Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
புதிதாக திருமணமானவர்கள் இந்த பாலியல் பிரச்சினைகளை நிச்சயம் சந்திப்பாங்களாம்... உங்களுக்கும் நடந்துச்சா?
எத்தனை பேர் வெவ்வேறு அறிவுரைகளை நமக்குத் தந்திருந்தாலும், ஒரு திருமணத்தில் உள்ள யதார்த்தங்களைக் கையாள்வதற்கு யாரும் நன்கு தயாராக இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
எத்தனை பேர் வெவ்வேறு அறிவுரைகளை நமக்குத் தந்திருந்தாலும், ஒரு திருமணத்தில் உள்ள யதார்த்தங்களைக் கையாள்வதற்கு யாரும் நன்கு தயாராக இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. குறிப்பாக தாம்பத்ய விஷயத்தில்.புதுமணத் தம்பதிகள் சிறந்த செக்ஸ் வாழ்க்கையைக் கொண்டுள்ளனர் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். பல புதுமணத் தம்பதிகள் உடல் இணக்கத்தில் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், இது பெரும்பாலும் திருமணத்தில் பிரச்சினைகள் மற்றும் சச்சரவுகளுக்கு வழிவகுக்கிறது.

உணர்ச்சி மற்றும் உடல்ரீதியான இணைப்பு என்று வரும்போது அதில் உடலுறவை புறக்கணிப்பது மிகவும் கடினம். ஏனென்றால், அது ஒருவரின் நெருக்கமான வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே புதுமணத் தம்பதிகள் எதிர்கொள்ளும் எளிதில் அடையாளம் காணக்கூடிய சில பாலியல் பிரச்சனைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அடிக்கடி உடலுறவு கொள்வது பற்றிய சந்தேகம்
புதுமணத் தம்பதிகள் பொதுவாக திருமணத்திற்குப் பிறகு, பாலியல் ஆசையின் உச்சத்தில் இருப்பார்கள், மேலும் அவர்கள் ஒரு நாளைக்கு சில முறையாவது உடலுறவு கொள்ள விரும்புவார்கள். இருப்பினும், ஒரு கட்டத்திற்குப் பிறகு, இருவருக்கும் உடலுறவு எவ்வளவு சாதாரணமானது என்ற எண்ணத்தில் அவர்கள் சங்கடப்படுகிறார்கள். ஒருவருக்கு மற்றவரை விட அதிகம் தேவைப்படுவதாக உணரலாம், இது சிறிது காலாம் கழித்து சங்கடத்தை ஏற்படுத்தும்.

கருத்தடைகளைப் பயன்படுத்துதல்
செக்ஸ் விஷயத்தில் பல ஆண்கள் அனுபவமில்லாமல் இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு ஆணுறை பயன்படுத்தத் தெரியாது. அத்தகைய ஆண்கள் அந்த நேரத்தில் வெட்கப்படுவார்கள், இதனால் அவர்கள் விறைப்புத்தன்மையை இழக்க நேரிடும். மனைவிக்கும் இந்தச் சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியவில்லை. அதனால் இது மிகவும் அவமானகரமான விஷயமாக மாறிவிடுகிறது.

ஆர்வம் இல்லாமை
ஒரு ஆண் முன்கூட்டியே விந்து வெளியேறினால் அல்லது பெண் சில முறை உச்சக்கட்டத்தை அடையத் தவறினால், தம்பதிகள் தங்கள் பாலியல் வாழ்க்கை அழிவுக்கு உள்ளாகிவிடும் என்று கருதுகின்றனர். முதல் சில நேரங்களில் ஆர்வம் இல்லாமல், அது மிகவும் மந்தமாகிவிடும், எனவே தம்பதிகள் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மகிழ்ச்சிகரமான செக்ஸ் வாழ்க்கை நேரம் மற்றும் பயிற்சியின் மூலம் மட்டுமே நடக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சில கட்டுக்கதைகளை நம்புவது
ஒரு பெண்ணின் முதல் இரவில் இரத்தப்போக்கு அவரது கன்னித்தன்மையைக் குறிக்கும் என்ற பழமையான கட்டுக்கதை இன்னும் உள்ளது. பெண்களுக்கு அவ்வாறு ஏற்படாவிட்டால், கணவர்கள் உடனடியாக அவளை நிராகரித்துவிடுகிறார்கள், அதனால், திருமணத்தில் பிரச்சினைகள் எழுகின்றன. கூடுதலாக, ஒரு ஆணால் பெண்ணை திருப்திப்படுத்த முடியாவிட்டால், அவர் கேலிக்கு ஆளாகி, அவர்கள் மீது மிகுந்த அழுத்தத்தை உருவாக்குகிறார்.

தேவைகளை பற்றி பேசாமல் இருப்பது
பெரும்பாலான புதுமணத் தம்பதிகள் தங்கள் பாலியல் தேவைகள் மற்றும் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளத் தவறிவிடுகிறார்கள். பாலியல் இன்பம் மற்றும் விளையாட்டுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதால், அவ்வாறு செய்வது மிகவும் முக்கியம். அது எப்போதும் வேடிக்கையாக இருக்காது என்பதை தம்பதிகள் அறிந்திருக்க வேண்டும்; அனைத்து மேக்-அவுட் அமர்வுகளும் உடலுறவுக்கு வழிவகுக்காது. எனவே ஒருவர் விரக்தியடையவோ நிராகரிக்கப்படவோ கூடாது.



Click it and Unblock the Notifications