Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
மனைவியை பிரிந்த பிறகு குடியை கைவிட்ட பிரபல நடிகர்!
ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் மனைவி ஏஞ்சலினா ஜூலியை பிறந்த பிறகு குடிப் பழக்கத்தை கைவிட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
ஹாலிவுட்டின் ஹாட் அன்ட் ரொமான்ஸ் ஜோடியாக திகழ்ந்தவர்கள் பிரட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜூலி. பிள்ளைகள் பெற்றுக் கொள்வதில் மட்டுமின்றி, தத்தெடுத்துக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டிய தம்பதி இவர்கள்.
பெற்றால் தான் பிள்ளையா... என்ற வாசகத்திற்கு பொருத்தமாக வாழ்ந்து காட்டிய இவர்களது இல்லற வாழ்க்கையில் யார் கண் பட்டதோ, இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கு பிராட் பிட்டிற்கும், வேறு ஒரு நடிகைக்கும் இடையே இருந்த உறவு தான் காரணம் என சிலர் கூறுகின்றனர்.
தன் ஆசை மனைவியை பிரிந்த பிறகு, தன்னை பாடாய்ப்படுத்தி வந்த புகை மற்றும் குடியை கைவிட்டுள்ளார் பிராட் பிட்...

முதல் முறையாக...
ஏஞ்சலினா ஜூலியை பிரிந்த பிறகு முதன் முறையாக தங்கள் விவாகரத்து குறித்து வாய் திறந்து பேசியுள்ளார் பிராட் பிட்.
தனது அதிகப்படியான குடி மற்றும் புகை பழக்கமும் தன்னை எமோஷனலாக பலரிடம் இருந்து பிரித்துவிட்டது என கூறியுள்ளார்.

பேட்டி!
இந்த தகவலை ஜி.கியூ ஸ்டைல்க்கு அளித்த பேட்டியில் 53 வயதை கடந்த ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன் கிழமை நடந்த நிகழ்ச்சியில், புகை மற்றும் மது பழக்கத்தில் இருந்து வெளிவர சிறப்பு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக பிராட் பிட் கூறியுள்ளார்.

பிராட் பிட் கூறியதாவது...
நான் இப்போது தான் தெரபியை ஆரம்பித்துள்ளேன். நான் இந்த தெரபியை விரும்புகிறேன், அதிகமாக விரும்புகிறேன்.
இந்த தெரபியை துவங்கும் முன் இரண்டு நிபுணர்களை சந்தித்தேன், அதில் சிறந்த ஒருவரை தேர்வு செய்து சிகிச்சை பெற்று வருகிறேன் என பிராட் பிட் கூறியுள்ளார்.

குடும்பம்!
பிராட் பிட்டை பிரிவதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜூலி அறிவித்தார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர்.
மேலும், பிட்டை குழந்தைகளை கோபத்தின் காரணத்தால் துன்புருத்தினாரா? என விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதம் பிராட் பிட் அனைத்து குற்றச்சாட்டுகளையும் கடந்து வந்தார். ஜூலியும், இவரும் விவாகரத்து பெற்றனர்.

மாற்று!
தான் ஒயின் மற்றும் வோட்கா விரும்பு குடித்து வந்ததாகவும். இப்போது மது மற்றும் புகையில் இருந்து வெளிவரும் சிகிச்சையில், இவற்றுக்கு மாறாக பிராட் பிட் கிரான்பெர்ரி மற்றும் ஃபிஸ்ஸி ஜூஸ் குடித்து வருவதாக கூறியுள்ளார்.

கைவிடுங்கள்!
மது மற்றும் புகை தற்காலிகமான போதை. ஆனால், அவற்றால் உங்கள் இல்லறத்தில் உண்டாகும் பிரச்சனை நிரந்தரமான பிரிவு அல்லது ஆறாது வடுக்களை பரிசளித்து செல்ல கூடியவை.
எனவே, மது மற்றும் புகையை கைவிடுவது குறித்து இப்பழக்கம் இருக்கும் ஆண்கள் நன்கு பரிசீலனை செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications











