200 ஆண்டுகள் கழித்து தீபாவளியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது

Diwali 2025 Lucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது நிலைகளின் மூலமே சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதுவும் இப்படியான யோகங்கள் ஒரு நல்ல நாளில் அல்லது பண்டிகை நாட்களில் உருவாகும் போது, இன்னும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் தீபாவளி சற்று சிறப்பானது என்றே கூறலாம்.

Diwali 2025 Sun Jupiter Make Kendra Drishti Yog List Of Lucky Zodiac Signs

ஏனெனில் இந்நாளில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும் 90 டிகிரி கோணத்தின் இருந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த யோகமானது சுமார் 200 ஆண்டுகளுக்கு பின் தீபாவளி நாளில் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக எதிர்பாராத நிதி ஆதாயங்களும், முன்னேற்றத்திற்கான பாதைகளும் திறக்கும். இப்போது தீபாவளியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்

குரு சூரியனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும்.

சிம்மம்

குரு சூரியனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். துணிச்சலும், தைரியடும் அதிகரிக்கும். புதிய வீடு வாங்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், இந்த யோகத்தால் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக எதிர்பாராத சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

ரிஷபம்

குரு சூரியனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தைரியமும் வீரமும் அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைக் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, October 4, 2025, 21:09 [IST]
Desktop Bottom Promotion