For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா? இதை எல்லாம் மனசுல வச்சுக்கோங்க!!

By Karthikeyan Manickam
|

எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாக முடிந்து விடக் கூடியவை அல்ல. ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கும். ஆனால் திருமணமான சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பின்னர் தான் பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்கத் துவங்கும். ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி... ஈகோ, கருத்து வேறுபாடு, சுய நலம், முன் கோபம், தனித்துவம் ஆகியவை கபகபவென்று கசிய ஆரம்பிக்கும்! இவற்றையெல்லாம் முன்பே எதிர்பார்த்து, நிலவரத்துக்கு ஏற்றபடி சமாளித்துக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும்.

கூட்டுக் குடும்பம் என்றால், இதுப்போன்ற பிரச்சனைகள் வெடிக்கும் போது, அங்குள்ள பெரியவர்கள் அறிவுரை கூறி அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவார்கள். ஆனால் இப்போதிருக்கும் தனிக் குடித்தனம் என்ற காலச் சூழ்நிலையில் புதுத் தம்பதிகளுக்கு உதவ யாருமே உடன் இருக்க மாட்டார்கள். சுயமாகச் சிந்திக்கவும் அவர்களுக்கு நேரம் போதாது. விளைவு... விவாகரத்து தான்!

இதுப்போன்ற பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்வது? எப்படிச் சமாளிப்பது? திருமண பந்தம் உடையாமலிருப்பது பெரும்பாலும் ஆண்களின் கைகளில் தான் உள்ளது. பிரச்சனைகள் தோன்றும் போது, பெண்கள் எளிதில் சோர்ந்து போவது இயல்பு தான். எனவே, அவற்றை ஆண்கள் தான் சமாளிக்க வேண்டும். இந்தக் கட்டுரையில் கூறப் போகும் சில விஷயங்களை திருமணத்திற்கு முன்பே ஆண்கள் சிந்தித்து வைத்துக் கொண்டால், அவர்கள் வாழ்க்கை அமோகமாக இருக்கும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Indian Men Must Contemplate Before Marriage

If you are a guy reading this, you should definitely contemplate these things before marriage.
Story first published: Saturday, October 25, 2014, 16:14 [IST]
Desktop Bottom Promotion