Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
இந்த 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் கடன் பிரச்சினையால் கஷ்டப்படுவார்களாம் ...!
ஒரு மனிதருக்கு நிம்மதியான வாழ்க்கை என்பது கடன் இல்லாத, பணக்கஷ்டம் இல்லாத வாழ்க்கைதான். அனைவரும் விரும்பும் அடிப்படை வாழ்க்கை இதுதான். யாரிடமும் பணம் எதிர்பார்க்காமல் தனது சம்பாத்தியத்தை தனது விருப்பப்படி செலவழித்து வாழ்வது என்பது ஒரு வரமாகும். ஆனால் அனைவருக்கும் இந்த வரம் கிடைக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்று கூற வேண்டும். பல விஷயங்கள் ஒருவரின் நிம்மதியான வாழ்க்கைக்கு முட்டுக்கட்டாக இருக்கலாம்.
ஜோதிடத்தின் படி, ஒருவர் வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்க, புதன் மற்றும் குரு அவர்களின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பது அவசியம். அதேபோல், ஒரு நபரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரமும் அவர்களின் நிதி நிலைமையைப் பாதிக்கின்றன. அதன்படி சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன் பிரச்சினையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் பணக்கஷ்டம் ஒருபோதும் தீராது. அவர்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மூலம்
மூலம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் 19-வது நட்சத்திரமாகும். பொதுவாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியமானவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். இவர்கள் சுதந்திரமான சிந்தனையாளர்கள், பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள், ஆன்மீக விஷயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.
இவ்வளவு நேர்மறை அம்சங்கள் இருந்தாலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிதி விஷயங்களில் பல சிரமங்களைச் சந்திப்பார்கள். அவர்கள் அதிகமாக கோபப்படுவதால் வேலை வாய்ப்புகளை இழக்கும் வாய்ப்பு அதிகம். அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்குரிய வெகுமதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் அவர்களின் அதீத நேர்மை அவர்கள் பலரிடம் ஏமாற்றுவதற்கு காரணமாகிறது. இந்த பிரச்சினைகள் இவர்களை கடன் பிரச்சினையில் தள்ளும். இந்த ராசிக்காரர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், தங்கள் நிதி பிரச்சினைகளை சமாளிக்க சிரமப்படுவார்கள்.
பூராடம்
27 நட்சத்திரங்களில் 20-வது நட்சத்திரமாக பூராடம் உள்ளது. பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகு மற்றும் கவர்ச்சிக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் வாழ்க்கையில் அமைதியை விரும்புபவர்கள், மேலும் மிகவும் நேர்மையானவர்கள், விசுவாசமானவர்கள். கூடுதலாக, அவர்கள் மற்றவர்களுக்கு உதவ அதிக விருப்பம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களுக்காக பல விஷயங்களை தானாக முன்வந்து செய்வது பெரும்பாலும் அவர்களின் கடன் பிரச்சினையை அதிகரிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்களால் தங்கள் கடன் பிரச்சினையை அடைக்க முடியாமல் போகலாம், மேலும் அவர்கள் உறவினர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
உத்திராடம்
உத்திராடம் நட்சத்திரம் மகர ராசிக்காரர்களுக்கு சொந்தமானது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் நேர்மையானவர்கள், விசுவாசமானவர்கள். மேலும், அவர்கள் பொதுவாக அமைதியான மனிதர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வமாக உள்ளனர், மேலும் அவர்கள் பயணம் செய்வதை அதிகம் விரும்புகிறார்கள். கூடுதலாக, இவர்கள் குடும்ப உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அவர்கள் பெரும்பாலும் பல விஷயங்களுக்கு தங்கள் சொந்தப் பணத்திலிருந்து பணத்தைச் செலவிட வேண்டியிருக்கும். பல்வேறு காரணங்களால் அவர்கள் நிதி நெருக்கடிகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் பணத்தை சேமிக்க முடியாமல் போகலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












