Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
சனி மகாதசையால் அடுத்த 19 வருடத்திற்கு இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Shani Mahadasha Effects Will Last For 19 Years: கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் தான் சனி. ஜோதிடத்தில் சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இதனால் இந்த சனியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் நீண்ட காலம் நீடித்திருக்கும்.
சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். அதுவும் ஒருவர் நல்ல செயல்களை செய்தால் ஆண்டியையும் அரசனாக்குவார். அதுவே மோசமான செயல்களை செய்தால் அரசனையும் ஆண்டியாக்குவார்.

சனியின் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி மட்டும் ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. சனியின் மகாதசையும் ஒருவரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சனி மகாதசை காலத்தில் ஒருவர் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு சனி மகாதசை காலமானது அதிர்ஷ்டமாக இருக்கும்.
ஜோதிடத்தின் படி சனியின் மகாதசை காலமானது 19 ஆண்டுகள் வரை இருக்கும். இக்காலத்தில் மகாதசையின் பலன்களானது ஒருவரது செயல்களுக்கு ஏற்ப சனி பகவானால் வழங்கப்படும். பொதுவாக சனியின் மகாதசை காலத்தில் மோசமான பலன்கள் நிறைய கிடைக்கும். அதுவும் நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும், வேலைகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், நீதிமன்ற வழக்குகளால் அலைய வேண்டியிருக்கும், எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சனி மகாதசையின் தாக்கம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும், சனியின் நிலை பொறுத்து வேறுபடும். அதில் கெடு பலன்கள் மட்டுமின்றி, நற்பலன்களையும் பெறக்கூடும். இப்போது சனி மகாதசையால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி மகாதசையால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆசியால் இக்காலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும், செல்வந்தர்களாகவும் மாறுவார்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் குறைவாக பேசினாலும், அவர்களின் எழுத்துக்கள் மற்றவர்களை பேசவிடாமல் தடுக்கும். முக்கியமாக சனி மகாதசை காலத்தில் இந்த ராசிக்காரர்கள் புகழுடன் நல்ல பலன்களையும் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 4 மற்றும் 5 ஆம் வீட்டின் அதிபதி தான் சனி பகவான். சனி மகாதசையானது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அதிக சுயமரியாதையுடன், லட்சியத்தையும் கொண்டிருப்பார்கள். நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பார்கள். நிதி நிலையும் நன்றாக இருக்கும். மனதில் எவ்வித குழப்பங்களும் இல்லாமல் தெளிவான மனதுடன் எந்த ஒரு முடிவையும் எடுப்பார்கள் மற்றும் இந்த முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
தனுசு
தனுசு ராசியின் 2 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதி தான் சனி. இந்த சனி மகாதசை காலத்தில் தனுசு ராசிக்காரர்கள் கடினமாக உழைப்பார்கள் மற்றும் நல்ல எண்ணங்களுடன் நிறைந்திருப்பார்கள். இதனால் கடின உழைப்புக்கான பலன் உடனே கிடைக்கும் மற்றும் சனி பகவானின் ஆசியால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











