For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்மூடித்தனமாக நம்பிய ஒருவனுடன் கழிந்த ‘ஓர் இரவு!’

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு அவர்களின் உறவுமுறையில் , அந்த எண்ணத்தில் எத்தகைய மாற்றம் வந்திருக்கிறது என்று பெண்கள் சிலர் தங்கள் அனுபவங்களை விவரிக்கிறார்கள்.

By Volga
|

சிறுவயதிலோ அல்லது தங்கள் வாழ்க்கையில் ஒரு முறை பாலியல் வன்புணர்வுக்கு ஆளானால் உடல் ரீதியாக ஏற்படுகிற மாற்றம், வலியைத் தாண்டி அவர்கள் மனரீதியாக பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பார்கள். அப்படி அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தங்களில் உடலையே வெறுப்பது.

Women explain about their sex life

இந்த உடலால் தான் எனக்கு இந்தப் பிரச்சனை என்று தங்களை தாங்களே வருத்திக் கொள்வது நடக்கும். இந்த மன அழுத்தத்திலிருந்து அவர்களை மீட்கும் பொருட்டு My body Back என்பது பரவலாகி வருகிறது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் நாம் பேசத் தயங்குகிற விஷயமிது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நான் ரசித்த ‘செக்ஸ்’ :

நான் ரசித்த ‘செக்ஸ்’ :

அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்திலும் பாலியல் வன்புணர்வு என்பது மீள முடியாத குற்றம் கிடையாது அதிலிருந்து எளிதாக மீண்டு வரலாம் என்று சொல்லும் பொருட்டு ‘நான் ரசித்த செக்ஸ்' என்று சிலப் பெண்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள் .

அதாவது முதன் முதலாக எப்போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன் அதற்கு பிறகு என்னுடைய உடலை எப்படி நேசிக்கிறேன். என்னுடைய செக்ஸ் ஆர்வம் என்ன என்பது குறித்து அந்தப் பெண்களே பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு, மற்றவர்களுக்கும் எளிதில் மீண்டு வர வழி செய்யும் என்று நம்புகிறார்கள்.

எனக்கு பன்னிரெண்டு வயதான போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்.அதன்பிறகு 14 வயது முதல் அடிக்கடி உறவில் ஈடுபட ஆரம்பித்தேன். காதல், நம்பிக்கை அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இதோ இப்போது எனக்கு 26 வயது இப்போது ஒரு மாதத்தில் மூன்று அல்லது நான்கு முறை உறவில் ஈடுபடுகிறேன்.

முதன் முதலாக செய்யும் போது தான் வலி, வேதனை,பயம் எல்லாம் இருந்தது. இதோடு என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைத்தேன். அதெல்லாம் கிடையாது இதோ இது என்னுடைய உடல் எனக்கு செக்ஸ் தேவையாய் இருக்கிறது அதனால் அதை அனுபவிக்கிறேன்.

நம்பிக்கை :

நம்பிக்கை :

கண்மூடித்தனமாக நம்பிய ஒருவனுடன் ஓர் இரவு கழிந்தது. அந்த இரவிலிருந்து தொடர்ந்து அவன் ஒருவனே எனக்கு தேவையாய் இருந்தான். ஆனால் அவனுக்கு நான் தேவைப்படவில்லை நான் இல்லையென்றாலும் அவனின் தேவையை பூர்த்தி செய்ய பலர் இருந்தார்கள். பிரிந்தோம்.

இரண்டாவதாக....மூன்றாவதாக அடுத்தடுத்து ஆண் நண்பர்கள் மாறினார்கள். நான்காவதாக ஒருவன் வந்தான் நூறு சதவீதம் எனக்கு கம்ஃப்ர்ட்டான உறவு அவனுடன் தான் அமைந்தது. முழு நம்பிக்கையுடன் எங்கள் உறவு இன்னமும் தொடர்கிறது.

பயம் :

பயம் :

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது என் உறவுக்காரர் ஒருவரினால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். அதிலிருந்து அவனைப் பார்த்தாலோ அல்லது அவன் சத்தம் கேட்டாலோ வியர்த்து கொட்டி உடலெல்லாம் நடுங்கும் அளவிற்கு பயம் வந்து விடும்.

