Latest Updates
-
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க..
இளவரசி போல ஜொலிக்கும் சீதா ராமம் ஹீரோயின் மிருணாள் தாக்கூரின் அழகு ரகசியம் இதுதானாம்..நீங்களும் ட்ரை பண்ணுங்க!
தொலைக்காட்சி நடிகையாக இருந்து வெற்றிகரமான திரைப்பட நட்சத்திரமாக மிளிரும் மிருணாள் தாக்கூரின் அழகின் ரகசியம் என்ன என்று யோசிக்காத நபர்களே இல்லை எனலாம். அனைவரையும் ஈர்க்கும் பேரழகை கொண்டிருக்கும் மிருணாள் தாக்கூருக்கு இந்திய முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
2014 ஆம் ஆண்டு வெளிவந்த 'கும்கும் பாக்யா' என்ற பிரபல ஹிந்தி தொலைக்காட்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தவர் மிருணாள் தாக்கூர். இந்த சீரியல் தமிழில் 'இனிய இரு மலர்கள்' என்ற பெயரில் வெளியானது. இந்த சீரியலில் மிருணாள் தன் அழகான தோற்றத்தாலும், திறமையான நடிப்பாலும் பெரும்பலான மக்களின் மனதில் அப்போதே இடம் பிடித்தார்.

அதைதொடர்ந்து, தொலைக்காட்சி விளம்பரங்களில் அவர் பெற்ற வெற்றி, வருடங்கள் முழுவதும் கணிசமான அளவு புகழைக் குவிக்க உதவியது. 'சூப்பர் 30' படத்தில் நடித்ததன் காரணமாக, அவர் பாலிவுட் துறையில் நன்கு அறியப்பட்டார். சென்ற ஆண்டு துல்கர் சால்மன், மிருணாள் தாக்கூர் நடித்து வெளியான பான் இந்தியா படமான "சீதா ராமம்" மூலம் இந்திய அளவில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வளம் வருகிறார்.
31 வயதான மிருணாள் தாக்கூர், சீதா ராமம் படத்தில் இளவரசியாக நடித்து இருப்பார். அவர் தோற்றமும் அழகும், திறமையான நடிப்பாலும் உண்மையான இளவரசி போல திரையில் காட்சியளிப்பார். பெரும்பலான ஆண்கள் மிருணாளின் அழகிற்கு அடிமையாக உள்ளனர். பெண்கள் இளவரசி போல ஜொலிக்கும் சருமத்தை எப்படி பெற்றிருக்கிறார் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நீங்களும் அப்படி யோசிப்பவர்களில் ஒருவரா? அப்படியானால், இக்கட்டுரையில், மிருணாள் தாக்கூரின் ஜொலிக்கும் அழகிற்கான ரகசியம் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த அழகு குறிப்புகளை நீங்களும் பின்பற்றி பொலிவான சருமத்தை பெறலாம்.
மிருணால் தாக்கூர், இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதில் கவனமாக இருப்பார். அந்த வகையில், கற்றாழையின் பண்புகளில் உறுதியான நம்பிக்கையை வைத்திருக்கிறார். கற்றாழை உங்கள் சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறந்த முடிவுகளைப் பெறுவதற்காக மிருணாளும் சருமத்திலும், தலைமுடியிலும் கற்றாழையைப் பயன்படுத்துகிறார்.
மிருணாள் தாக்கூர் தினமும் காலையில் எழுந்தவுடன் முகத்தைக் கழுவி மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துகிறாள். சன்ஸ்கிரீனை தனது முகத்தில் பயன்படுத்த அவர் ஒருபோதும் தவறியாதே இல்லை என்கிறார்.
அவரது தோல் பராமரிப்புப் பொருட்களில் வைட்டமின் சி மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். அவர் பயன்படுத்தும் ஒப்பனை மற்றும் பிஸியான வழக்கத்தின் விளைவாக சருமம் நீரிழப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளது. வைட்டமின் சி கூறு சருமத்திற்கு ஆரோக்கியமான தோற்றத்தையும், கதிரியக்க உணர்வையும் கொடுக்க உதவுகிறது.
தனது முகம் மற்றும் உடல் முழுவதும் மாய்ஸ்சரைசர்கள் மற்றும் சீரம்களை அவர் நன்றாக பயன்படுத்துகிறார். அலோ வேரா, தக்காளி மற்றும் பிற பழங்கள் போன்ற அனைத்து இயற்கைக் கூறுகளையும் கொண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகளை மட்டும்தான் அவர், சருமத்தில் பயன்படுத்துகிறார்.
கூடுதலாக, அவர் முக யோகா பயிற்சியையும் செய்து வருகிறார். இது முகத்திற்கு ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது மற்றும் ஒரு பிரகாசமான தோற்றத்தை அளிக்கிறது. எப்போதும் மேக்-அப்களை அகற்றி முகத்தை நன்றாக சுத்தம் செய்கிறார்.
முகப்பரு இல்லாத சருமத்திற்கு மிருணால் தாக்கூர் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்கைதான் பயன்படுத்துகிறார். ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து, 1 டீஸ்பூன் பழுப்பு சர்க்கரை சேர்த்து, அதை நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி, உங்கள் விரல்களால் மெதுவாக தேய்க்கவும். இது இறந்த சரும செல்களை அகற்றி, சருமத்தை பிரகாசமாக ஜொலிக்க வைக்கிறது.



Click it and Unblock the Notifications












