil

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், உங்கள் தலைமுடி பிரச்சனைகளுக்கு சில இயற்கையான தீர்வுகள் உள்ளன. இக்கட்டுரையில், குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகுத் தொல்லையைக் குறைக்க உதவும் இயற்கை வைத்தியங்களைப் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்காலத்தில் பொடுகை போக்க வீட்டு வைத்தியம்

குளிர்காலத்தில் பொடுகை போக்க வீட்டு வைத்தியம்

பொடுகு உங்கள் முடி ஆரோக்கியத்தையும் மன உறுதியையும் கூட பாதிக்கும். பொடுகுக்கான மருத்துவப் பெயர் செபோரியா மற்றும் இது உச்சந்தலையை சேதப்படுத்தும் மற்றும் முடி உதிர்வையும் ஏற்படுத்தும். இது ஒரு வகையான பூஞ்சை தொற்று மற்றும் இது ஒழுங்கற்ற முடி பராமரிப்பு மற்றும் முடி கழுவுதல், மன அழுத்தம், பார்கின்சன், தவறான ஷாம்பு அல்லது ஷாம்பூவைப் பயன்படுத்தாததால் கூட ஏற்படலாம். குளிர்காலம் பொடுகுத் தொல்லையை மேலும் மோசமாக்குகிறது. ஏனெனில் சருமத்தின் pH சமநிலையை இழந்து சருமத்தை உலர வைக்கிறது.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் உச்சந்தலையை சுத்தப்படுத்துகிறது மற்றும் தேங்காய் எண்ணெய் அதற்கு ஊட்டமளிக்கிறது. இந்த இரண்டு பொருட்களும் சேர்ந்து பொடுகைத் தடுக்கவும் அகற்றவும் உதவுகின்றன. 2 தேக்கரண்டி சூடான தேங்காய் எண்ணெயுடன் சம அளவு எலுமிச்சை சாற்றை கலக்கவும். தலையில் மெதுவாக மசாஜ் செய்து 20 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்பு போட்டு முடியை அலச வேண்டும்.

பாதாம் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய்

பாதாம் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெய் பூஞ்சை காளான் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது மற்றும் வீட்டில் பொடுகு சிகிச்சைக்கு சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும். இது இறந்த சருமம் மற்றும் ரசாயனக் கட்டிகளை அகற்றவும் உதவுகிறது. மறுபுறம், பாதாம் எண்ணெய் பொடுகுக்கு காரணமான பூஞ்சை மற்றும் ஈஸ்டை சமநிலைப்படுத்த உதவுகிறது. 50 மில்லி பாதாம் எண்ணெயுடன் இரண்டு துளிகள் தேயிலை மர எண்ணெயைக் கலந்து உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பூ போட்டு முடியை அலச வேண்டும்.

கற்றாழை மற்றும் வேம்பு

கற்றாழை மற்றும் வேம்பு

இரண்டுமே சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த கலவையை உருவாக்குகின்றன. இவை ரெண்டும் சிறந்த கலவையாகும். ஏனெனில் அவை இனிமையான மற்றும் குளிர்ச்சியான பண்புகளை கொண்டுள்ளன. 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை 10-15 புதிய வேப்ப இலைகளுடன் கலக்கவும். மென்மையான கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியிலும் தடவி 30 நிமிடங்கள் விடவும். இப்போது பொடுகு எதிர்ப்பு ஷாம்பு கொண்டு கழுவவும்.

ஆப்பிள் சைடர் வினிகருடன் (ACV) வெந்தய ஹேர் மாஸ்க்

ஆப்பிள் சைடர் வினிகருடன் (ACV) வெந்தய ஹேர் மாஸ்க்

வெந்தயத்தில் நிகோடினிக் அமிலம் மற்றும் புரதம் உள்ளது. இது பொடுகைத் தடுக்கிறது மற்றும் உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது. எனவே முடி வளர்ச்சியையும் அதிகரிக்கலாம். மறுபுறம், ஆப்பிள் சைடர் வினிகர் பொடுகை கட்டுப்படுத்துகிறது மற்றும் முடியை பலப்படுத்துகிறது, மேலும் உச்சந்தலையின் pH அளவை சமன் செய்கிறது.

எப்படி பயன்படுத்துவது?: சுமார் 2 தேக்கரண்டி வெந்தய இலைகள் அல்லது விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அரைக்கவும். அதில் ½ தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் மற்றும் முடி மீது தடவி அரை மணி நேரம் விட்டு விடுங்கள். ஒரு நல்ல பொடுகு எதிர்ப்பு ஷாம்பூ போட்டு முடியை அலச வேண்டும். பின்னர் கண்டிஷனரைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.

வாழை, எலுமிச்சை மற்றும் தேன் மாஸ்க்

வாழை, எலுமிச்சை மற்றும் தேன் மாஸ்க்

வாழை, எலுமிச்சை மற்றும் தேன் ஆகிய இந்த மூன்று பொருட்களும் பொடுகை குணப்படுத்துகிறது. முடியை ஈரப்பதமாக்குகிறது மற்றும் பொடுகை அகற்றுவதன் மூலம் உச்சந்தலையை சுத்தப்படுத்துகிறது.

இதை எப்படி பயன்படுத்துவது?: ஒரு வாழைப்பழத்தை மசித்து, சில துளிகள் எலுமிச்சை மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து ஹேர் மாஸ்க்கை உருவாக்கவும். உச்சந்தலையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவவும். குளிர்காலத்தில் கூட வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் தலைமுடியை ஷாம்பூ போட்டு கழுவ உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொடுகு அதிகமாக இருந்தால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, December 8, 2022, 19:47 [IST]
Desktop Bottom Promotion