Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
தலைவலியா இருக்கா? உங்க லவ்வரோட கைய கொஞ்ச நேரம் பிடிச்சுகங்க! தீராத வலி எல்லாம் தீரும்!
துணையின் கரங்களை பிடித்தால் தீராத வலியும் தீரும்
நமது அன்றாட வேலைகளாலும், மன அழுத்தம் காரணமாகவும் நமக்கு உடல் வலி மற்றும் தலைவலி ஏற்படலாம். இது நம்மை மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளிவிடும். சிலருக்கு டென்ஷன் ஆனாலே தலைவலி வந்து விடும்...

மற்றும் சிலருக்கு யாராவது பிடிக்காத விஷயத்தை பத்தி பேசுவதை கேட்டாலும் தலைவலி வந்துவிடும். இந்த உடல் மற்றும் தலைவலியை எப்படி போக்குவது என்பதை பற்றி காணலாம்.

வலி நிவாரணிகள்
நமக்கு உடல் வலி வந்தால் உடனடியாக கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணிகளை வாங்கி பயன்படுத்துவோம். இந்த பாட்டில்களில் கிடைக்கும் வலி நிவாரணிகளை வாங்கி பயன்படுத்துவது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே வலிநிவாரணிகளை அதிகம் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுவதில்லை.

துணையின் கைகள்!
உங்களுக்கு மன அழுத்தத்தினால் தலைவலி மற்றும் உடல் வலி இருந்தால் உங்களது துணையின் கைகளை பிடித்துக்கொள்வது சிறந்த தீர்வாக அமையும். கைகளை பிடித்துக்கொள்வது எப்படி சிறந்த தீர்வாக அமையும் என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு பிடித்தமானவர்களின் கரங்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை.

எப்படி சாத்தியம்?
ஒருவரின் சருமத்தின் மீது மற்றொருவரின் சருமம்படும் போது ஏராளமான வியக்கத்தக்க மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால் தான் நீங்கள் உங்களது துணையின் கைகளை பிடிக்கும் போது உங்களது மனதிற்கும் உடலுக்கும் இதம் கிடைக்கிறது. எனவே வலிகள் பறந்து போகும்.

எப்படி செய்ய வேண்டும்?
உங்களது துணையின் கைகளை பிடித்துக்கொண்டு ஒரு அமைதியான புல்வெளியில் நடைபோடுங்கள். இவ்வாறு செய்வதால் உங்களது இருதய துடிப்பில் வேறுபாடு தெரியும். வலிகளில் இருந்து நிவாரணம் கிடைத்து மனம் லேசாவதை உணர்வீர்கள்.

உயிரை கூட காப்பாற்றும்
இறந்து பிறந்த குழந்தை ஒன்று தனது தாயின் மார்சூட்டினால் உயிர் பெற்றுள்ளது. இது போன்ற பல மாயங்கள் சருமத்துடன் சருமம் சேர்வதால் உண்டாகியுள்ளது. இது கட்டிப்பிடி வைத்தியத்தின் ஒரு வகை என்று கூட சொல்லலாம்!



Click it and Unblock the Notifications