Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
84 ஆண்டுகளுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு செல்வம் பெருகும்...
Diwali 2025: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இவ்வாறு உருவாகும் யோகங்கள் பண்டிகை காலங்கள் அல்லது சுப தினங்களில் நிகழும் போது இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகை மிகவும் அற்புதமானது. ஏனெனில் இந்த தீபாவளி பண்டிகையில் பல சுப மற்றும் ராஜயோகங்கள் உருவாகின்றன. அதுவும் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அக்டோபர் 14 ஆம் தேதி யுரேனஸ் உடன் சேர்ந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகின்றனர்.

இந்த ராஜயோகத்தின் போது சுக்கிரனும், யுரேனஸும் 120 டிகிரியில் இருப்பார்கள். இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர்.
இதன் விளைவாக நிதி நிலையிலும் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. அதோடு பல வழிகளில் இருந்து பணம் தேடி வரக்கூடும். இப்போது தீபாவளிக்கு முன் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதை செய்தால் நல்ல பலன்களைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக சுக்கிரனின் அருளால் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் நல்ல பொருள் வசதிகள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்களிடையேயான உறவு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்களின் திறமைகள் நல்ல பாராட்டைப் பெறும். சுக்கிரனின் அருளால் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். பல வழிகளில் இருந்து பணம் வந்து குவியும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல அதிகரிக்கும் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் யுரேனஸால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் இன்று முதல் சிறப்பாக இருக்கப்போகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. புதிய தொழில் வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கம் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











