Just In
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 4 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சுருட்டை முடியை ஈஸியாக பராமரிக்க!!
எண்ணெய் : அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக சுருட்டை முடிக்கான சிகிச்சையை அழகு நிலையங்களுக்குச் சென்று செய்து கொண்ட பின்னர், கூந்தலுக்கு முறையாக எண்ணெய் தடவாமல் இருந்தால் கூந்தலானது சுருட்டையை இழந்துவிடும். ஆகவே தினமும் 4-5 துளிகள் பாதாம் எண்ணெயால் அரை மணிநேரம் நன்கு மசாஜ் செய்து, பின்னர் கூந்தலை அலச வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் எண்ணெய் பசையுடன் இல்லாமல், அழகாக ஆரோக்கியமாக இருக்கும்.
குளிர்ந்த தண்ணீர் : எப்போதும் குளிர்ந்த தண்ணீராலேயே கூந்தலை அலச வேண்டும். ஏனெனில் சுருட்டை முடியாக மாற்றிய பின்னர், சுடு தண்ணீர் சுருட்டையை போக்கிவிடும். ஆகவே குளிர்ந்த நீரால் கூந்தலை அலசும் போது, கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, கூந்தலும் உதிராமல் இருக்கும். மேலும் கூந்தலை துணியால் துடைக்கும் போது மென்மையாக துடைக்க வேண்டும்.
ரோஸ்மேரி மற்றும் முட்டை பேக் : சுருட்டை முடியாக மாற்றியவர்கள், ரோஸ்மேரி மற்றும் முட்டை பேக்கை செய்தால், முடியானது நன்றாக இருக்கும். அதற்கு இரண்டு முட்டை, ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அதில் 4-5 துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை விட்டு, கூந்தலுக்கு தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். இதனால் அதில் இருக்கும் முட்டை கூந்தலுக்கு எண்ணெய் பசையை தருவதோடு, ரோஸ்மேரி சுருட்டையை பாதுகாக்கும். ஆகவே இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முடியானது நன்றாக சுருட்டையோடு காணப்படும்.
கற்றாழை : இரண்டு டேபிள் ஸ்பூன் காற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அதனை தலைக்கு நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதனால் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, ஈரப்பசையோடும் இருக்கும். வேண்டுமென்றால் கற்றாழையால் ஆன ஹேர் பேக்குடன் 4-5 துளிகள் ஜிஜோபா எண்ணெய் விட்டு, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளிக்கலாம். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.
புதினா எண்ணெய் : புதினா சுருட்டை முடியை பராமரிக்க உதவும் ஒரு சிறந்த பொருள். 1 டேபிள் ஸ்பூன் தேன், 4-5 துளி புதினா எண்ணெய் மற்றும் 3-4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு நன்கு கலந்து, கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற விடவும். பின் அதனை ஷாம்புவால் அலச வேண்டும். இதனால் முதலில் இருந்ததை விட தற்போது சுருட்டை முடியானது அழகாக பொலிவோடு இருக்கும்.
எனவே இயற்கையில் சுருட்டை முடி இல்லாதவர்களுக்கு, மேற்கூறியவை ஒரு சிறந்த பராமரிப்பு முறைகள். இவ்வாறெல்லாம் செய்தால் கூந்தலானது சுருட்டையோடு காணப்படுவதோடு, ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் இருக்கும்.