Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
அழகைப் பாழாக்கும் கருவளையங்கள் வராமல் இருக்க சில வழிகள்!!!
ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. கண்கள் அழகாக பொலிவுடன் இல்லாவிட்டால், முகமே வாடிப் போய் காணப்படும். அதிலும் கருவளையங்கள் வந்தால், முகத்தின் அழகு முற்றிலும் கெட்டுப் போய்விடும். இந்த கருவளையங்கள் வருவதற்கு முதன்மையான காரணம், சரியாக தூங்காமல், நீண்ட நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி போன்றவற்றைப் பார்ப்பது தான்.
உங்களுக்கு கருவளையம் வருவது போல் இருந்தால், அவை தீவிரமாகாமல் இருக்க ஒருசிலவற்றை அன்றாடம் தவறாமல் செய்து வர வேண்டும். இங்கு கருவளையம் வராமல் இருக்க செய்ய வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி வாருங்கள்.

கண்களைச் சுற்றி ஈரப்பதம்
கண்களைச் சுற்றியுள்ள இடம் மிகவும் மென்மையானது. முகத்திலேயே அது தான் மிகவும் மென்மையான இடமும் கூட. இவ்விடத்தில் எவ்வித எண்ணெய் சுரப்பிகளும் இல்லை. ஆகவே தினமும் இரவில் கண்களைச் சுற்றி ஜெல் அல்லது கோல்ட் க்ரீம் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்களைச் சுற்றி கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கருவளையங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஃபேஷ் வாஷ் வேண்டாம்
கண்களுக்கு போட்டுள்ள கண்மையை நீக்க, சாதாரணமாக முகத்தைக் கழுவ பயன்படுத்தும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். ஏனெனில் ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தும் போது, அவை கண்களுக்கு அடியில் அரிப்பு மற்றும் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே கண் மையை நீக்க ஈரமான பஞ்சினைக் கொண்டோ அல்லது டிஷ்யூ பேப்பரைக் கொண்டோ அல்லது ஸ்பெஷல் ஐ மேக்கப் ரிமூவரைக் கொண்டோ துடைத்து எடுக்கவும். முக்கியமாக மென்மையாக துடைத்து எடுக்க வேண்டும்.

கை வைத்தியம்
தினமும் வெள்ளரிக்காய் துண்டை கண்களின் மேல் 10 நிமிடம் வைக்க வேண்டும். அல்லது நீரில் ஊற வைத்த டீ பேக்கை ப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து, பின் கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், கண்களில் உள்ள சோர்வு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் கருவளையங்கள் இல்லாமல் இருக்கும்.

நல்ல தூக்கம்
தூக்கமின்மை கருவளையங்களை ஏற்படுத்தும். எனவே தினமும் தவறாமல் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பால்
தினமும் 2-3 மூன்று முறை முகத்தை பால் கொண்டு துடைத்து, முக்கியமாக கண்களைச் சுற்றி துடைத்து எடுத்தால், அழுக்குகள் அனைத்தும் நீங்குவதோடு, பாலில் உள்ள இயற்கையான எண்ணெய் கண்களைச் சுற்றியுள்ள இடங்களுக்கு ஈரப்பதத்தை வழங்கும்.



Click it and Unblock the Notifications