Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
வருகிற தீபாவளியில் இருந்து சனிபகவானின் ஆசியால் இந்த ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கபோகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Diwali 2024 Shani Made Shash Mahapurush Yog: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகளைக் கொண்டு தான் ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது. ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.
அதுவும் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இதனால் ஒரு ராசியில் சனி நுழைந்தால், அதன் தாக்கம் 2 1/2 ஆண்டுகள் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவார். அதோடு பஞ்ச மகாபுருஷ ராஜயோங்களில் ஒன்றான சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பின் தீபாவளி நாளில் இந்த மங்களகரமான ராஜயோகமானது உருவாகியுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சச மகாபுருஷ் ராஜயோகமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்கும். அதுவும் இந்த ராஜயோகம் 10 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் கொடிகட்டி பறப்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் மற்றும் வணிகத்தை விரிவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சச மகாபுருஷ் ராஜயோகமானது வாழ்க்கை பிரகாசமாக்கும். அதுவும் இந்த ராஜயோகம் 7 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இதனால் உங்களின் அனைத்து தேவைகளையும் எளிதில் நிறைவேற்ற முடியும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சச மகாபுருஷ் ராஜயோகமானது 2 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க வேண்டியிருக்கும். வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். புதிய நண்பர்கள் அதிகம் அறிமுகமாவார்கள். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மேலும் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











