Just In
- 2 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 5 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 6 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 8 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நிச்சயதார்தத்தின் போது மணமக்களைக் கடுப்படிக்கும் சில விஷயங்கள்!!
ஆயிரம் தடவை போய் சொல்லி திருமணம் நடந்ததில் இருந்து, ஆயிரம் பொய் சொல்லி நடந்த திருமணம் வரை கடந்து வந்து, இன்று ஃபேஸ் புக்கில் அழைப்பிதழ் கொடுக்கும் வரை திருமணம் வளர்ந்திருந்தாலும். சடங்கு சம்பிரதாயங்கள் மட்டும் சிலவன இன்னும் மாறவில்லை.
திருமணத்திற்கு பிறகு ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் சின்ன சின்ன ஆசைகள்!!!
மார்டனில் இருந்து அல்ட்ரா மார்டனாக ஆட்களையே மாற்றிக் கொண்டிருக்கிறது இன்றையக் கலாச்சாரம். பிட்சா, பர்கர்க்கு மாறிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு முன்னே, ஆயிரம் காலத்துப் பயிரைக் கொண்டுவந்து திணித்தால் இந்த காலத்து இளசுகளுக்கு கடுப்படிக்காமல் வேறு என்ன செய்யும்.
திருமணத்திற்கு முன்பு பேச்சுலர் ஆண்கள் விட்டொழிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்!!!
சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்தும் முக்கியம் தான். ஆனால் இன்று, அது எதற்காக செய்யப்பட்டது என்பதை கூட அறியாது தப்பும், தவறுமாக தான் நம்மில் 99% பேர் செய்து வருகிறோம். இதில், நம்ம இளசுகளைக் கடுப்படிக்கும் விஷயங்களைப் பற்றி இனிக் காண்போம்...
காலில் விழுவது
தெரியாமல் செய்யும் தவறுக்கே மன்னிப்புக் கேட்க தயங்குபவர்களை (பெரும்பாலானோர்) மண்டியிட்டு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொன்னால் கடுப்பாகாமல் வேறு என்ன செய்வார்கள். பெரியோர்களின் ஆசி மிகவும் முக்கியமானவை. ஆனால், அதை சிறு வயதில் இருந்து பழக்க தவறியது பெரியவர்களின் குற்றம் தான்.
சந்தனம் பூசுதல்
நிச்சயத்தின் போது சில குடும்பங்களின் சம்பிரதாயத்தின் படி, மணமக்களை உட்கார வைத்து சந்தனம் பூசுவார்கள். அந்த காலத்தில் உண்மையான சந்தனம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றோ முற்றிலும் கலப்படம் செய்யப்பட்ட பொருள்களை தான் பயன்படுத்துகின்றனர். அதை முகத்தில் பூசுவதை மணமக்கள் விரும்புவது இல்லை.
ஆடல், பாடல்
நிச்சயத்தில் நடக்கும் சடங்குகளுக்கு மத்தியில் ஏதோ வேலைக்கு ஆள் எடுப்பது போல, உற்றார் உறவினார்கள் அனைவரும் மணமக்களை சூழ்ந்துகொண்டு, உங்களுக்கு அது தெரியுமா, இது தெரியுமா என்று மொக்கைப் போட்டு சாகடிப்பார்கள்.
சாப்பாட்டில் குறை சொல்வது
ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் போது சாப்பாட்டின் ருசியில் குறை சொல்லலாம். வீட்டில் மனைவியின் ருசியைக் கூட தாலிக் கட்டியதன் உரிமையின் பேரில் குறைக் கூறலாம். ஆனால், வாழ்த்த சென்ற இடத்தில் சாப்பாட்டில் குறைக் கூறுவது எல்லாம் நியாயமா பாஸ்!!!
மற்றவர் பற்றிய பேச்சு
நிச்சயத்திற்கு சென்றால், அன்றைய முக்கியமான நபர்களான மணமக்களை பற்றி பேசாது, அவர்களது உடன் பிறந்தவர்கள் பற்றியும், அவர்களது திருமணம் எப்போது என்பதைப் பற்றியும் பேசி கடுப்படிக்கவே சில ஜீவராசிகள் சொந்த பந்தம் என்ற பெயரில் வந்து செல்லும்.
அடக்க, ஒடுக்கம்
அடக்க, ஒடுக்கம், சபை மரியாதை என்று சொல்லி ஒரு அங்குலம் கூட நகரவிடாமல், மணமக்களை ஒரே இடத்தில மணிக்கணக்காக உட்கார வைத்து நோகடிப்பதை தான் இந்த காலத்து இளசுகள் மிகவும் வெறுக்கின்றனர்.