Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
தலை அரிப்பு அதிகமா இருக்குதா? இதை படிங்க...

* முடியின் மயிர் கால்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் அழுக்குகள் அதிகமாக இருந்தாலும், தலையில் அரிப்பு ஏற்படும். ஆகவே அத்தகைய அரிப்புள்ள தலைக்கு pH-யின் அளவு 4.5-5.5-விற்கு இடையில் கலந்திருக்கும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால் ஸ்கால்ப் வறட்சியடையாமல் இருக்கும்.
* தலைக்கு ஹேர் டை மற்றும் மற்ற கெமிக்கல்களை பயன்படுத்தினாலும், அரிப்புகள் ஏற்படும். ஆகவே அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
* ஸ்கால்ப் மற்றும் கூந்தல் வறண்டு காணப்படுபவர்கள் எப்போதும் சூடான நீரில் தலையை அலச கூடாது. அதுமட்டுமல்லாமல் ஹேர் ட்ரையரை பயன்படுத்தினாலும், ஸ்கால்ப் வறண்டுவிடும். மேலும் கூந்தலின் முனையில் வெடிப்புகளும் ஏற்படும்.
* வெளியே வெயிலில் செல்லும் போது கூந்தலை துணியால் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும். சூரிய வெப்பம் தலையில் படுவதால், தலையில் இருக்கும் எண்ணெய் வறண்டுவிடும். ஆகவே துணியால் சுற்றிக் கொண்டு சென்றால், எந்த ஒரு அழுக்கும் தலையை எட்டிக்கூட பார்க்காது.
* பட்டர் ஒரு சிறந்த எண்ணெய் பசை நிறைந்துள்ள பொருள். ஆகவே இத்தகைய பட்டரை தலையில் தடவினால் வறண்ட சருமம் சுத்தமாக போய்விடும். ஆகவே அந்த பட்டரை ஆலிவ் ஆயிலுடன் கலந்து கூந்தலுக்கு தடவினால், ஆரோக்கியமான கூந்தலோடு, வறட்சியற்ற கூந்தலையும் காணலாம்.
* பொடுகு இருப்பதும் தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணம். ஆகவே அதனை நீக்க வேப்பிலை அல்லது எலுமிச்சை சாற்றை தலையில் பொடுகு உள்ள இடத்தில் தடவி, குளித்தால், பொடுகு போய்விடும்.
* தலையில் பேன்கள் இருந்தால் கூட, அரிப்புகள் ஏற்படும். அத்தகையவற்றை நீக்க புளித்த தயிரை தலைக்கு தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளித்தால், பேன் போவதோடு, பொடுகும் போய்விடும். பொடுகு போய்விட்டால், பின் அரிப்பு ஏற்படாது.
* வேப்ப எண்ணெயை லாவண்டர் மற்றும் ரோஸ் மேரி எண்ணெயுடன் கலந்து தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி குறைந்து, அரிப்பு நீங்கிவிடும்.
ஆகவே மேற்கூறிய வழிகளில் தலை முடியை பராமரித்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக உதிராமல் வளரும்.



Click it and Unblock the Notifications