Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இந்த 4 விஷயத்தில், மனைவிய கண்டு நீங்க பயந்ததுண்டா?
மனைவியை பார்த்தால் அச்சப்படும் கணவரா நீங்க, இத நீங்க தான் முதல்ல படிக்கணும்.
உடல் ஹார்மோன் சமநிலை இழக்கும் போதும், கணவன் மனைவி உறவு உணர்வு சமநிலை இழக்கும் போதும் அதனதன் ஆரோக்கியம் சீர்குலைந்து போகிறது. கணவன் - மனைவி இடையில் விட்டுக்கொடுத்து போகும் எண்ணம் தான் இருக்க வேண்டுமே தவிர, விட்டால் போதுமடா சாமி என்ற எண்ணம் பிறக்க கூடாது.

யார் ஒருவரும், மற்றொருவரை பார்த்து அச்சம் கொண்டு வாழும் வாழ்க்கை என்றும் சிறக்காது. இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்...

கொடூரமான எண்ணம்!
மனைவியிடம் கொடூரமான எண்ணம் வெளிப்படும் போதுதான் ஆண்கள் அதிகம் அச்சம் கொள்கின்றனர். இதை தனிமனித இயல்பு கோளாறு என்றும் குறிப்பிடுகின்றனர்.
இது போன்ற நிலைப்பாடு மனைவி மத்தியில் வெளிப்படும் போதும் கணவன்மார்கள் அச்சம் கொள்கின்றனர். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

அடுத்த பிரச்சனை!
மனைவி அதிகளவில் பிரச்சனைகள் கூறும் போது அவர்கள் மீது அச்சம் ஏற்படுகிறது. அது ஆரோக்கியம், பொது என எந்த வகையாக கூட இருக்கலாம். ஆண்கள் பெரும்பாலும் தங்கள் பிரச்சனயை வெளிகூறி அழமாட்டார்கள். இதுசார்ந்த அச்சத்தை ஆண்கள் நண்பர்களிடம் கூட பகிர்ந்துக் கொள்வது இல்லையாம்.

ஆத்திரம்!
கணவன் - மனைவியில் யார் ஒருவர் அதிகமாக ஆதிரமடைகிறார்களோ, மற்றொருவர் அதிக மன அழுத்தம், பதட்டம் கொள்கிறார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், இவர்களது உடலில் கூட அதிக கெமிக்கல் மாற்றங்கள் உண்டாகின்றன என கூறப்படுகிறது.

மாட்டிக்கொள்வது!
சில சமயங்களில் கணவன் அல்லது மனைவி உறவு பிரிந்துவிடக் கூடாது, பெயர் கெட்டுவிடும் என்பதற்காக விருப்பமில்லாத உறவில் இணைந்திருப்பார்கள்.
இதனால் அந்த உறவில் தொடர்ந்து இருக்கும் துணைக்கு மன அழுத்தம், மன சோர்வு, பதட்டம் போன்ற தாக்கங்கள் பக்கவிளைவுகளாக ஏற்படுகின்றன.

காரணம் தேடுங்கள்..
உங்கள் உறவில் ஏற்படும் அச்சம் அல்லது உண்டாகும் சண்டைகள் எதனால் உண்டாகிறது என்பதை அறிந்துக் கொள்ள முதலில் அந்த காரணத்தை கண்டறிய வேண்டும். இது அறிந்துக் கொண்டாலே பாதி பிரச்சனை தீர்வுக்கு வந்துவிடும்.

உதவி!
உங்களால் முடியவில்லையா? உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் உதவி நாடுங்கள். இல்லையேல் சிறந்த ஆலோசகரிடம் ஆலோசனை கேளுங்கள்.
உங்கள் உடல் மட்டுமல்ல, மனதும் ஆரோக்கியமாக இருந்தால் தான் உறவும், வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