பின்னாட்களில் வளர்ந்த பிறகு அந்த சம்பவத்தை நான் மறந்தே போனேன். ஆனால் செக்ஸ் என்ற வார்த்தையை கேட்டாலே இன்னமும் பயம். எந்த ஒளிமறைவு இன்றியும் உங்களிடம் ஒன்றைச் சொல்கிறேன்.எனக்கு உறவில் ஈடுபட பயம். காரணம் என்னை அச்சிறுவயதில் கடுமையாக நடத்திய அவன் தான். இதிலிருந்து நான் மீண்டு வர வேண்டும்.

திருமணம் :

திருமணம் :

எனக்கு 13 வயதில் திருமணம் செய்யப்பட்டது. இப்போது 27 வயது நான்கு குழந்தைள் பிறந்து விட்டார்கள்.இன்றைக்கும் என் கணவர் வருகின்ற வண்டி சத்தம் கேட்டாளே எங்காவது ஓடி ஒளிந்து கொள்ளலாமா என்று தோன்றும். இரவு படுக்கச் செல்லும் போதெல்லாம் ஒருவித நடுக்கத்துடன் தான் செல்வேன்.

காரணம், அவர் படுக்கையறையில் கடைபிடிக்கும் கடுமையான விதிமுறைகள் தான். ஆம் அவருடன் இரவு முழு நிர்வாணமாகத் தான் படுக்க வேண்டும். தினமும் உறவில் ஈடுபட வேண்டும். உறவில் ஈடுபட வில்லையென்றாலும் அவரை திருப்தி படுத்துகிற வகையில் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.

முன்னறையில் நான்கு குழந்தைகளை படுக்க வைத்து விட்டு ஒரு தாயால் எப்படி முழு நிர்வாணமாக படுக்க முடியும்.

செக்ஸ் குறித்த பயமோ அருவருப்போ எனக்கு இல்லை ஆனால் இப்படி கட்டாயப்படுத்துவது தான் எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. கவுன்சிலிங் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

பணியிடத்தில் சந்தித்த பாலியல் தொந்தரவு. இன்று என்னை முழுதாகவே மாற்றியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் என் வாழ்க்கையே மாறிவிட்டிருக்கிறது என்றே சொல்லலாம் கல்லூரி முடிந்ததும் மும்பையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் வேலை.

டீம் மேனஜெர் என்னை காதலிப்பதாக அணுகினார். காதலித்தேன் ஆனால் அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார். அவர் ஆரம்பித்த வைத்த கதை இன்று ரிட்டையர்ட் ஆகிற வயது நெருங்கும் சமயத்திலும் கூட தொடர்கிறது.

முதன் முதலாக உறவில் ஈடுப்பட்ட போது வலியால் துடித்த போதும், வேண்டாம் என்று நிராகரித்த போதும் சட்டென நிறுத்தி எனை ரிலாக்ஸ் செய்வது, உறவில் ஈடுபடுவதற்காக சரியான பொசிசனை சொல்லிக் கொடுப்பது என்று அந்த நேரத்தை ரசிக்கும்படியாக மாற்றினார்.

அவரைத் தவிர வேறு யாரும் எனக்கு தேவைப்பட வில்லை. அவர் அளித்த அந்த பாதுகாப்பு உணர்வு எனக்கு நிறைவாய் இருந்தது. அன்போடு சேர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வும் தேவை.

போர்ன் வீடியோ :

போர்ன் வீடியோ :

பாலியல் வன்புணர்வுக்கு பிறகு நான் உறவில் ஈடுபடுவதை அதிகமாக ரசிக்க ஆரம்பித்து விட்டேன். அதோடு என் இணை சுய இன்பத்தில் ஈடுபடுவதைப் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

நிறைய போர்ன் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

ரேப் :

ரேப் :

எனக்கு 21வயதான போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். அவன் என் நண்பன் தான். பார்ட்டியில்.... போதையில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. பாலியல் வன்கொடுமை என்பது நீங்கள் திட்டமிட்டு நடப்பது கிடையாது. உணர்வு பீறிடும் போது சட்டென நிகழ்ந்து விடும் அந்த சந்தர்ப்பத்தை மனதில் வைத்துக் கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வது மிகவும் முட்டாள்தனமானது.

இன்னும் சொல்லப்போனால் அதனை நான் மருத்துவம் என்று கூட சொல்வேன்.ஆம் அது உங்களை அமைதிப்படுத்தும்.ஹார்மோன் தூண்டுதலால் நடக்கிற இதனை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Women explain about their sex life

Women explain about their sex life
Desktop Bottom Promotion