Just In
- 34 min ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 3 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 9 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 10 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
Don't Miss
- News கவனிச்சீங்களா.. பாஜக அஸ்திவாரம் ஆடுது.. மோடி +அமித் ஷா +யோகி.. கூட்டமாக எடுத்த 3 அஸ்திரம்! இடிக்குதே
- Movies Aparna Das - நிலைபெயராது சிலை போலவே நின்று.. ரிசப்ஷனில் தங்க நிற சேலையில் ஜொலித்த டாடா பட நடிகை!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...
வீட்டில் பெண்கள் எடுக்கும் சுவாரஸ்யமான வில்லங்கமான அவதாரங்கள் பற்றி தான் இந்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கணவன் - மனைவிக்கு இடையே சில வீடுகளில் எப்ப பார்த்தாலும் ஜாலியாக இருக்கும். சில வீடுகளில் எப்போதும் சண்டை தான். சில வீட்டில் கலாட்டாக்கள் களை கட்டும். எந்த வீடு எப்படி இருந்தாலும் அதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது அந்த வீட்டில் உள்ள பெண்ணாகத் தான் இருக்கும். அவர்களால் தான் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். தினமும் பெண்கள் ஒன்பது அவதாரங்கள் எடுக்கிறார்கள். அதுதான் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கின்றது.
அப்படி அவர்கள் எடுக்கும் அவதாரங்கள் தான் என்ன? ரொம்ப சீரியஸாகாதீங்க. ஜாலியான விஷயம் தான். கணவன்மார்கள் படித்து என்ஜாய் பண்ணுங்க. அதேசமயம் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க.
அஷ்டலட்சுமி
காலையில் அலுவலகத்துக்கு நேரமாகிற ரஷ்ஷான நேரம், அலுவலக வேலைகள் ஆகியவற்றைச் செய்யும் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். அந்த சமயங்களில் பெண்டாட்டிகள் அஷ்டலட்சுமிகளாகவே மாறிவிடுவார்கள்.
சரஸ்வதி
மாலையில் குழந்தைகள் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும், அவர்களை கவனித்து வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கின்ற பொழுது, பெண்டாட்டிசரஸ்வதியாக மாறிவிடுவாள்.
மகாலட்சுமி
சில கணவன்கள் ஊதாரித்தனமாகச் செலவு செய்தாலும், தன்னுடைய கையில் இருக்கும் பணத்தை வீட்டுச் செலவை மிகவும் சிக்கனமாக செலவு செய்து அதிலிருந்து சுங்கிடி பிடித்து, மிச்சப்படுத்தும் போது பெண்டாட்டிகள் கணவன்களுக்கு மகாலட்சுமிகளாகத் தெரிவார்கள்.
அன்னப்பூரணி
வீட்டில் கணவன், குழந்தைகள் என வீட்டில் உள்ளவர்களுக்கு என்னென்ன சாப்பிட பிடிக்கும்? எது உடலுக்கு ஆரோக்கியம் என்று பார்த்து பார்த்து சமைத்து, அதை முழு மனதோடு அன்பாகப் பரிமாறுகிற போது, பெண்டாட்டிகள் அன்னப்பூரணியாகத் தெரிவார்கள்.
MOST READ: வேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...
பார்வதி தேவி
வீட்டில் ஏதாவது பிரச்சினைகள் வருகின்ற வேளைகளில் தேவையான சமயத்தில் தன்னுடைய குடும்பத்திற்கான மன உறுதியோடு இருக்கின்ற பொழுது பெண்டாட்டிகள் கணவன்மார்களுக்கு பார்வதி தேவியாகத் தெரிவாள்.
துர்கா தேவி
இனிமேல் தான் இருக்கு உங்களுக்குப் பிரச்சினை. இங்க இருந்து தான் நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். நீங்கள் காலையில ஆபீஸ் போறதுக்கு எவ்வளவு வேகமா கிளம்பினாலும் குளிச்ச டவலை ஒழுங்கா காயப் போடணும். ஆனா நாம பண்றதில்லை. நீங்க காலையில குளிச்சிட்டு வந்து ஈட டவலை அப்படியே கட்டில் மேல போட்டீங்கனா அவ்ளோ தான் துர்காதேவியா மாறிடுவாங்க.
பத்ரகாளி
பொதுவாக பெண்கள் எதிலும் அவ்வளவு ஈஸியா திருப்தியாக மாட்டாங்க. அதிலும் கணவன் வாங்கிக் கொண்டு வரும் காய்கறிகள் நல்லதா இல்லன்னா என்ன ஆகும்னு தெரியும்ல. ஒருவேளை நீங்க பிரஷ்ஷான காய்கறிகளை வீட்டுக்கு வாங்கிட்டு வரலன்னா அப்புறம் அவங்க பத்ரகாளியா மாறிடுவாங்க.
மகிஷாசுரமர்தினி
பெண்கள் திருமணத்துக்கு பின்பு விழுந்து விழுந்து தன்னை அலங்காரம் செய்து கொள்வதே தன்னுடைய கணவனிடம் இருந்து பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காகத் தான். அப்படி அவர்கள் கஷ்டப்பட்டு அலங்கரித்துக் கொண்டு இருக்கும்போது, தன்னை கணவன் கண்டுகொள்ளாமல் போனால் அந்த இடத்திலேயே மகிஷாசுரமர்தினியாக மாறிவிடுவார்கள். அப்புறம் என்ன நீங்க தான் மகிஷாசுரன்.
சொர்ணாக்கா
தன்னைப் பற்றி புகழாத கணவனைக் கூட பெண்கள் சாதாரணமாக விட்டு விடுவார்கள். ஆனால் இதுவே கணவன் தன்னைத் தவிர மற்றொரு பெண்ணைப் பற்றி பெருமையாகவோ புகழ்ந்தோ பேசிவிட்டால் அவ்வளவு தான் உங்க பொண்டாட்டி உங்களுக்கு சொர்ணாக்காவா தான் தெரிவார்கள்.
என்ன கணவன்மார்களே! இப்பவாச்சும் உங்க மனைவிகளோட அவதாரங்களைப் புரிஞ்சிக்கிட்டீங்களா? இனியாவது கொஞ்சம் கவனமா நடந்துக்கங்க.