Latest Updates
-
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
மதுரை ஸ்பெஷல் தக்காளி கார சட்னி ரெசிபி - காரசாரமா இப்படி செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் அதிகமா சாப்பிடுவாங்க -
இந்த விரலில் தங்க மோதிரம் போட்டா அவங்க வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் எப்போதும் போகாதாம் - எந்த விரலில் போடணும்? -
உங்க குதிகால் வறண்டு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? அப்ப இந்த பேக்கை போடுங்க.. -
செட்டிநாடு கவுனி அரிசி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
1 மாம்பழமும், மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. அள்ளும்.. -
இந்த 4 ராசி ஆண்கள் மனைவி மீது உண்மையான அக்கறை செலுத்தும் அன்பான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள நினைவுச்சின்னங்கள் என்னென்ன? அவை எங்கு உள்ளது தெரியுமா? -
புடலங்காயும், வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்தி, சாதத்துக்கு அள்ளும்..
பேச்சுலர் லைஃப் டூ பேஜாரான லைஃப் - திருமணத்திற்கு பின் ஆண்களின் வாழ்க்கை!!!
கட்டுக்கடங்காத காளைகளாக திரிந்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு கால்கட்டுப் போட்டு அடக்குகிறோம் என்று அவர்களது வாழ்க்கையை முடக்கிவிடுவது, வாடிக்கையாகிவிட்டது பெற்றோர்களுக்கு.
கல்யாணம் எல்லாம் பழைய பஞ்சாங்கம் - ஓ காதல் கண்மணி எஃபெக்ட்டு!!
திருமணம் இல்வாழ்கையின் ஆரம்பம் என்று சொன்ன யாரும், அது ஆண்களின் நல்வாழ்க்கையின் முடிவு என்பதை சொல்வதில்லை. நண்பர்களோடு ஊர் சுற்ற முடியாது, நினைத்த நேரத்திற்கு, வெளியே செல்ல முடியாது, எது செய்வதானாலும் புதிதாய் ஒருவரிடம் முன்பே அனுமதி பெற வேண்டும்.
திருமண வாழ்வில் ஆண், பெண்ணுக்கு இடையேயான வயது வரம்பு முக்கியம் - அறிவியல் ரீதியான உண்மைகள்!!!
முப்பது நாள் மோகத்திற்கு பின் பெரும்பாலும் ஆண்களின் மகிழ்ச்சியை மூடிக் வைக்கும் சோகமான மேகமாக தான் திருமணம் இருக்கிறது என்று குமுறும் ஆண்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களோடு ஒத்துப்போகிறது என்றால் பாருங்களேன்...

உடலெடை அதிகரிக்கும்...
திருமணம் ஆகும் முன்பு வரை சிக்ஸ் பேக் வைக்காவிட்டாலும் சிக்கென்று இருந்த ஆண்கள் எல்லாம், திருமணத்திற்கு பிறகு வயிறு மட்டுமல்லாது முகத்திலும் தொப்பை தொங்கும் அளவு புசு, புசு, பூசணிக்காய் போல ஆகிவிடுவார்கள்.

பொறுப்பு
திருமணத்திற்கு முன் எவ்வளவு பெரிய (பிஸ்தா) பருப்பாக இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு ஆண்கள் பொறுப்பாக தான் இருக்க வேண்டும்.

குடும்பஸ்தன்
தனிக்காட்டு ராஜா என்று கெத்து காட்டிக் கொண்டிருந்த ஆண்கள், இனிமேல் குடும்பத்தின் மீது அக்கறை காட்ட வேண்டும், பண்பாக நடந்துக்கொள்ள வேண்டும். சமூகத்தில் நல்ல பெயருடன் திகழ வேண்டும்.

காசு, பணம், துட்டு, மணி!!!
மடை திறந்து தாவும் நதி அலை போல பணத்தை அசால்ட்டாக செலவு செய்தவர்கள் எல்லாம், இனி, குழாய் நீர் போல சிறுக, சிறுக தான் செலவு செய்ய வேண்டும். இல்லையேல் உங்கள் கதி, அதோகதிதான்!!

சுதந்திரம்
பெற்ற தாய் தந்தையிடம் கூட வெளியே சென்று வர அனுமதி பெறாமல் சுற்றி திரிந்து வந்த ஆண் சிங்கங்கள், இனி தந்து பெண் சிங்கத்திடம் அனுமதி வாங்கி தான் ஆக வேண்டும். இல்லாங்காட்டி, இராத்திரி பட்டினி கிடக்க வேண்டியது தான் (சாப்பாடு போடமாட்டாங்க!!!)

இரவு பார்ட்டி
அதிகாலை சூரியன் எட்டிப் பார்க்கும் முன் கூட வெளியே போகலாம். ஆனால், திருமணத்திற்கு பிறகு இரவு நிலவு எட்டிப் பார்த்த பின் வெளியே செல்ல தடா போடப்படும்.

நட்பு வட்டாரம்...
திருமணத்திற்கு பிறகு பெண்களின் கை வளையலை விட சுருங்கி விடும் உங்களது நட்பு வளையம். நினைத்த நேரத்திற்கு அவர்களோடு ஊர் சுற்றுவது எல்லாம் பகல் கனவில் கூட நடக்காது.



Click it and Unblock the Notifications