Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
அழகான இளம் பெண்களை வாடகை மனைவியாக கொடுக்கும் நாடு... எந்த நாடு? வாடகை எவ்வளவு தெரியுமா?
திருமணம் என்பது பெரும்பாலான நாடுகளில் தற்போது பழமையான கருத்தாக மாறி வருகிறது. இந்தோனேசியாவில் சமீபத்தில் பிரபலமாகி வரும் 'இன்பத் திருமணம்(Pleasure Marriage)' இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. அது ஓய்வதற்குள் தாய்லாந்தில் வேகமாக பரவி வரும் 'வாடகை மனைவி(Rental Wife)' போக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது 'கருப்பு முத்துக்கள்(Black Pearls)' என்றும் அழைக்கப்படுகிறது.
தாய்லாந்தின் பட்டாயாவில் "வாடகை மனைவி" என்ற போக்கு மிகவும் பிரபலமாகி வருகிறது. "தற்காலிக திருமணம்" என்று அழைக்கப்படும் இந்த தற்காலிக ஏற்பாட்டில் பொதுவாக ஏழை கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் துணையாக ஏற்பாடு செய்யப்படுகிறார்கள். பட்டாயாவின் சிவப்பு விளக்கு மாவட்டத்தின் பார்கள் மற்றும் இரவு நேர விடுதிகளில் இந்த நடைமுறை மிகவும் பிரபலமாக உள்ளது.

லாவெர்ட் ஏ இம்மானுவேல் எழுதிய "Thai Taboo: The Rise of Wife Rental in Modern Society: Exploring Love, Commerce, and Controversy in Thailand's Wife Rental Phenomenon" என்ற தலைப்பில் வெளியிட்ட புத்தகம், தாய்லாந்தில் மனைவியை வாடகைக்கு எடுக்கும் சர்ச்சைக்குரிய நடைமுறையைப் பற்றி விளக்குகிறது. வரலாற்றுரீதியாக இருக்கும் இந்த நடைமுறை எப்படி மறைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது.
அந்த பகுதியில் இந்த புதிய மற்றும் சர்ச்சைக்குரிய தொழில் குறிப்பிடத்தக்க வருமான ஆதாரமாக உருவெடுத்துள்ளது. செலுத்தப்படும் கட்டணத்திற்கு தற்காலிக உறவு மற்றும் அன்பை வழங்குவது போன்ற சேவைகளை இந்த தொழில் குறிப்பிடுகிறது. இந்த ஏற்பாடுகள் முறைசாரா ஒப்பந்தங்களாக சில நாட்கள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கும். இந்த பெண்கள் சுற்றுலாப் பயணிகளை பார்கள் மற்றும் இரவு விடுதிகளில் சந்திக்கின்றனர். அவர்களின் வேலைகள் கட்டணத்தைப் பொறுத்து வேறுபடுகின்றன, அவர்கள் தற்காலிக துணை அல்லது முறைசாரா சுற்றுலா வழிகாட்டிகளாக செயல்படுகிறார்கள்.
வாடகை மனைவியின் விலை என்ன?
மனைவியை 'வாடகை'யில் வைத்திருக்கும் காலம் ஒப்பந்தத்தைப் பொறுத்தது. பெண்ணின் அழகு, கல்வி மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் $1,600 முதல் $116,000 வரை இருக்கலாம். சில சமயங்களில், காலப்போக்கில் உறவு நெருக்கமாகும் போது, சில பெண்கள் இறுதியில் தங்கள் வாடிக்கையாளர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் அல்லது நீண்ட காலமாக அவர்களின் துணையாக வேலை செய்து பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள்.
அவர்கள் எப்படி தொடர்பு கொள்கிறார்கள்?
வாடகைக்கு மனைவிகளை வாங்கும் போக்கு தாய்லாந்தில் முக்கிய வணிகமாக மாறியுள்ளது. பட்டாயா மற்றும் பிற தாய் நகரங்களுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் பார்கள், உணவகங்கள் மற்றும் இரவு விடுதிகள் போன்ற இடங்களில் இந்தப் பெண்களை நேரடியாகத் தொடர்புகொள்கின்றனர். ஒருவருக்கொருவர் ஆர்வம் இருந்தால், இதற்கான விதிமுறைகளைத் தீர்மானிக்க ஒரு உரையாடல் நடைபெறுகிறது.
இந்த நடைமுறையை ஒழுங்குபடுத்தும் சட்டம் ஏதேனும் உள்ளதா?
இந்த ஏற்பாடுகளை நிர்வகிக்கும் முறையான பாதுகாப்புகளோ, விதிகளோ இல்லை என்றாலும், தாய்லாந்து நாட்டில் இதுபோன்ற ஒரு நடைமுறை நடப்பதையும், அதைக் கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை என்பதையும் தாய்லாந்து அரசே ஒப்புக்கொள்கிறது.
"வாடகை காதலி" அல்லது "வாடகை மனைவி" என்ற கருத்து முக்கியமாக ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளால் ஈர்க்கப்பட்டது, அத்தகைய சேவைகள் ஏற்கனவே அங்கு பிரபலமாக உள்ளன. தாய்லாந்தில் இந்த வணிகத்தின் திடீர் வளர்ச்சிக்குப் பின்னால் பல சமூக மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன.
தாய்லாந்தில் நகரமயமாக்கல் மற்றும் தேவையற்ற ஆடம்பர வாழ்க்கை முறைகளால் செயற்கை தனிமை அதிகரித்துள்ளது. பிஸியான வாழ்க்கை பெரும்பாலும் தனிநபர்களுக்கு நீடித்த உறவுகளை வளர்ப்பதற்கு நேரமின்மையை ஏற்படுத்துகிறது, அதனால் மக்கள் தற்காலிக தோழமையை நோக்கி செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications
