Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
சுருட்டை முடியை ஈஸியாக பராமரிக்க!!

எண்ணெய் : அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக சுருட்டை முடிக்கான சிகிச்சையை அழகு நிலையங்களுக்குச் சென்று செய்து கொண்ட பின்னர், கூந்தலுக்கு முறையாக எண்ணெய் தடவாமல் இருந்தால் கூந்தலானது சுருட்டையை இழந்துவிடும். ஆகவே தினமும் 4-5 துளிகள் பாதாம் எண்ணெயால் அரை மணிநேரம் நன்கு மசாஜ் செய்து, பின்னர் கூந்தலை அலச வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் எண்ணெய் பசையுடன் இல்லாமல், அழகாக ஆரோக்கியமாக இருக்கும்.
குளிர்ந்த தண்ணீர் : எப்போதும் குளிர்ந்த தண்ணீராலேயே கூந்தலை அலச வேண்டும். ஏனெனில் சுருட்டை முடியாக மாற்றிய பின்னர், சுடு தண்ணீர் சுருட்டையை போக்கிவிடும். ஆகவே குளிர்ந்த நீரால் கூந்தலை அலசும் போது, கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, கூந்தலும் உதிராமல் இருக்கும். மேலும் கூந்தலை துணியால் துடைக்கும் போது மென்மையாக துடைக்க வேண்டும்.
ரோஸ்மேரி மற்றும் முட்டை பேக் : சுருட்டை முடியாக மாற்றியவர்கள், ரோஸ்மேரி மற்றும் முட்டை பேக்கை செய்தால், முடியானது நன்றாக இருக்கும். அதற்கு இரண்டு முட்டை, ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அதில் 4-5 துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை விட்டு, கூந்தலுக்கு தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். இதனால் அதில் இருக்கும் முட்டை கூந்தலுக்கு எண்ணெய் பசையை தருவதோடு, ரோஸ்மேரி சுருட்டையை பாதுகாக்கும். ஆகவே இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முடியானது நன்றாக சுருட்டையோடு காணப்படும்.
கற்றாழை : இரண்டு டேபிள் ஸ்பூன் காற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அதனை தலைக்கு நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதனால் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, ஈரப்பசையோடும் இருக்கும். வேண்டுமென்றால் கற்றாழையால் ஆன ஹேர் பேக்குடன் 4-5 துளிகள் ஜிஜோபா எண்ணெய் விட்டு, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளிக்கலாம். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.
புதினா எண்ணெய் : புதினா சுருட்டை முடியை பராமரிக்க உதவும் ஒரு சிறந்த பொருள். 1 டேபிள் ஸ்பூன் தேன், 4-5 துளி புதினா எண்ணெய் மற்றும் 3-4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு நன்கு கலந்து, கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற விடவும். பின் அதனை ஷாம்புவால் அலச வேண்டும். இதனால் முதலில் இருந்ததை விட தற்போது சுருட்டை முடியானது அழகாக பொலிவோடு இருக்கும்.
எனவே இயற்கையில் சுருட்டை முடி இல்லாதவர்களுக்கு, மேற்கூறியவை ஒரு சிறந்த பராமரிப்பு முறைகள். இவ்வாறெல்லாம் செய்தால் கூந்தலானது சுருட்டையோடு காணப்படுவதோடு, ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications