Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!
தலைமுடி உதிர்வதைக் குறித்து வருத்தப்படாதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வதால் அதிக மன வருத்தத்திற்கு உள்ளாவார்கள். முடி கொட்டுகிறது என்று நினைத்து வருந்தினால் தான் இன்னும் அதிகமாக முடி கொடடும்.
எனவே முடி உதிர ஆரம்பித்தால், வருத்தப்படாமல் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு, முடியை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள முயல வேண்டும்.
இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றினால், நிச்சயம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

பீர்க்கங்காய்
பீர்க்கங்காயின் சில துண்டுகளை தேங்காய் எண்ணெயில் போட்டு எண்ணெய் கருப்பாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் இறக்கி குளிர வைத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறையும்.

சீமைச்சாமந்தி
சீமைச்சாமந்தி பொடியை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி மீண்டும் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து, பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இந்த செயலை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி வலிமையடையும்.

கொய்யா இலை
கொய்ய இலைகள் சிறிதை தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். இதனாலும் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா பொடியை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சி அதிகரித்திருப்பதைக் காணலாம்.

சுரைக்காய்
சுரைக்காயை அரைத்து அதன் சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, பின் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் அடர்த்தி அதிகரித்திருப்பதைக் காணலாம்.

வால்நட்ஸ்
சிறிது வால்நட்ஸை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

மாங்காய் விதை
மாங்காயினுள் உள்ள விதையை பொடி செய்து, அத்துடன் நெல்லிப் பொடி சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் முடி உதிர்வது குறைந்து, வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறையும்.



Click it and Unblock the Notifications