Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
உங்கள் புது மனைவியிடம் கேட்க வேண்டிய மூன்று முக்கியமான கேள்விகள்!
புதுமண தம்பதிகள் திருமணமானவுடன், உனக்கு என்ன பிடிக்கும், எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துக்கொள்வதற்கு முன்னர், இருவீட்டார் உறவுகளை பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன்னர் எதிர்கால சேமிப்பு, செலவு, பொருளாதாரம் குறித்து கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
திருமணத்திற்கு பிறகு தேனிலவில் துவங்கி, குழந்தைக்கு பால்சோறு ஊட்டுவது வரைக்கும் ஏகப்பட்ட அவசர செலவுகள் வரும். பிறகு, பள்ளயில் சேர்ப்பதற்கு என்றே நீங்கள் தனியாக சம்பாதிக்க வேண்டும். அது வேறு தனி கதை.
எனவே, திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியிடம் நீங்கள் இந்த மூன்று கேள்விகளை கேட்டு தெளிவாகிக் கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்...

கேள்வி ஒன்று!
உனக்கான தனி பொருளாதார செலவுகள் இருக்கிறதா? அவை என்ன? இது தான் நீங்கள் மிக முக்கியமாக கேட்க வேண்டிய கேள்வி. ஏனெனில், இது தான் நீங்கள் சேமிக்க நினைக்கும் பணத்திலும், வேறு செலவுகளுக்கு ஒதுக்கும் பணத்திலும் வெட்டு விழுக வைக்கும்.

கேள்வி ஒன்று!
பால், கேஸ், சமையல் பொருட்கள், போன்றவற்றை தவிர பெண்களுக்கு என நிறைய செலவுகள் இருக்கிறது. பியூட்டி பார்லர் போவது, அக்கம்பக்கத்து வீட்டு பெண்களுடன் சின்ன சின்ன ஷாப்பிங் செய்வது, வீட்டிற்கான அவசர தேவைகள். எனவே, இதற்கு மாதாமாதம் எவ்வளவு தேவைப்படும் என முன்பே கேட்டு வைத்துக் கொள்வது அவசியம்.

கேள்வி ஒன்று!
ஏனெனில், புதியதாக திருமணம் ஆன ஆண்களுக்கு இது பற்றி எதுவும் பெரிதாக தெரியாது. மேலும், அவர்களே தங்களையும் மறந்து சில வீண் செலவுகள் செய்வார்கள். சேமிக்க நினைக்கும் ஆண், முதலில் இந்த கேள்விக்கு பதில் அறிந்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி இரண்டு!
பொருளாதார திட்டங்கள்! ஆம், லைப் இன்சூரன்ஸ், ஆர்.டி, எப்.டி போன்ற சேமிப்புகள் செய்வது, லோன் வாங்கி வீடு, வாகனம் வாங்குவது, தங்க சீட்டு போன்று ஏதாவது திட்டங்கள் இருந்தால் செயல்படுத்தலாம். திருமணத்திற்கு பிறகு சேமிப்பு மிகவும் அவசியமானது.

கேள்வி இரண்டு!
சிலர் திருமணதிற்கு முன்பே சில திட்டங்கள் போட்டு வைத்திருப்பார்கள் அல்லது ஏற்கனவே நீங்கள் இன்சூரன்ஸ் போட்டு வைத்திருக்கலாம். அதையே பின்பற்றலாமா அல்ல நிறைய பயனளிக்கும் வேறு திட்டங்களில் பதிந்து வைத்துக் கொள்ளலாமா என யோசியுங்கள்.

கேள்வி மூன்று!
எந்தெந்த செலவுகளை குறைத்துக் கொள்ளலாம்? எந்தெந்த செலவு வீணாக செய்கிறோம், எதை தவிர்க்கலாம், எதை கூட்டலாம் என்பதை ஒன்றாக உட்கார்ந்து கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

கேள்வி மூன்று!
அவசர தேவைக்கு எவ்வளவு சேமிக்க வேண்டும். பிற்காலத்தில் பிரசவ கால செலவு, குழந்தை பிறந்த பிறகான செலவு என அனைத்திற்கும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் தான் கையை கடிக்காமல், கடன் வாங்காமல், இல்லறத்தை நல்லறமாக நடத்த முடியும்.



Click it and Unblock the Notifications