Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
மனைவி உடலுறவுக்கு ஒத்துழைக்காத விரக்தியில் ஆண்குறியை வெட்டிக் கொண்ட குடிகார கணவன்!
உடலுறவில் ஈடுபட மனைவி சம்மதிக்காத காரணத்தால், குடி போதையில் தனது ஆணுறுப்பை வெட்டிக் கொண்ட குடிகார கணவன்.
குடி உடலுக்கும், நாட்டுக்கும் கேடு என்பார்கள். உண்மையில் குடி பழக்கம் உடலையும், நாட்டையும் கெடுப்பதை காட்டிலும் நல்ல உறவுகளை தான் பலமடங்கு அதிகமாக கெடுக்கிறது. குடியால் பிரிந்த, அழிந்த எத்தனையோ உறவுகள், நட்புகள், குடும்பங்கள் இருக்கின்றன.
குடித்த ஒரே காரணத்தால் கண்முன் தெரியாமல் சில சம்பவங்களில் ஈடுபட்டு வாழ்க்கையை இழந்தவர்கள் பலர் இருக்கின்றனர். இந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர்...

காஷி ராம்!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் காஷி ராம். இவர், தனது மனைவி உடலுறவில் ஈடுபட மறுத்த காரணத்தால், விரக்தி அடைந்து குடி போதையில் தனது ஆணுறுப்பை வெட்டிக் கொண்டார்.

12 வருடங்கள்!
காஷி ராமின் மனைவி மஞ்சரி தேவி, 12 வருடங்களாக உடலுறவில் ஈடுபட மறுத்து வருவதால், இந்த செயலில் ஈடுபட்டதாக காஷி ராம் தெரிவிக்கிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சரி தேவி!
காஷி ராம் - மஞ்சரி தேவிக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகின்றன. காஷி ராம் குடித்துவிட்டு வருவதால் நான் மறுப்பு தெரிவித்தேன். இப்போது அவர் என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார் என கூறியிருக்கிறார் மஞ்சரி தேவி.

குடி, குடியை கெடுக்கும்!
உடலுறவு என்பது மனதளவில் ஒப்புதல் பெற்று, ஒருவரை ஒருவர் விரும்பி இணையும் நிகழ்வாக இருக்க வேண்டும். சாதரணமாக ஒருவரை வற்புறுத்தி உடலுறவில் ஈடுபட கட்டாயப்படுதுவதே தவறு. அதிலும், குடித்துவிட்டு வந்து தாம்பத்தியத்தில் ஈடுபட அழைப்பது மனிதத்தன்மையற்ற செயலாகும்.

வன்முறை!
மனைவியாக இருப்பினும், அவரது விருப்பமின்றி, தாம்பத்திய உறவில் ஈடுபட அழைப்பது, கட்டாயப்படுத்தி ஈடுபடுவது கற்பழிப்புக்கு நிகரான வன்முறை ஆகும். இதை கணவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பாலியல் தொழிலாளி அல்ல!
மனைவி என்பவர் உங்கள் வாழ்வில் இணைந்தவர் அவரை உடலளவில் மட்டும் இணைத்துக் கொள்ள நினைப்பது தவறு. மனைவி என்பவள் பாலியல் தொழிலாளி அல்ல என்பதை குடிப் பழக்கத்தில் உள்ள ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications