Latest Updates
-
இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள நினைவுச்சின்னங்கள் என்னென்ன? அவை எங்கு உள்ளது தெரியுமா? -
புடலங்காயும், வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்தி, சாதத்துக்கு அள்ளும்.. -
கண்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
கத்திரிக்காய் வாங்குனா இந்த அரைச்சுவிட்ட மசாலா குழம்பை ட்ரை பண்ணுங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்களில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு வேகமாக வயது ஏறி முதுமை வந்துருமாம் -
ஜூலை 04-ல் சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு பணம், புகழ், வெற்றி எல்லாம் தேடி வரப்போகுது! -
பச்சை பயறு இட்லியும், கார மற்றும் தேங்காய் மல்லி சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க அதிர்ஷ்டத்தால் ரொம்ப சந்தோஷமா இருப்பார்களாம் -
ஜூலையில் 3 முறை உருவாகும் யுதி யோகம்: இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... -
சனி-கேது உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உறவின் நலன் கருதி உடனடியாக நிறுத்த வேண்டிய விஷயங்கள்!!!
உறவுகளில் பிரிவினை ஏற்பட மூன்றாவது நபர்களின் குறுக்கீடுகளை விட. அவ்வுறவில் பிணைந்திருக்கும் ஆண், பெண்ணின் சில அடமும், பிடிவாத குணமும், விட்டுக்கொடுக்காத செயல்களும் தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
மூன்று முடிச்சு போடுவதற்கான நேரம் வந்துவிட்டது என எச்சரிக்கும் அறிகுறிகள்!!!
உறவில் இன்பம், துன்பம் அதிகரிப்பதற்கு அவரவர்கள் செய்யும் சில விஷயங்கள் தான் பெரும் பங்குவகிக்கிறது. கணவன் மனைவி உறவென்பது வாகனம் ஓட்டுவது போல. வாழ்க்கை அது போகும் சாலையை போல, சாலை நெளிவு சுளிவுகளுடனும், மேடு, பள்ளங்களுடனும் தான் இருக்கும்.
இந்தியாவில் உடலுறவுக் குறித்து வேறுப்பட்ட கருத்துகள் நிலவுவது ஏன்?
சாலைக்கு ஏற்ப கணவன், மனைவி சரியாக வளைந்து, நெளிந்து போனால் தான் பயணம் சுகமாக அமையும். இல்லையேல் ஆங்காங்கே வலிகள் ஏற்பட தான் செய்யும். எனவே, உறவின் நலன் கருதி தம்பதியர்கள் சில விஷயங்களை கைவிட வேண்டியது அவசியம்....

இறுதி எச்சரிக்கைகள்
உங்கள் துணை குற்றவாளியும் இல்லை, நீங்கள் நீதிபதியும் இல்லை. எனவே, அவர்கள் தெரியாமல் செய்யும் சில காரியங்களுக்கு உடனே, இறுதி எச்சரிக்கைகள் விடுப்பதை தவிருங்கள். அன்பாக கூறுங்கள், ஒருமுறைக்கு பல முறை கூட எடுத்து கூறுங்கள். எந்த தவறும் இல்லை.

உங்கள் வாழ்க்கை அவர் தான் என்ற எண்ணம் வேண்டும்
தம்பதி இருவருக்குள்ளும், அவரவர் துணை தான் அவர்களது வாழ்க்கை என்ற எண்ணம் எழும்புதல் வேண்டும். இந்த எண்ணம், பெரும்பாலான சண்டைகள் எழாமல் இருக்க உதவும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை ஏற்படுத்தும். உங்கள் துணைக்கு விட்டுக்கொடுக்காமல், வேறு யாருக்காக விட்டுக்கொடுத்து போவீர்கள்???

பொறாமை குணம் வேண்டாம்
சில தம்பதிகளுக்குள், சம்பளம், அறிவுத்திறன், அழகு போன்றவற்றில் கூட தங்களது துணையுடன் ஒப்பிட்டு பார்த்து பொறாமைப்படும் குணம் கொண்டிருப்பார்கள். பொறாமல் என்னும் ஆமை இல்லறதிற்குள் புகுந்தால், சந்தோசம் கழிந்துவிடும். எனவே, பொறாமையை கைவிடுங்கள்!!!

தவறுகளை பட்டியலிடாதீர்கள்
தவறு செய்யாத மனிதர்களே உலகில் இல்லை. எனவே, என்றோ செய்த தவறை, மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பது. உங்கள் மேல், உங்கள் துணைக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்துவிடும். இது, சண்டையிலும், பிரிவிலும் முடிவு பெற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

புரியாத புதிராக இருக்காதீர்கள்
ஓர் நல்ல உறவின் அடித்தளமே நல்ல புரிதல் தான். அது இன்றி இல்வாழ்க்கையில் இன்பம் நிலைக்காது. எனவே, கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் திறந்த புத்தகமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்குள் மட்டும்.

மகிழ்விக்க பழகுங்கள்
உங்கள் துணையை மகிழ்விக்க பழகுங்கள். உங்கள் சோகத்தை அவர்களிடம் அவர்களாக உணரும் வரை வெளிக்காட்டாதீர்கள். உண்மையான அன்பு ஓர் நொடியில் உங்கள் சோகத்தை புரிந்துக்கொள்ளும். பரிசுகள் கொடுத்து மகிழ்ச்சியடைய வையுங்கள். தங்கம், வைரம் தான் சிறந்த பரிசு அல்ல, பத்து ரூபாய்க்கு நீங்கள் வாங்கி தரும் மல்லிகையும், மாலையில் கணவனை மாணவி உபசரிப்பதைவிடவா பெரிய பரிசை நீங்கள் தந்துவிட முடியும்!!!



Click it and Unblock the Notifications