Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
கண்கள் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்க சில டிப்ஸ்....
இங்கு கண்கள் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருவரது அழகை அதிகரித்துக் காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அத்தகைய கண்களை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொண்டால் தான், அழகு மேம்பட்டு காணப்படும். கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், கண்களைச் சுற்றியுள்ள அசிங்கமான கருவளையங்களைப் போக்கவும் பல இயற்கை வழிகள் உள்ளன.

இங்கு அவற்றில் சில கொடுக்கப்பட்டுள்ளன. சரி, இப்போது கண்களை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்வதற்கான சில வழிகளைக் காண்போம்.

டிப்ஸ் #1
தினமும் இரவில் படுக்கும் முன் 2 துளிகள் விளக்கெண்ணெயை கண்களைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர, கண்கள் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

டிப்ஸ் #2
கண்கள் நன்கு பளிச்சென்று தெரிவதற்கு, வாரத்திற்கு ஒரு முறை 2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெயை கண்களில் விட வேண்டும்.

டிப்ஸ் #3
சிறிது பாதாமை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி வர, கண்களைச் சுற்றியுள்ள அசிங்கமான கருவளையங்கள் நீங்கும்.

டிப்ஸ் #4
தினமும் கண் பயிற்சிகளை செய்து வருவதன் மூலம், கண் பார்வை மேம்படும்.

டிப்ஸ் #5
தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மீது வைத்து 10 நிமிடம் அமர, கண்களில் உள்ள சோர்வு மற்றும் கருவளையங்கள் நீங்கும்.

டிப்ஸ் #6
உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி கண்களின் மீது வைத்தாலும், கருவளையங்கள் நீங்கும்.



Click it and Unblock the Notifications