Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
நிச்சயதார்தத்தின் போது மணமக்களைக் கடுப்படிக்கும் சில விஷயங்கள்!!
ஆயிரம் தடவை போய் சொல்லி திருமணம் நடந்ததில் இருந்து, ஆயிரம் பொய் சொல்லி நடந்த திருமணம் வரை கடந்து வந்து, இன்று ஃபேஸ் புக்கில் அழைப்பிதழ் கொடுக்கும் வரை திருமணம் வளர்ந்திருந்தாலும். சடங்கு சம்பிரதாயங்கள் மட்டும் சிலவன இன்னும் மாறவில்லை.
திருமணத்திற்கு பிறகு ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் சின்ன சின்ன ஆசைகள்!!!
மார்டனில் இருந்து அல்ட்ரா மார்டனாக ஆட்களையே மாற்றிக் கொண்டிருக்கிறது இன்றையக் கலாச்சாரம். பிட்சா, பர்கர்க்கு மாறிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு முன்னே, ஆயிரம் காலத்துப் பயிரைக் கொண்டுவந்து திணித்தால் இந்த காலத்து இளசுகளுக்கு கடுப்படிக்காமல் வேறு என்ன செய்யும்.
திருமணத்திற்கு முன்பு பேச்சுலர் ஆண்கள் விட்டொழிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்!!!
சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்தும் முக்கியம் தான். ஆனால் இன்று, அது எதற்காக செய்யப்பட்டது என்பதை கூட அறியாது தப்பும், தவறுமாக தான் நம்மில் 99% பேர் செய்து வருகிறோம். இதில், நம்ம இளசுகளைக் கடுப்படிக்கும் விஷயங்களைப் பற்றி இனிக் காண்போம்...

காலில் விழுவது
தெரியாமல் செய்யும் தவறுக்கே மன்னிப்புக் கேட்க தயங்குபவர்களை (பெரும்பாலானோர்) மண்டியிட்டு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொன்னால் கடுப்பாகாமல் வேறு என்ன செய்வார்கள். பெரியோர்களின் ஆசி மிகவும் முக்கியமானவை. ஆனால், அதை சிறு வயதில் இருந்து பழக்க தவறியது பெரியவர்களின் குற்றம் தான்.

சந்தனம் பூசுதல்
நிச்சயத்தின் போது சில குடும்பங்களின் சம்பிரதாயத்தின் படி, மணமக்களை உட்கார வைத்து சந்தனம் பூசுவார்கள். அந்த காலத்தில் உண்மையான சந்தனம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றோ முற்றிலும் கலப்படம் செய்யப்பட்ட பொருள்களை தான் பயன்படுத்துகின்றனர். அதை முகத்தில் பூசுவதை மணமக்கள் விரும்புவது இல்லை.

ஆடல், பாடல்
நிச்சயத்தில் நடக்கும் சடங்குகளுக்கு மத்தியில் ஏதோ வேலைக்கு ஆள் எடுப்பது போல, உற்றார் உறவினார்கள் அனைவரும் மணமக்களை சூழ்ந்துகொண்டு, உங்களுக்கு அது தெரியுமா, இது தெரியுமா என்று மொக்கைப் போட்டு சாகடிப்பார்கள்.

சாப்பாட்டில் குறை சொல்வது
ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் போது சாப்பாட்டின் ருசியில் குறை சொல்லலாம். வீட்டில் மனைவியின் ருசியைக் கூட தாலிக் கட்டியதன் உரிமையின் பேரில் குறைக் கூறலாம். ஆனால், வாழ்த்த சென்ற இடத்தில் சாப்பாட்டில் குறைக் கூறுவது எல்லாம் நியாயமா பாஸ்!!!

மற்றவர் பற்றிய பேச்சு
நிச்சயத்திற்கு சென்றால், அன்றைய முக்கியமான நபர்களான மணமக்களை பற்றி பேசாது, அவர்களது உடன் பிறந்தவர்கள் பற்றியும், அவர்களது திருமணம் எப்போது என்பதைப் பற்றியும் பேசி கடுப்படிக்கவே சில ஜீவராசிகள் சொந்த பந்தம் என்ற பெயரில் வந்து செல்லும்.

அடக்க, ஒடுக்கம்
அடக்க, ஒடுக்கம், சபை மரியாதை என்று சொல்லி ஒரு அங்குலம் கூட நகரவிடாமல், மணமக்களை ஒரே இடத்தில மணிக்கணக்காக உட்கார வைத்து நோகடிப்பதை தான் இந்த காலத்து இளசுகள் மிகவும் வெறுக்கின்றனர்.



Click it and Unblock the Notifications











