Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
தம்பதிகள் ஒருவொருக்கொருவர் கூறிக் கொள்ளும் பொதுவான பொய்கள்!!!
ஒரு உறவு எப்போதும் பளிச்சென தெளிவாக இருப்பதில்லை. தம்பதிகளுக்குள் சண்டைகளுக்கும். தவறான புரிதல்களும் அவ்வப்போது நடைபெறும். இதனால் பொய்கள் உருவாகும். அப்படி ஒரு உறவிற்கு மத்தியில் கூறப்படும் பொய்களில், சில பொதுவான பொய்களை மட்டுமே நாங்கள் உங்களுடன் பகிர போகிறோம். உண்மையில் பார்த்தால் இவ்வகையான பொய்கள் நூற்றிற்கும் மேல் உள்ளது.
மோசமான நிலைமையை சரிகட்ட தம்பதிகள் ஒருவொருக்கொருவர் பொய்களை கூறிக் கொள்வர். இந்த பொதுவான பொய்கள் பல நேரங்களில் தீவிர சண்டைகளை ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் பிரிவினையை கூட ஏற்படுத்திவிடும். திருமணத்திற்கு பிறகு, குற்றம் கூறுவதை தவிர்க்க, ஆண்கள் தங்கள் மனைவியிடம் பொய் பேசுவார்கள். உங்களுக்கு பொருந்துகிறதா ஆண் நண்பர்களே?
ஆனால் பெண்களோ, மதிய உணவு அருந்துவதில் தான் ஆண்களிடம் பொய் பேசுகின்றனர். பொதுவாகவே பெண்களுக்கு தனியாக உண்ண பிடிப்பதில்லை. அவர்களுடன் ஆண் துணை இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். இவ்வகையான சூழ்நிலையில், இந்த விருப்பத்தை அவர்களுடைய காதலன் அல்லது கணவன் விரும்ப மாட்டார்கள். அதனால், பெண்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு பொய் தான் - "நான் இன்று தனியாக சாப்பிட்டேன்".
இதை போல, நீங்கள் ஒரு உறவில் இருக்கும் போதும், திருமணம் வாழ்க்கையில் இருக்கும் போதும், ஒருவொருக்கொருவர் பொதுவான சில பொய்களை கூறிக் கொள்வீர்கள். ஆனால் நாங்கள் கூறப்போகும் சில பொய்கள், பொதுவாக பலராலும் கூறப்படுபவையாகும்.

"அந்த பெண்ணை நான் பார்க்கவில்லை"
ஒரு கடைக்கு செல்கையில் அங்கே நீங்கள் முதலில் பார்ப்பது பிற பெண்களை தான் (உங்கள் காதலி/மனைவி உங்கள் கைகளைப் பற்றி கொண்டிருந்தாலும் கூட). இவ்வகை ஈர்ப்புகள் எப்போதும் சாகாது.

"என் அம்மாவுடன் பேசிக்கொண்டு இருந்தேன்"
அவன் போன் எப்போதும் உபயோகத்தில் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக இது உங்களுக்கு கோபத்தை உண்டாக்கும்; முக்கியமாக அவசர சூழ்நிலையில். ஒரு உறவில், ஆண் பெண்ணிடம் கூறும் பொய்களில் இதுவும் பொதுவான ஒன்றாகும்.

"2 சிகரெட் மட்டுமே பிடித்தேன்"
இன்று எத்தனை சிகரெட் பிடித்தாய் என உங்கள் துணையைப் பார்த்து நீங்கள் கேட்கையில் அவன் சிகரெட் பாக்கெட் மொத்தமும் காலியாகத் தான் இருக்கும். எப்போதும் அவன் வாயில் இருந்து குறைவான எண்ணே வரும். மிகவும் பொதுவான பொய்களுள் இதுவும் ஒன்று.

"நாங்கள் வெறும் நண்பர்களே"
ஒரு உறவில் ஒருவொருக்கொருவர் கூறிக் கொள்ளும் மற்றொரு பொதுவான பொய் இது. இன்னொரு நபருடன் தொடர்பு ஏற்படுகையில் கூறப்படும் பொய் இது.

"என் அம்மா இதை விட நன்றாக சமைப்பார்கள்"
இந்த சூழ்நிலை திருமணத்திற்கு பிறகு வருவதாகும். துரதிர்ஷ்டவசமாக ஆண்கள் நன்றாக சமைக்காததையும் வேண்டுமானாலும் உண்ணுவார்கள்.

"தனியாக சாப்பிட்டேன்"
ஒரு உறவில் இருக்கும் பெண் கூறும் பொதுவான பொய் இது. ஏற்கனவே கூறியதை போல், தனியாக உண்ணுவதை பெண்கள் விரும்ப மாட்டார்கள்.

“உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்"
பெண்களுக்கு திருமணமும், அதற்கு பிறகான வாழ்க்கை பற்றிய எண்ணங்களின் மீது நாட்டம் அதிகம். அது பொய்யான வாக்குறுதியாக இருந்தாலும் கூட, ஒரு உறவில் கூறப்படும் பொதுவான பொய்யாகும் இது.

"குழந்தைகள் பெற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ்வோம்"
திருமணம் என்பதை பற்றி பேசிய பிறகு, பெண்ணிடம் ஆண்கள் கூறும் இரண்டாவது பொதுவான பொய் இதுவாகும்.

"இல்லை, நீ குண்டாக இல்லை"
பெண்களுக்கு பாராட்டப்படுவது ரொம்பவும் பிடிக்கும். அதனால் தங்கள் வாயால் பொய் கூறுவதை ஆண்கள் சரியாக செய்வார்கள். ஒரு உறவில் பெண்ணிடம் ஆண் கூறும் மோசமான பொய்யாகும் இது.

"காலையில் தான் குளித்தேன்"
தண்ணீரும் குளியலும் யாருக்கு தான் பிடிக்காது. இருப்பினும் ஆண்கள் இதற்கு விதிவிலக்கு! குளியல் என்றாலே அவர்களுக்கு ஒரு வெறுக்கத்தக்க செயலாகும். அதனை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்.

"2 நிமிடங்களில் வீட்டிற்கு வந்து விடுவேன்"
ஆண்களின் அகராதியில் இரண்டு நிமிடங்கள் என்று எதுவுமே இல்லை. ஆண்கள் பொதுவாக குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு வருவதில்லை. காரணம் அவர்கள் அதற்கும் மேல் தாமதமாக தான் வருவார்கள்.

"எனக்கு மேக்-அப் பிடிக்காது"
தங்களின் தழும்புகளை மறைக்க பெண்கள் மேக்-அப் போட விரும்புவார்கள். ஆனால் மேக்-அப் போட பிடிக்காது என சாதிப்பார்கள். தம்பதிகளுக்கு இடையே கூறப்படும் பொதுவான பொய்களில் இதுவும் ஒன்றாகும்.

"குடித்தேனா??? நான் அலுவலகத்தில் இருந்தேன்"
குடித்து விட்டு மாறிய பிறகு ஆண்கள் கூறும் பொதுவான பொய் இது. அதிலும் தான் பாருக்கு செல்லவில்லை என்றும், அலுவலகத்தில் தான் இருந்தேன் என்றும் அடித்து கூறுவார்கள்.



Click it and Unblock the Notifications