Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா?
Hair Care Tips: கூந்தல் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. தற்போதைய தலைமுறையினரில் ஆண்-பெண் இருவருமே கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் முடி ஆரோக்கியத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமுறை நாம் மட்டுமே அல்ல. ஏனெனில் கடந்த காலத்திலும் மக்கள் கூந்தலை பராமரிக்க அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

உலகெங்கிலும் உள்ள நாகரிகங்கள் தங்கள் கூந்தலின் தரத்தை சிறப்பாகப் பராமரிக்க, தங்களுக்கென தனித்துவமான மற்றும் பயனுள்ள சடங்குகளைக் கொண்டிருந்தன. இந்த பதிவில் நமது நவீன கால வழக்கங்களில் இன்றும் பயன்படுத்தக்கூடிய, நான்கு வரலாற்று நாகரிகங்களின் கூந்தல் பராமரிப்பு இரகசியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். பண்டைய எகிப்து முதல் இந்தியா வரை, இன்றும் பின்பற்றக்கூடிய அவர்களின் பண்டைய கூந்தல் பராமரிப்பு முறைகளைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியா
பண்டைய இந்தியாவில், கூந்தல் மற்றும் சருமப் பராமரிப்பு முறைகள் ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அது மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஒட்டுமொத்த சமநிலையை வலியுறுத்தியதுடன், சமநிலை எனும் எளிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆயுர்வேதம், கூந்தல் இழைகளை உள்ளிருந்து வெளிவரை ஊட்டமளிக்க இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்ட முக்கிய மூலப்பொருட்கள் நெல்லிக்காய், சீயக்காய் மற்றும் வேம்பு ஆகும். இந்த மூலிகைகள் பொதுவாக தேங்காய், கடுகு அல்லது நல்லெண்ணெயுடன் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டன.
சீனா
பண்டைய சீனாவில், கூந்தல் பராமரிப்பு சீன மருத்துவத்தில் வேரூன்றியிருந்தது. அங்கு, ஒட்டுமொத்த சமநிலையை அடைவதற்கே அக்கலாச்சாரம் முக்கியத்துவம் அளித்தது. பண்டைய சீன மக்கள் கோஜி பெர்ரி, ஹே ஷௌ வூ மற்றும் ஜின்ஸெங் போன்ற பொருட்களைக் கொண்ட மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தினர். இவை கூந்தல் இழைகளை வலுப்படுத்தி, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன. இந்த பாரம்பரிய மூலிகைகள் பெரும்பாலும் டானிக்குடன் கலக்கப்பட்டு, கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் ஒரு இயற்கை தீர்வாக வழங்கப்பட்டன.
கிரீஸ்
பண்டைய கிரேக்க கலாச்சாரத்தில், அலகுபடுத்திக் கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேலும் அது ஒருவரின் அன்றாட வழக்கத்தின் இன்றியமையாத பகுதியாகவும் கருதப்பட்டது. நன்கு பராமரிக்கப்பட்ட கூந்தலும், நல்ல ஆரோக்கியமும் உயர்ந்த சமூக அந்தஸ்தின் அடையாளம் என்று கிரேக்க மக்கள் நம்பினர். கிரேக்கர்களின் கூந்தல் பராமரிப்பு, ஈரப்பதமூட்டும் மற்றும் மென்மையாக்கும் பண்புகளைக் கொண்ட ஆலிவ் எண்ணெயின் பயன்பாட்டை மையமாகக் கொண்டிருந்தது. அது கூந்தலுக்கு மென்மையான பளபளப்பையும் அளித்ததுடன், பொதுவாக ரோஸ்மேரி மற்றும் லாவெண்டருடன் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க ஆண்களும் பெண்களும் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த சில சிகை அலங்காரங்களையும் அணிகலன்களையும் அணிந்திருந்தனர். எனவே கிரேக்க நாகரிகம் கூந்தல் பராமரிப்பு சடங்குகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டது.
எகிப்து
பண்டைய எகிப்து பிரமிடுகள் மற்றும் பாரோக்களின் பூமியாக இருந்தது. அவர்கள் பிரமிக்க வைக்கும் தோற்றம் கொண்டவர்கள் என்றும், கூந்தல் பராமரிப்பின் சிறந்த முன்னோடிகள் என்றும் நம்பப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை, கூந்தல் என்பது வெறும் உடல் சார்ந்த அம்சம் மட்டுமல்ல, அது அந்தஸ்து மற்றும் உயிர்ச்சக்தியின் சின்னமாகவும் விளங்கியது. எகிப்திய கூந்தல் பராமரிப்பில் முக்கியமாக ஆலிவ் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் மற்றும் தேன் ஆகியவை அடங்கியிருந்தன. இந்த பொருட்கள் அவற்றின் ஈரப்பதமூட்டும் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகளுக்காகப் பெரிதும் மதிக்கப்பட்டன. மேலும், உச்சந்தலையின் இயற்கையான எண்ணெயைப் பாதிக்காமல், அழுக்கு மற்றும் அசுத்தங்களை அகற்றுவதற்காக அவர்கள் இயற்கை சுத்திகரிப்பான்களையும், களிமண்ணையும் பயன்படுத்தினர்.



Click it and Unblock the Notifications
