Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
கருகருன்னு உங்க முடி இருக்கவும் அடர்த்தியாவும் நீளமாவும் முடி வளரவும் அரசி நீரை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
நீங்கள் எப்பொழுதும் அரிசி தண்ணீரை நேரடியாக தலைமுடியில் பயன்படுத்தலாம். ஆனால் அதை மற்ற இயற்கை பொருட்களுடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சிக்கு அதன் நன்மைகளை அதிகரிக்கலாம்.
முடி உதிர்தல் என்பது இப்போது ஆண்,பெண் இருவருக்கும் இருக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை. ஒவ்வொரு பெண்ணும் பளபளப்பான, கருப்பான மற்றும் நீளமான முடியைப் பெற விரும்புகிறார்கள். ஆனால், முடி உதிர்தல், வலுவிழந்த முடி மற்றும் நரை முடி பிரச்சனை ஆகியவை அனைவரின் முடி ஆரோக்கியத்தையும் கனவையும் முற்றிலுமாக பாதிக்கிறது. பெண்கள் வயதாகும்போது, குறிப்பாக மாதவிடாய் நின்ற கட்டத்தில், மூன்றில் இரண்டு பங்கு முடி உதிர்தல் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் வெவ்வேறு ஷாம்புகள் மற்றும் முடி சிகிச்சைகளை முயற்சித்திருக்க வேண்டும்.

ஆனால், அவை உங்கள் முடியின் ஆரோக்கியத்தை பாதித்து, உங்களுக்கு பக்கவிளைவை ஏற்படுத்தலாம். இந்த பிரச்சனையை சரி செய்ய, உங்கள் சமையலறையிலும் தீர்வுகள் உள்ளன. அரிசி நீர் உங்கள் முடி வளர்ச்சிக்கு உதவுமா? அரசி நீர் உங்கள் தலைமுடிக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? அதை எப்படி செய்வது? என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

முடிக்கு அரிசி நீரின் நன்மைகள்
அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால்தான் உடல் எடையை குறைக்கும் பெண்கள் அதை உணவில் இருந்து விலக்குகிறார்கள். ஆனால் கார்போஹைட்ரேட் உங்கள் தலைமுடிக்கு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அரிசி நீரைப் பயன்படுத்துவது உங்கள் முடியின் வளர்ச்சிக்கு நல்லது.

முடி உடைவதைத் தடுக்கிறது
அரிசி நீரில் இனோசிட்டால் உள்ளது. இது ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். இது சேதமடைந்த முடியை சரிசெய்யவும், பின்னர் முடி வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகிறது. மேலும், இது முடியின் pH அளவை பராமரிக்கிறது மற்றும் முடி உடைவதைத் தடுக்கிறது. அரிசி நீரில் வைட்டமின் பி மற்றும் ஈ உள்ளது. இது முடிக்கு ஊட்டமளித்து அதன் அமைப்பை மேம்படுத்துகிறது. உங்கள் உச்சந்தலையை ஆற்றும் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் அரிசி நீர், பொடுகை குறைக்கவும் உதவும்.

முடி வளர்ச்சிக்கு அரிசி தண்ணீர்
இனோசிட்டால், அமினோ அமிலங்கள், ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பை வழங்குவதன் மூலம் அரிசி நீர் முடி வளர்ச்சிக்கு உதவும். இது முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உடைவதைத் தடுக்கும், நீண்ட மற்றும் ஆரோக்கியமான முடிக்கு வழிவகுக்கும்.

கூந்தலுக்கு அரிசி தண்ணீர் தயாரிப்பது எப்படி?
வீட்டில் அரிசி நீர் செய்வது மிக எளிதானது. ஒரு கப் அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி, இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு, அரிசியை வடிகட்டி, ஒரு கொள்கலனில் தண்ணீரை சேகரிக்கவும். தலைமுடியில் அரிசி நீரை பயன்படுத்த, அதை தடவி, உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். உங்கள் தலைமுடியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

மற்ற இயற்கை பொருட்களுடன் அரிசி தண்ணீர்
நீங்கள் எப்பொழுதும் அரிசி தண்ணீரை நேரடியாக தலைமுடியில் பயன்படுத்தலாம். ஆனால் அதை மற்ற இயற்கை பொருட்களுடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சிக்கு அதன் நன்மைகளை அதிகரிக்கலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெற ஒரே வழி சாப்பிடுவது மட்டுமல்ல, அதை உங்கள் தலைமுடி பராமரிப்பிலும் சேர்க்கலாம். அரிசி நீரில் நெல்லிக்காயை சேர்த்து பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவுகிறது.

வெந்தய விதைகள்
வெந்தய விதைகள் புரதத்தின் அதிக செறிவுக்கு பெயர் பெற்றவை. இது முடியை வலுப்படுத்த உதவும். உங்கள் தலைமுடி வலுவாக மாறியவுடன், முடி உதிர்வது ஒரு பிரச்சனையாக இருக்காது. இது அரிசி தண்ணீருடன் இணைந்தால் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. எனவே, முடி வளர்ச்சிக்கு நீங்கள் எப்போதும் ரோஸ்மேரி எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

அரிசி தண்ணீரால் ஒவ்வாமை ஏற்படுமா?
அரிசி நீர் பொதுவாக பாதுகாப்பானது. ஆனால் சிலருக்கு அது ஒவ்வாமையாக இருக்கலாம் என்று நிபுணர் கூறுகிறார். உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்பட்டால், உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மேலும், எண்ணெய்ப் பசை உள்ள பெண்கள் அரிசி நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அவர்களின் தலைமுடியை க்ரீஸாக மாற்றும். அவர்களின் முடியில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றும்.

எத்தனை முறை பயன்படுத்தலாம்?
அரிசி தண்ணீரை அதிகமாக பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடியை வலுப்படுத்தவும், உடைவதைத் தடுக்கவும் இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம். மேலும், பிற இயற்கை பொருட்களுடன் அரிசி நீரை சேர்த்து பயன்படுத்தும்போது, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இது பெரிதும் உதவும்.



Click it and Unblock the Notifications