சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்களில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு வேகமாக வயது ஏறி முதுமை வந்துருமாம்

Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையின் பல விவகாரங்கள் குறித்து தனது அனுபவங்களை எழுதியுள்ளார். தன் அறிவை தந்திரமாக பயன்படுத்துவதில் சிறந்த பண்டிதர் என்பதால் அவர் கௌடில்யர் என்று அழைக்கப்படுகிறார். இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்ற விஷயங்களில் சாணக்கியருக்கு நல்ல அனுபவம் உண்டு. சாணக்கியர் எழுதிய நெறிமுறைகள் இன்றும் மனிதர்களுக்கு பல வாழ்க்கை முறைகளை கற்பிக்கிறது. அவற்றை கடைபிடித்தால் மனிதனின் வாழ்க்கை சிரமங்கள் இன்றி சுமூகமாக செல்லும் என்பது பெரியோர்களின் நம்பிக்கை.

Chanakya Niti Worst Habits That Make You Age Faster

சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ள பல அறிவுரைகள் இன்றும் பொருத்தமானவையாகத் திகழ்கின்றன. தனது புலமை, ஞானம் மற்றும் திறன்களால் இந்திய வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த மாபெரும் ஆளுமையான சாணக்கியர், இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சாணக்கிய நீதியை இயற்றினார். மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு எத்தகைய தீய பழக்கவழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து அவர் இதில் விளக்கியுள்ளார். மேலும், ஒரு மனிதன் எவ்வாறு முதுமையை அடைகிறான் என்பதையும், பலர் தங்கள் வயதுக்கு முன்பாகவே முதிர்ந்த தோற்றத்தைப் பெறுவதைப் பற்றியும் அவர் விவரித்துள்ளார். இயல்பான வயதை விட முதிர்ந்த தோற்றம் அல்லது முதுமை அடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அதிகமான சிற்றின்பம்

சாணக்கிய நீதியின்படி, வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு உடல்ரீதியான இன்பம் அல்லது நுகர்வு மிகவும் அவசியமானது. ஏனெனில் அது இல்லாவிட்டால் வாழ்க்கை வறட்சியானதாகிவிடும். திருமணமான தம்பதியினரைப் பொறுத்தவரை, உடல்ரீதியான நெருக்கத்தை இருவருமே அனுபவிப்பது முக்கியம். இது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஆனால், இன்பத்திற்காக காம உணர்வை அளவுக்கு அதிகமாக நாடுபவர்கள் விரைவாக முதுமையடைகிறார்கள். அதேசமயம், காம உணர்வை அடக்கி வைத்துக்கொண்டு எந்தவிதமான உடல் இன்பத்தையும் அனுபவிக்காதவர்களும் மிக விரைவாகவே முதுமையடைகிறார்கள்.

அதிகப்படியான பயணம்

சாணக்கிய நீதியின்படி, தேவையில்லாமல் அதிகம் பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே முதுமை அடைகிறார்கள். முறையான வாழ்க்கை முறை அல்லது அன்றாடப் பழக்கவழக்கங்கள் இல்லாததே இதற்குக் காரணம் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறியுள்ளார். பயணத்தின்போது ஒருவரின் வாழ்க்கை முறை சீராக இருப்பதில்லை. இத்தகைய சூழலில் உடல் பலவீனமடையத் தொடங்கி, அவர்கள் விரைவில் முதுமடைகிறார்கள்.

சிறைதண்டனை

சிறையில் அடைபட்டுக் கிடக்கும் ஒருவர விரைவாக முதுமையடைவார் என்று சாணக்கியர் கூறுகிறார். சிறைவாசத்தின் காரணமாக, ஒருவரால் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படையாக வெளிப்படுத்த முடிவதில்லை, அவர் உள்ளுக்குள்ளேயே பல சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். அங்கு முறையான உணவு கிடைக்காமல் போகலாம், மேலும் வெளியே செல்ல இயலாது என்பதால், அவர்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சோர்வடைந்து விடுவார்கள்.

எதிர்மறை எண்ணங்கள்

சாணக்கிய நீதியின்படி, எப்போதும் எதிர்மறையாகச் சிந்திப்பவர்கள் விரைவில் முதுமையால் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில், இவர்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குப் பதிலாக, எல்லாவற்றிலும் எதிர்மறைத்தன்மையையே கொண்டு வருகிறார்கள். இது அவர்களைச் சுற்றியுள்ள சூழலை மிகவும் கவலைக்குரியதாக மாற்றுகிறது.

போதைப்பழக்கங்கள்

போதைப்பழக்கங்கள் உங்கள் வாழ்க்கையைச் சீரழிக்கின்றன. போதைப்பொருள் பயன்பாடு, சூதாட்டம் மற்றும் ஒழுக்கமற்ற உறவுகள் போன்றவற்றைச் சிதைக்கின்றன. உங்களிடம் இவை இருந்தால், அவற்றை விட்டுவிடுங்கள். இல்லையெனில், உங்கள் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட மரியாதை அனைத்தும் ஒரு நொடியில் இழக்கப்படும். அதன் விளைவாக ஏற்படும் மனச்சோர்வு, அகால முதுமைக்கு வழிவகுக்கிறது.

சோம்பேறித்தனம்

உங்கள் வாழ்க்கையைச் சிறப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்ற விரும்பினால், சோம்பலை மறந்து கடினமாக உழைக்க வேண்டும். சோம்பேறிகளுக்கு நிகழ்காலமோ எதிர்காலமோ இல்லை என்று சாணக்கியர் கூறுகிறார். மேலும் சோம்பல் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

Story first published: Friday, July 3, 2026, 10:32 [IST]
Desktop Bottom Promotion