Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
உடலுக்கு பொலிவைத் தரும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி இருக்கிறீர்களா?
நம்முள் பெரும்பலோனோர் வெளித்தோற்றமான முகம், கைகால் மட்டுமே அழகு படுத்திக் கொள்ள விரும்புகிறோம். இதனால்தான் உடலில் சருமம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நிறமாக காணப்படும்.

வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பொலிவுபடுத்திக் கொண்டால், சருமம் மிக மிருதுவாக இருக்கும். நச்சுக்கள் வெளியேறி, சருமம் புத்துயிர் பெறும். இங்கே கூறப்பட்டுள்ள ஒவ்வொரு ஸ்க்ரப்பும் ஒவ்வொருவிதமான பயனைத் தருகின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வாரம் உபயோகிக்கலாம். இதனால் சருமம் மிக அழகாக மிளிரும்.
ரத்த ஓட்டம் அதிகரிக்க :
இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். உடல் முழுவதும் உள்ள சரும பாதிப்புகளை சரி செய்யும்.
தேவையானவை :
அரிசி மாவு - 1 கப்
புதினா இலை அரைத்தது - 1 கப்
கற்பூரம் - 1 டீஸ்பூன்
ஓட்ஸ் - 1 கப்
எல்லாவற்றையும் கலந்து, அவற்றில் சிறிது ரோஸ் வாட்டரையும், சிறிது காய்ச்சாத பாலையும் சேர்த்து, நன்றாக கலக்கவும். இதனை குளிக்கும்போது உடல் முழுவதும் தேய்த்து, 5 நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், நாள் முழுவதும் புத்துணர்வோடு இருப்பீர்கள். சருமம் மென்மை பெறும்.
நச்சுக்கள் வெளியேற :
கடல் உப்பு - 1 கப்
ஆலிவ் எண்ணெய் - 1 கப்
ஜெரேனியம் எண்ணெய் - 10 துளிகள்.
இவற்றை ஒன்றாக கலந்து உடல் மற்றும் பாதத்தில் தேயுங்கள். 10 நிமிடம் கழித்து குளித்தால், நச்சுக்கள் வெளியேறிவிடும். பாதத்தில் உள்ள வெடிப்பு மறைந்து மென்மையான பாதம் கிடைக்கும்.
உடலுக்கு ஊட்டம் தர :
பாதாம் பவுடர் - 1 கப்
பார்லி மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
சந்தனப் பொடி - 2 டீஸ்பூன்
இவற்றை பாலுடன் கலந்து உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். 10 நிமிடம் கழித்து குளிக்கவும். இவை உடலுக்கு போஷாக்கு தரும். சுருக்கங்கள் மறைத்து போகும். இளமையான சருமத்தை பெறுவீர்கள்.
வாரம் ஒரு முறை உடலுக்கு இந்த ஸ்க்ரப் உபயோகித்து வந்தால் உடலில் உண்டாகும் சரும அலர்ஜி, பாதிப்பு, கரும்புள்ளி, அழுக்குகள் எல்லாம் விடைபெறும். சருமம் மிளிரும். மிருதுவான மென்மையான சருமம் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications



