84 ஆண்டுகளுக்கு பின் சுக்கிரன் உருவாக்கும் நவபஞ்ச ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..

Venus Make Navpancham Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அவ்வாறு ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் கிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 26 நாட்கள் வரை இருப்பார்.

இப்படிப்பட்ட சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். சுக்கிரன் ஒவ்வொரு முறை தனது நிலையை மாற்றும் போதும், அதன் தாக்கம் வாழ்வில் இந்த அம்சங்களில் தெரியும். அந்த வகையில் அக்டோபர் 09 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன். சுக்கிரன் கன்னி ராசியில் பயணிக்கும் போது யுரேனஸ் உடன் சேர்ந்து அக்டோபர் 14 ஆம் தேதி நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

Venus Make Navpancham Rajyog 2025 List Of Lucky Zodiac Signs

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதிலும் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும், புதிய வேலை வாய்ப்புக்களையும், எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். இப்போது சுக்கிரன் மற்றும் யுரேனஸால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். செல்வம் குவியும். நீண்ட கால சவால்கள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகளும், கருத்து வேறுபாடுகளும் முடிவுக்கு வரும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் யுரேனஸால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் வாழ்வில் பல அம்சங்களில் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக ஆடம்பரமான பொருட்களை வாங்கலாம். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக வாழ்க்கையில் சந்தித்த தடைகள் நீங்கும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் யுரேனஸால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் வெற்றிகள் குவியும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 2, 2025, 15:26 [IST]
Desktop Bottom Promotion