For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணமானவங்க கள்ள உறவில் இருக்க ஏன் அவ்வளவு ஆசைப்படுறாங்க தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!

சில திருமணமானவர்கள் தங்கள் துணையின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் துணையை உண்மையில் நேசிப்பதால் அவர்களை ஏமாற்றினாலும் அவர்களுடனே வாழ ஆசைப்படுகிறார்கள்.

|

இன்றைய நாளில் பெரும்பாலான தம்பதிகள் திருமணத்திற்கு புறம்பான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். திருமணமான நபர்கள் வேறொரு உறவில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கள்ள தொடர்பில் ஆண், பெண் இருவரும் இருக்கிறார்கள். ஆனால், திருமணத்திற்கு புறம்பான உறவில் இருக்கும் நபர்கள் அவர்களின் துணையை ஏமாற்றுகிறார்கள். தங்களுடைய துணையை ஏமாற்றுவதில், பலர் கில்லாடியாக இருக்கிறார்கள். ஆனால், உறவில் துரோகத்தை அறியும் நபர்கள் முழுவதுமாக உடைந்துவிடுகிறார்கள். இது தெரிந்தும், பலர் தங்களுடைய துணையை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். துரோகத்தைப் பற்றிய மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், திருமணமான பெரும்பாலான மக்கள் மற்ற நபருடன் ஒன்றாக இல்லாமல், துணையுடன் இருக்க விரும்புகிறார்கள்.

Reasons why cheating partners stay married in tamil

இந்த மக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள். அவர்களை விவாகரத்து செய்ய மறுக்கிறார்கள். ஆனால் இது ஏன்? ஏமாற்றும் கூட்டாளிகள் திருமண உறவில் இருக்க விரும்புவதற்கான காரணங்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏமாற்றுபவர்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள்?

ஏமாற்றுபவர்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள்?

தொடர் ஏமாற்றுக்காரர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களும் தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணையை விரும்புகிறார்கள். அப்படியிருந்தும், அவர் இரண்டு காரணங்களுக்காக மீண்டும் மீண்டும் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார். ஒன்று அவர்களால் வேறொரு உறவு இல்லாமல் வாழ முடியாது. மற்றொன்று இதிலிருந்து எப்படி தப்பிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும்.

ஏமாற்றும் கணவர் ஏன் திருமணவாழ்க்கையில் இருக்க விரும்புகிறார்?

ஏமாற்றும் கணவர் ஏன் திருமணவாழ்க்கையில் இருக்க விரும்புகிறார்?

தங்கள் துணைக்கு விசுவாசமற்ற ஆண்கள் இன்னும் தங்கள் மனைவிகளை நேசிக்கிறார்கள். உறவில் இன்னும் அவர்களுக்கு ஏதாவது தேவைப்படுகிறது. அவர்கள் அதிகமாக ஏங்குவது உற்சாகம், ஆதரவு, உடலுறவு அல்லது வேறு ஏதேனும் தேவையாக இருக்கலாம். அவர்களுடைய மனம் என்றும் இளமையாக இருக்கவும் வேறொருவருடன் உறவில் இருக்க விரும்புகிறார்.

வீடு வசதியாக இருக்கும்

வீடு வசதியாக இருக்கும்

பெரும்பாலும், திருமணமானவர்கள் புதிதாக ஒன்றை முயற்சிக்க விரும்புவதால் ஏமாற்றுகிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் நாள் முடிவில் வீட்டிற்கு வர விரும்புகிறார்கள். வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடுகிறார்கள் மற்றும் அவர்கள் பரிச்சயமாகவும் எளிதாகவும் உணரும் சூழலில் வசதியாக இருக்க விரும்புகிறார்கள். இதை அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அதேநேரம் அவர்கள் வேறொருவருடனான உறவில் மகிழ்ச்சியாக வித்தியாசமாக இருக்க முயற்சி செய்கிறார்கள்.

வாழ்க்கையில் மாற்றம்

வாழ்க்கையில் மாற்றம்

பெரும்பாலான மக்கள் ஏமாற்றுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் சாதாரண வழக்கத்திலிருந்து ஓய்வு பெற விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களிடமிருந்து வீட்டில் நிறைய சச்சரவுகளை எதிர்கொள்கிறார்கள். இது அவர்களை ஏமாற்றம் அல்லது எரிச்சலூட்டும் அளவிற்கு அவர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே செல்ல முனைகிறார்கள். இதன் முன்னுரிமையாக மற்றொரு நபரிடம் உற்சாகத்தைக் காண முயற்சிப்பதால், திருமணத்திற்கு புறம்பான உறவில் இருக்க விரும்புகிறார்கள்.

தைரியம்

தைரியம்

பெரும்பாலானவர்களுக்குத் தங்கள் தவறுகளைச் சமாளிக்கவும், தங்கள் வாழ்க்கைத் துணையிடம் உண்மையைச் சொல்லவும் தைரியம் இல்லை. அவர்கள் தங்கள் துரோகத்திற்கு சொந்தமாக இருப்பதையும், மற்றொரு துணையுடன் ஒரு புதிய வாழ்க்கைக்காக தங்கள் துணையை விட்டு வெளியேறுவதையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆதலால், அவர்கள் இரண்டையும் சமாளிக்க முடியும் என்ற தைரியத்தில் இருக்கிறார்கள்.

தங்கள் துணையின் மீது அன்பு

தங்கள் துணையின் மீது அன்பு

சில திருமணமானவர்கள் தங்கள் துணையின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் துணையை உண்மையில் நேசிப்பதால் அவர்களை ஏமாற்றினாலும் அவர்களுடனே வாழ ஆசைப்படுகிறார்கள். வாழ்க்கையில் சில உற்சாகத்தைக் காண அவர்கள் துணையை ஏமாற்றுகிறார்கள். ஆனால், பல ஆண்டுகளாக தங்கள் துணையை நேசிப்பதை விட்டு வெளியேறுவதை அவர்கள் கற்பனை செய்து பார்க்க மாட்டார்கள்.

வலுவான காரணங்கள்

வலுவான காரணங்கள்

ஏமாற்றுபவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளுடன் தங்குவதற்கு மற்றொரு வலுவான காரணம், அவர்களுக்கு குழந்தைகள், நிதி முதலீடுகள் மற்றும் பிற அம்சங்கள் ஒன்றாக இருப்பதால், விவாகரத்துக்கு நேரடியாகச் செல்வதை கடினமாக்குகிறது. சமூகத்தில் உள்ள மற்ற நபர்களை போல குடும்பமாக வாழ அவர்கள் விரும்புகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons why cheating partners stay married in tamil

Here we are talking about the Reasons why cheating partners stay married in tamil.
Desktop Bottom Promotion