Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
தலை அரிப்பு அதிகமா இருக்குதா? இதை படிங்க...

* முடியின் மயிர் கால்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் அழுக்குகள் அதிகமாக இருந்தாலும், தலையில் அரிப்பு ஏற்படும். ஆகவே அத்தகைய அரிப்புள்ள தலைக்கு pH-யின் அளவு 4.5-5.5-விற்கு இடையில் கலந்திருக்கும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால் ஸ்கால்ப் வறட்சியடையாமல் இருக்கும்.
* தலைக்கு ஹேர் டை மற்றும் மற்ற கெமிக்கல்களை பயன்படுத்தினாலும், அரிப்புகள் ஏற்படும். ஆகவே அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
* ஸ்கால்ப் மற்றும் கூந்தல் வறண்டு காணப்படுபவர்கள் எப்போதும் சூடான நீரில் தலையை அலச கூடாது. அதுமட்டுமல்லாமல் ஹேர் ட்ரையரை பயன்படுத்தினாலும், ஸ்கால்ப் வறண்டுவிடும். மேலும் கூந்தலின் முனையில் வெடிப்புகளும் ஏற்படும்.
* வெளியே வெயிலில் செல்லும் போது கூந்தலை துணியால் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும். சூரிய வெப்பம் தலையில் படுவதால், தலையில் இருக்கும் எண்ணெய் வறண்டுவிடும். ஆகவே துணியால் சுற்றிக் கொண்டு சென்றால், எந்த ஒரு அழுக்கும் தலையை எட்டிக்கூட பார்க்காது.
* பட்டர் ஒரு சிறந்த எண்ணெய் பசை நிறைந்துள்ள பொருள். ஆகவே இத்தகைய பட்டரை தலையில் தடவினால் வறண்ட சருமம் சுத்தமாக போய்விடும். ஆகவே அந்த பட்டரை ஆலிவ் ஆயிலுடன் கலந்து கூந்தலுக்கு தடவினால், ஆரோக்கியமான கூந்தலோடு, வறட்சியற்ற கூந்தலையும் காணலாம்.
* பொடுகு இருப்பதும் தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணம். ஆகவே அதனை நீக்க வேப்பிலை அல்லது எலுமிச்சை சாற்றை தலையில் பொடுகு உள்ள இடத்தில் தடவி, குளித்தால், பொடுகு போய்விடும்.
* தலையில் பேன்கள் இருந்தால் கூட, அரிப்புகள் ஏற்படும். அத்தகையவற்றை நீக்க புளித்த தயிரை தலைக்கு தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளித்தால், பேன் போவதோடு, பொடுகும் போய்விடும். பொடுகு போய்விட்டால், பின் அரிப்பு ஏற்படாது.
* வேப்ப எண்ணெயை லாவண்டர் மற்றும் ரோஸ் மேரி எண்ணெயுடன் கலந்து தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி குறைந்து, அரிப்பு நீங்கிவிடும்.
ஆகவே மேற்கூறிய வழிகளில் தலை முடியை பராமரித்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக உதிராமல் வளரும்.



Click it and Unblock the Notifications











